Pages

'தன்மத்ரா' [Thanmathra]

'வாய்ப்பு கிடைத்தால், 'தன்மத்ரா' [Thanmathra] -கிற மலையாள படம் பாரு' நண்பன் ஒருவர் சொல்ல, சமீபத்தில் இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இயக்குநர், Blessy..! சிறு வயசு-ஆம்..!! கதாநாயகன் - மோகன்லால்.

இப்படி ஒரு அழுத்தமான திரைக்கதை வைத்து மிக நேர்த்தியாக வடிக்க முடியும் என்பதைப் பார்த்த பொழுது ஆச்சரியமாகதான் இருந்தது.[மலையாளத்தில் மட்டும் எப்படி இது போல ஆட்களாம் வர்றாங்களோ? ]

2005-ல இந்தப் படத்திற்கு 5 கேரள விருதுகள் - சிறந்த படம், நடிகர், இயக்குநர், திரைக்கதை மற்றும் அறிமுக நடிகர் அர்ஜீன் லால்.

ஹ....ய்.... இது திரை விமர்சனம் இல்லைப்பா.... ஆ.....மா...ம்... ;)

இந்தப் படத்தின் நாயகனுக்கு அல்செய்மர்ஸ் (Alzheimer's) நோய்-னு தெரிய வருது. நான் இதுவரைக்கும், இந்த நோய் வயதானவர்களுக்கும் அதுவும் நம்ம மக்களுக்குலாம் வராது-னு நினைத்திருந்தேன்.

சமீபத்தில் இந்த நோயை பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன். அல்செய்மர்ஸ் (Alzheimer's) நோய் பற்றிய தவறான புரிதலும் சில உண்மைகளும் தெரிந்தது.


முதலில் அல்செய்மர்ஸ் நோய்-னா என்ன? மூளையை பாதிக்கும் இந்த நோய் ஞாபக மறதில் ஆரம்பித்து அவர்களுடைய தினசரி வாழ்க்கையையே பாதிக்கும். இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயல்ல... யாரையும் பாதிக்கலாம்.

அமெரிக்காவில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 5 மில்லியன் பேராம். இதில் 65 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம். இந்த நோய் 30 வயதுள்ளவர்களையும் பாதிக்கும் என்பது அதிர்ச்சி தகவல்.

'இந்த நோய் அதிகமான நபர்களுக்குதான் இல்லையே. எங்கேயோ.... எப்பதாவதுதான கேள்விபட்டதுண்டு.' அப்படி நினைச்சிங்கனா அது உண்மையில்லை. மார்பக புற்று நோய் மற்றும் prostate புற்றுநோயை விட இநத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ரீகன், முன்னாள் இங்கிலாந்து பிரதம மந்திரி ஜேம்ஸ் வில்சன்...('தன்மத்ரா'-வுல மோகன்லால் !!) இப்படி பிரபலமானவர்களும் பாதிக்கப்பட்ட பட்டியலில் உண்டு.

அலுமினிய பாத்திரங்களினால் சமைத்தல், கோக், பெப்சி போன்ற (விஷக் கொல்லி !) குளிர் பானங்களை அலுமினிய கேன்களில் குடிப்பதால் வருகிறது என்று நம்பினார்கள். ஆனால், அலுமினியத்திற்கும் அல்செய்மர்ஸ்-கும் எந்த சம்பந்தமுல் இல்லை என்று சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள்.

சரி...'ஞாபக மறதியை மட்டும்தான் பாதிக்கும். இது ஆளை கொல்லும் நோயல்ல-யா?' னா..... கொடுமையான, ஆட்களை கொல்லும் நோயில் இது ஏழாவது இடத்தில் உள்ளது. முதலில் இது மூளையின் செல்களை பாதிக்கும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் எல்லா செல்களையும் பாதித்து உடம்பையே செயல் இழக்க செய்யும்.

அப்படினா... ஞாபக மறதியை தவிர வேறெந்த அறிகுறியும் இருக்காதா..... ? இந்த நோய் தீவிரமடைந்தால், மற்றவர்களின் உதவியில்லாமல் இவர்களால் நடக்க இயலாது. சிரிக்கவும், தலை தூக்கி பேசவுமே மிகவும் கஷ்டப்படுவார்கள்.

இந்த நோய் எதனால வருது... .. மருத்துவர்களால் இந்த நோயை கண்டறியவே முடியுதாமாமே? இந்த நோய் யாருக்கு எதனால வருது-னு இது வரைக்கும் கண்டு பிடிக்கலை-ங்கிறது உண்மைதான். சமீப காலத்தில் இந்த நோயை பற்றிய பல் வேறு ஆராய்ச்சி, படிப்பின் வழியாக நோயாளியை பல்வேறு பரிசோதனையின் மூலம் மருத்துவர்கள் எளிதாக கண்டறிய முடியும்-கிறது ஒரு ஆறுதலான செய்தி.

இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைபடி மருந்து சாப்பிட்டால் இந்த நோயின் தீவிர தன்மையை குறைக்கலாம். இதற்கான மருத்துவச் செலவு ரொம்பவே அதிகம்.

குணப்படுத்ததான் வழியே இல்ல... வராமா தடுக்க முடியமா? ம்ம்ம்... தினமும் உடற்பயிற்சி(?), கொழுப்புச் சத்து குறைவான (low-fat diet) சாப்பாடு, நம்ம சமைக்கிற உணவுல மஞ்சள் சேர்த்துகிறது..... இப்படி மொத்ததில 'நம்ம ஊரு' சாப்பாடு சாப்பிட்டா இதை தடுக்கலாம் போல.....




மேலும் விரிவான விவரங்களுக்கு:
http://www.actionalc.org & http://www.alzfdn.org/

கனவே கலையாதே !

2008ல் நடக்க இருக்கிற ஜனாதிபதிக்கான தேர்தலின் முதல் விவாத களம்/மேடை போன மாதம், தென் கரோலினா (South Carolina) ல் நடந்தது. ஜனநாயக கட்சியில் (Democratic) இருந்து பத்து பேர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக இந்த விவாததில் கலந்து கொண்டனர்.


அதே போல, போன வாரம் கலிபோர்னியாவில் குடியரசு (Republican) கட்சியிலிருந்து பத்து பேர் அவர்களுடைய எண்ணங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இன்னும் இது போல பல சுற்றுகள் இருக்குது.

முதலில் நடந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பிரைன் வில்லியம்ஸ் (Brian Williams - NBC News Anchor). ரொம்ப நிதானமா, அருமையா வருங்கால ஜனாதிபதிகிட்ட மக்கள் கேட்கணும் நினைச்ச கேள்விகளை கேட்டார். 'ஒரு காலத்தில' ரவி பெர்னாட் எப்படி கேள்வி கேட்பாரு.. இப்ப CNN-IBN ல Devil's Advocate நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிற கரண் (Karan Thapar) மாதிரி ........

பெரிதும் எதிர்பார்க்ககூடிய, ஹிலாரி கிளிண்டன், பராக் ஓபாமா (Obama) சுதந்திர கட்சியை சேர்ந்தவங்க...அது சரி.. அங்க யாரு வந்தா நமக்கென்ன..

அந்த நிகழ்ச்சியை பார்த்தப்ப, நம்ம ஊருலேயேயும் இது மாதிரி ஒரு வழக்கத்தை கொண்டு வந்தா எப்படி இருக்கும்? ஜெயலலிதா, கலைஞர், வைகோ, ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் (!) கிருஷ்ணசாமி, விஜயகாந்த் -னு எல்லாரும் ஒரே மேடையில வந்து ஞாநி அல்லது சுதாங்கன் மாதிரியான ஒருவரை அந்த நிகழ்ச்சியை நடத்த சொன்னா.....எப்படி பதில் சொல்வாங்க...?! அவுங்களுக்கே தெரியாதோ?

1.தமிழ் செம்மொழி, படத்துக்கு தமிழ் பேர வச்சா வரி விலக்கு-னு அபத்தமா தமிழை வளர்க்கிறோம்-னு சொல்லாமா வருங்கால தலைமுறைக்கு தமிழை மிகப்பெரிய தகவல் களஞ்சியமா 'விக்கிபசங்க மாதிரி'.... ச்..சே... 'விக்கிபிடியா' மாதிரி ஏதாவது பண்ணறதா எண்ணம் இருக்கா?

2. இலங்கையில இருக்கிற நம்ம சகோதர, சகோதரிகளுக்கு உதவுணும்-னு அக்கறை உண்டா? அப்படின்னா, இதில அக்கறையிருக்கவங்களைலாம் (நெடுமாறன் அய்யா, கனிமொழி, வைகோ, திருமா, .........) ஒரு அணி-யை உருவாக்கி மத்திய அரசுக்கு 'உண்மையான நிலவரத்தை' எடுத்து சொல்லலாமே?

3. காவிரி பிரச்சனையில ......அட பக்கத்து மாநிலத்த விடுங்க.... முதல நமக்குள்ள ஒற்றுமை இருக்கா? அதுக்கு என்ன பண்ணலாம்?

4. இரண்டு தடவை முதல்வராயிட்டா மத்தவங்களுக்கு வழி விடலாமே? ஏதோ உங்களைவிட்டா தமிழ் நாட்டை யாராலும் 'முன்னேத்த' முடியாதுகிற எண்ணம் உங்களுக்கு ஏன் வந்தது-னு தெரிஞ்சிகிலாமா?

5. இலவசம்-னு ஏதேதோ குடுக்கமா, கல்வியை குடுக்க வழி செய்வீங்களா?

6. 'உங்க குடும்பத்துக்காகதான் தமிழ் நாடு' கிறதை எண்ணத்தை விட்டுட்டு, தமிழ்நாட்டை எப்ப உங்க குடும்பமா பாக்க போறீங்க?

கடைசியா ஒரு சின்ன வேண்டுகோள்...

"இரத்ததின் ரத்தமே, என் உயிரின் மேலான உடன்பிறப்பே, தன்மானச்(?) சிங்கங்களே/தொண்டர்களே, என் ஒரு துளி வியர்வைக்கு தங்க காசு குடித்த தமிழ் மண்ணே" இப்படிபட்ட வார்த்தைகளை பயன்படுத்தாமா நடிக்க ....இல்ல...... பயன்படுத்தாம பேச முடியுமா?

இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக....

(தமிழ் வலைதளத்திற்கு புதியவன் என்ற முறையில் இந்த பதிவு.....)





(New Jersey is called the Garden State! அதுக்குதான் மேல இருக்கிற படம் ஒரு சின்ன உதாரணம்)

இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக.... -னு சொல்லிட்டு 'அடிதடி' , 'கிழக்கு கடற்கரை சாலை' - னு படம் போடுவாங்க பாருங்க... (இவுனுங்க தொல்லை தமிழ் மக்களாலேயே தாங்க முடியல... இதில மத்தவுங்க வேற பார்ககணும் மாக்கும்....

ஏன் பாலாஜி.... உங்க டெவில் ஷோவுக்கு இந்த மாதிரி தொலைக்காட்சிலாம் கூப்பிட மாட்டீங்களா?)

..... ஆனா எப்பயாவது 'விருமாண்டி, பாரதி'-னு போட்டா எப்படி இருக்கும்..... அது மாதிரி.....

உலக (தமிழ்) பதிவர் சந்திப்பில் முதன் முறையாக ......

  • அடுக்கு மாடு கட்டிடத்தில் ஒரு குளு குளு அறையில் பாப்-கார்ன், சிப்ஸ், க்ரீம் பிஸ்கெட்டுகள், வீ.எஸ்.கே. அய்யாவின் மைசூர்பாகு (டீச்சர் கவனிக்க! ) .... இப்படி ஏராள நொறுக்கு தீனிகள் .... [எல்லாரும் இதேயே முத சொல்லுங்க-னு சில பேர் முணு முணுக்கிறது ... கேட்குது....] வயிற்றுக்கு மட்டும் அல்ல... செவிக்கு இளையராஜாவின் திருவாசகம் சிடி (நன்றி, அய்யா) !

  • பெரிய திரையில் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம்..... (நன்றி, கொத்ஸ்! )

  • கொத்ஸ் பவர் பாயிண்ட் (Power Point)ல் கலக்குவதற்கு தாயாராக இருக்க, அவருக்கு உதவியாக கண்ணபிரான் ரவி ... எல்லாருக்கும் 'மனசு' மட்டும் இல்ல... வயிறு-ம் நிறைஞ்சிருக்கா-னு 'நல்லா' கவனிச்சாங்க...[எங்கப்பா.. மஞ்சள் சட்டையுமா... கண்ணாடியுமா யாரையும் காணோமே-னு பார்த்தா... 'தல' மாதிரி கொத்ஸ்..]

  • பாலா, சாகரன் நினைவு மலரை கொடுக்க, அனைவரையும் அறியாமல்... அந்த அறையில் நிசப்தம் சில நிமிடங்களுக்கு.... [மலரை வெளியிட்ட சென்னைப்பபட்டினம் நண்பர்களுக்கு நன்றிகள் பல!]

  • பத்மா அரவிந்த் அவர்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களின் தெரிந்து கொள்ள வேண்டி பயனுள்ள தகவல்கள் சொன்னார். அவர் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதினால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

  • குழந்தைகளிக்கான பாடல்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களை ஒலி வடிவத்திலும் இதை மேலும் பெரிய அளவில் செய்ய ஆர்வமும், ஆவலும் ரங்கா மற்றும் அவர் துணைவியார் ஜெயஸ்ரீ அவர்களிடம் இருந்தது. (வாழ்த்துக்கள் !).

  • ஜெயஸ்ரீ அவர்கள் குழந்தை நலன் பற்றி குறிப்பிடும் பொழுது அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வான கண்ணன் வந்தான் குறிப்பிட்டார். [மனதை கலக்கியது... அவர்களின் நம்பிக்கை நமக்கு வியப்பளித்தது. குடும்பத்தினருக்கு நமது பிராத்தனைகள்!]

  • கொத்ஸ், தமிழில் அறிவியல் சம்பந்தப்பட்ட தேடுதல் முயற்சியின் முதல் (வெற்றி) படியாக விக்கிப்பசங்க பற்றியும் ... இரண்டு, மூன்று, நான்கு.... வது படிகளாக தமிழ் விக்கிப்பீடியாவை மிகப் பெரும் தகவற் களஞ்சியமாக உருவாக்க நமது பங்களிப்பு பற்றியும் குறிப்பிட்டார். (நம் தலைமுறைகளுக்கு நம்மாளான ஒரு (சிறிய) பங்களிப்பு. மிக நல்ல ஆரம்பமாக அமையும்)

  • மாணவர்களுக்கு பதிவுலகம் சார்பாக என்ன செய்யலாம்-னு பேச்சு வந்தப்ப வெட்டிப்பயலின் சாப்ட்வேர் இன்ஜினீயர் ஆகலாம் வாங்க மற்றும் செல்வனின் "அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க வேண்டுமா?" போன்ற பல பதிவுகள் வந்தால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

  • இந்தக் கருத்துக்களை மாணவர்களுக்கு கொண்டு செல்ல கண்ணபிரான் ரவி சொன்னவைகள் முக்கியமானது. குறிப்பாக நமது கல்லூரி அலுமினி (Alumini)யை தொடர்பு கொள்ளுதல், கல்லூரி அறிவிப்புப் பலகைகள் மூலமாக தகவல் தெரிவித்தல்....

  • நெய்வேலி விச்சு கில்கிரிஸ்ட் (Gilchrist) மாதிரி 'அடிச்சி' ஆடா, இப்பொழுது பதிவுலக வாசகராக இருக்கும் சம்பத் விரைவில் பதிவு எழுதத் துவங்கப் போவதாகச் சொல்ல (விதி யாரை விட்டது ..?!)..... அவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

  • உலக (தமிழ்) பதிவர் சந்திப்பில் முதன் முறையாக...... பறந்து வந்து கலந்து கொண்ட வீ.எஸ்.கே. அய்யா ... அவர் தொடரைப் போல சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது.

  • எப்பொழுதும் புன்னகையுடன் தமிழ் சசி.....

  • திடீரென்று சில பேர் கேமரா எடுத்து 'கிளிக்' செய்ய, 'இட்லி வடை இவர்தான்.....இல்ல..இல்ல அவர்தான்' என்று சில நிமிடங்கள் சல.... சலப்பு....! அப்புறம் 'அவர்கள்' .... 'நான் அவனில்லை' னு சொன்னதுக்கப்புறம் தான் இதில ஏதும் 'தில்லு முல்லு' இல்லனு தெரிய வந்தது.

  • தொலைபேசி-ல 'புலி..புலி' -னு எல்லாரும் 'கதைக்க' எனக்கு கொஞ்சம் பயமாகதான் இருந்தது.. அப்புறம் பார்த்தா... இது 'பாசக்கார புலி' யாம்..!

ம்ம்ம்... கொத்தனாரும், கண்ணபிரானும் அனைவரையும் சரவணபவனக்கு அழைக்க.....சரவணபவனல 'அதலாம்' கிடைக்காதுப்பா-னு பாலா (மனசில) நினைச்சுட்டு.... 'உடனே கிளம்பிறோம்'-னு சொல்ல..... இப்படியாக உலக (தமிழ்) பதிவர் சந்திப்பு இனிதே நிறைவுற்றது!


பி.கு: நியூ ஜெர்சிக்கு போறப்பவும் சரி, திரும்பி வர்றப்பவும் சரி.... ஜேம்ஸ்பாண்டின் காரின் வேகத்திற்கு இணையாக பாஸ்டன் பாலாவின் கார். காரின் வேகத்துக்கு போட்டியாக பாலாஜி (வெட்டிப்பயலி) ன் பேச்சு. அவருடைய எழுத்தைப்போலவே அவருடைய பேச்சில் நக்கலும், நையாண்டியும்...... அங்கங்கே பகுத்தறிவு, கண்ணன் - கர்ணன் மாதிரியான தூறல்களும் காரில் பயணம் செய்த களைப்பே தெரியலகிறது உண்மைதான்!