Pages

வாரணம் ஆயிரம்

'வாரணம் ஆயிரம் பார்க்க சூர்யாவும் வரான்'னு தெரிந்தவுடன், (வீட்டின்) தானயத் தலைவி, 'வாரணம் ஆயிரம் போலாமா?'னு கேட்க, வேண்டாம்னு சொன்னாலும் கேக்க போறதில்ல.

தியேட்டரில் ஏகப்பட்ட கூட்டம். 'என்னைப்போல'  மனைவிக்காக சூர்யாவை பார்க்க வந்தவர்கள் ரொம்ப பேர் போல..!

'ஜோ' மிஸ்ஸிங்!

படத்தோட தலைப்பு (மட்டும்தான்) தமிழ்! மத்தபடி, படத்தில வர தமிழ் வசனங்கள் கம்மி தான்!

வழக்கம்போல படம் வெளிவந்த இரண்டு மணி நேரத்திலலேயே  வலைப்பூவில், இணையத்தில்,  டிவிட்டரில்னு படத்தை நம்ம மக்கள் அலசி ஆராய்ச்சிட்டாங்க! என் பங்குக்கு ஒரு 10 டாலர்.........இல்ல 2 சென்ட்!

வழக்கமா தமிழ் சினிமாக்குன்னு இருக்குற பார்முலாதான்!
கல்லூரி கலாட்டா...
ஒரு பாட்டிலயே  வீட்டை கட்டி, கதாநாயகன் பெரிய ஆளாகிறது...
காதலிய தேடி கிளம்புறது ...

இப்படி ஒரு பட்டியல் போடலாம். ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் சுதா ரகுநாதன் கச்சேரிக்கு போக, இதுல அட்டகாசமான ஒரு பாட்டு!!

'ஆஹா....சூப்பர்!!'னு சொல்ல தோணவில்லை என்றாலும் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

சில நேரங்களில், படத்தைவிட (சில) விமர்சனங்கள் அருமையாக இருக்கு!
உதாரணத்திற்கு:

"சாத்தான்"குளத்து வேதம்
தனிமையின் இசை
ஜெஸிலாவின் கிறுக்கல்கள்
செப்புப்பட்டயம்


பி.கு; விகடன் ப்ளாக்குல பார்த்துதான் விமர்சனம் எழுதுறாங்களானு சந்தேகமா இருக்கு. மார்க்கு மட்டும் பரிசு குடுக்காம பேசாம வாசகர்களுக்குகிட்டேயே விமர்சனம் எழுத சொல்லி பரிசு அறிவிக்கலாம்.'விமர்சன குழு'  எழுதுறதை விட சிறப்பாவே இருக்கும்!

நவம்பர் 21, 2008

போகிற போக்கில்...

பரவாயில்லை..'இந்த தடவையும்' தேர்தல் நேரத்தில ஊருல இருக்கோம்...ஓட்டு போடலாம்னு ஒரு நினைப்பு இருந்தது.
'நாம போற நேரத்தில பிரச்சாரம் சூடு பிடிச்சிருக்கும். நம்ம ஆளுங்க பட்டைய கிளப்பிகிட்டு இருப்பாங்கனு' போனா.......தேர்தலுக்கான எந்த அறிகுறியும் இல்லாம 'வழக்கம் போல்' இருந்தது நம்ம ஊரு.

அட...! ஒரு பேனர் இல்லை....சுவர்ல விளம்பரம் இல்லை...மைக் சத்தம் இல்லை....எங்க ஊருல யாரு நிக்கிறாங்கனே பத்திரிக்கையில பார்த்துதான் தெரிஞ்கிட வேண்டியதா போச்சி! வாழ்க தேர்தல் கமிசன்!!

கடைசி வரைக்கும் யாருக்கு ஓட்டு போடுறதுனு dilema..
பாண்டியராஜனுக்கா....வை.கோவுக்கா னு?

ஒரு வழியா வை.கோவுக்குனு முடிவு பண்ணி காலையிலேயே பூத்துக்கு போனா, listல நம்ம பேரு இல்ல.
வாழ்க தேர்தல் கமிசன்!!

பி.கு: 1. என்னைப் பொறுத்த வரையில், வை.கோ தோற்றது ஏமாற்றம்தான்.
பேசின வரைக்கும், வை.கோ மேல் இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. கைப்புள்ள பாணில நம்மகிட்ட திருப்பி கேக்குறாங்க, 'இன்னுமா அவரை நம்பிகிட்டு இருக்கீங்க!!'...

2. தி.மு.க./காங்கிரஸ் தலைக்கு 300ரூபாய் குடுத்தது வீண் போகலை!