Pages

வண்ண வண்ண கோலங்கள் - III

இவ்வளவு பெரிய தொடரா(!!) வரும்னு எதிர்பார்க்கலை...ம்ம்ம்..!

வண்ண வண்ண கோலங்கள் - I

வண்ண வண்ண கோலங்கள் - II


சன் தொலைக்காட்சியில் 'தில்லான மோகனாம்பாள்' பார்த்துட்டு எனக்கு தோன்றியதை எழுத அதே அலைவரிசையில் அதே திரைப்படத்தை பற்றி வந்தது 'மங்கை'யின் பதிவு. அட என்று பார்க்க.... அவருடைய மற்ற பதிவுகள் மிகுந்த சமூக அக்கறையுடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தகூடியதாக இருக்க அதுவும் கூகுள் ரீடரில் சேர்ந்தது.

Ghost Rider என்ற ஆங்கில படம் என்ற நினைவு. தலைப்பைவைத்தே படம் பார்க்கலாமா வேண்டாமா என்று எளிதாக தீர்மானிக்ககூடிய படங்களில், பார்க்க வேண்டாம் என்று ஒதுக்கிய படம்தான். ஆனால் அந்த படத்தைப் பார்த்துட்டு அதற்கு விறு விறுப்பா விமர்சனம் எழுத முடியுமா...படத்தைவிட அவருடைய விமர்சனம் நன்றாக இருந்தது. அதுதான் "ஜி.ரா". அதுதான் அவருடைய எழுத்துகளில் முதல் அறிமுகம்.

முதல் முதலில் கிறுக்க ஆரம்பித்த பொழுது சில தவறுகளை சுட்டிக்காட்டியது ஜெஸிலா. அதற்குமுன்னே அவர் பதிவு அறிமுகம் என்றாலும் "நன்றி" சொல்ல வைத்தது அவர் சுட்டிகாட்டியவைகள்.

'லேட்டா தெரிந்தாலும் லேட்டஸ்டா' (கூகுள்) ரீடரில் சேர்ந்த பதிவுகள்:

செப்புப்பட்டயம் -- சோழர்கள் (!!)

தருமி -- எளிமை - அனுபவம் - ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சி (இந்த வயதிலும் !!)

பூக்கிரி -- ஜாலி

வவ்வால் -- அவர் தலைப்புமாதிரிதான்..

CAP டெக்னாலஜிதான என்று எளிதாக ஒதுக்கிதள்ளமுடியாதது... Snapjudgement. மனுசன் எப்படிதான் இவ்வளவு விசயங்களை சேகரிக்கனும்னு ஆவலும், நேரமும் கிடைக்குதோ.. பெரிய விசயம்! பயங்கரமான சேகரிப்பு... அவருடைய e-tamil சமீபத்தில்தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பட்டாசு பாலு மாதிரி.... பாஸ்டன் பாலா! என்ன காலுல சரவெடி கட்டிட்டு மிரட்டலை...;)

அவர் பொண்ணுகிட்ட ஒரு கேள்வி: 'அப்பா தூங்கிறத பாத்திருக்கியா?'
அவரிடம் ஒரு கேள்வி: 'நீங்க தனிஆள் இல்லையா?'

விரும்பி படிக்கும்.. ஆனால் மறுமொழி போடும் அளவிற்கு 'வளரவில்லை' என்ற காரணத்தினால் கடந்து செல்லும் சில நண்பர்கள் தமிழ்நதி, டிசே தமிழன், அய்யனார் வரிசையில் இப்பொழுது புதுசாக விமலா !

இப்போதைக்கு இது போதும்....

சுபம்!!

பதித்த நாள்: டிசம்பர் 23, 2007

7 மறுமொழிகள்:

  1. said...

    வலைச்சரத்துல எழுதுற மாதிரி தொகுத்து எழுதியிருக்கீங்க. தொகுப்பு எளிமையா இருக்குது.

  2. said...

    அய்யனாரை திரும்பவும் எழுதியிருக்கீங்களோ? முன்னர் ஒருமுறை பார்த்த ஞாபகம். :-)

  3. said...

    தமிழ் வலைப்பூ அறிமுகம் ஆகி ஒரு வருடம் ஆகப் போகுது.... கொஞ்சம் 'திரும்பிப் பார்த்ததன்' விளைவு!

    தவறாம வந்து 'ஹலோ' சொல்றீங்களே... அதுக்கு நன்றி ;)

  4. said...

    haiii Nanum irukeanea...Nandri...

    kaaTTaaRu sonna maathiri simple..

  5. said...

    வாங்க, மங்கை! நன்றி!!

  6. said...

    தென்றல்,

    //வவ்வால் -- அவர் தலைப்புமாதிரிதான்..//

    நன்றி என்னோடப்பேரை எந்த அர்த்தத்தில் போட்டிங்களோ தெரியாது போட்டு இருக்கிங்க!

    உங்கள் பதிவைப்படிக்கும் போதே நீங்கள் ஒரு ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு நிச்சயமாகத்தெரியும்(சாட்டிங்கில் பெண் பேர்களை பார்த்து ஏமாறும் பதிவர்கள் வேண்டுமானால் உங்களைப்பெண் என நினைத்து இருக்கலாம்)

    பொருளாதாரம் பத்திலாம் எழுதும் அளவுக்கு பெண்களுக்கு திறமை பத்தாதுனு சொல்லவில்லை , பொறுமை பத்தாது! அதனாலேயே நீங்கள் ஆண் தான் என்பது எனது முதல் எண்ணம்!(இதுக்காக என்னை கும்ம ஒரு கூட்டமே வருமே)

    ஒன்று மட்டும் புரியவில்லை, என்ப்பதிவில் என்ன அப்படி "வவ்வால் தனம்" பார்த்திங்க! எனக்கு தெரியாது அதான் சும்மா ஒரு ஆர்வத்துல கேட்கிறேன்!

  7. said...

    //நன்றி என்னோடப்பேரை எந்த அர்த்தத்தில் போட்டிங்களோ தெரியாது போட்டு இருக்கிங்க !//

    வாங்க, வவ்வால்! நான் (விரும்பி) படிக்கின்ற வலைப்பூ. அதான் குறிப்பிட்டேன்.

    ஒரு சந்தேகம்.... மறுபடியும் எப்ப கவிதை எழுதுவீங்க? ;)

    //உங்கள் பதிவைப்படிக்கும் போதே நீங்கள் ஒரு ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு நிச்சயமாகத்தெரியும்.//

    Profileலேயே போட்டுருக்கேனே! பலமுறை என் பதிவிலேயும் குறிப்பிட்டுள்ளேன்.

    //(சாட்டிங்கில் பெண் பேர்களை பார்த்து ஏமாறும் பதிவர்கள் வேண்டுமானால் உங்களைப்பெண் என நினைத்து இருக்கலாம்)//

    அப்படி இதுவரை எந்த அனுபவமும் இல்லை... ;(

    //பொருளாதாரம் பத்திலாம் எழுதும் அளவுக்கு பெண்களுக்கு திறமை பத்தாதுனு சொல்லவில்லை , பொறுமை பத்தாது! அதனாலேயே நீங்கள் ஆண் தான் என்பது எனது முதல் எண்ணம்!(இதுக்காக என்னை கும்ம ஒரு கூட்டமே வருமே )//

    ஏங்க CNBC, NDTV Profitலாம் பாக்கிறதுண்டா...?!!


    //ஒன்று மட்டும் புரியவில்லை, என்ப்பதிவில் என்ன அப்படி "வவ்வால் தனம் " பார்த்திங்க! எனக்கு தெரியாது அதான் சும்மா ஒரு ஆர்வத்துல கேட்கிறேன்!//

    'வவ்வால் தனம்' .. ம்ம்ம்ம்... நான் அப்படி எங்கேயுமே சொல்லையே! உங்க பதிவில அப்படி பார்த்ததா நினைவில்லை..

    ஆனா (சமீபத்தில்) சில பதிவில் நீங்கள் போடுகிற பின்னூட்டங்கள்தான் அந்த 'வவ்வால் தன' மோ?