Pages

எதிரும், புதிரும்

எஸ். குருமூர்த்தி துக்ளக், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதி கொண்டிருக்கும் பொழுதே படித்ததுண்டு. RSS பற்று அதிகம் இருந்தாலும், தேசப்பற்று, பொருளாதரக் கட்டுரைகளால் அவருடைய எழுத்துகளை விரும்பி படித்ததுண்டு.

அப்படித்தான் துக்ளக்கில் வெளிவரும் "தண்ணீர் விட்டா வளர்த்தோம்" கட்டுரையும் வாசித்ததுண்டு. சமீபத்தில் படித்த "மதம் மாற்றுவதே மத நம்பிக்கையானால்..." கட்டுரையை படித்த பொழுது பெரிய ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை. ஆனால் இதுமாதிரி எழுதும்பொழுது நடுநிலையாக இரண்டு பக்கமும் ஆராய்ந்து எழுதி இருந்தால், அந்தக் கட்டுரையின்  மேல் ஒரு நம்பிக்கைதன்மை வந்திருக்கும். அப்படியில்லாமல் சிறுபான்மையினரை குறிப்பாக கிறிஸ்தவர்கள் மீது அவருக்கு இருக்கும் துவேசமே மேலோங்கி இருக்கிறது. அதைப் படிக்கும் எவருக்கும், கிறிஸ்தவர்களின் 'அராஜகமும்', 'இப்படி ஒரு மதமா?' என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் எனில் அது மிகையில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்.... மண்டைக்காடு கலவரத்தினால் 'அப்பொழுதய முதலமைச்சர் எம்ஜியார் அவர்கள் கொண்டுவர இருந்த/வேண்டிய மதமாற்ற சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்ததில் என்ன தவறு? ஏன் கிறிஸ்தவர்கள் மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என்பது அவருடைய கேள்வி.

சரி....எம்ஜியார் அவர்கள் மதமாற்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்கிற பட்சத்தில் ஒரு முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் என்ன செய்திருக்க வேண்டும்... அந்தந்த மதப் பெரியவர்கள், சட்ட நிபுணர்கள், அரசு அதிகாரிகள் என்றழைத்து ஒரு குழுவை உருவாக்கி அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கானவைகளை செய்திருந்திருக்கலாம். அப்படி இல்லாமல், காஞ்சி பெரியவரையும் அவரின் மூலம் இவரையும் அணுக வேண்டிய அவசியமென்ன?

ஒருமுறை அன்னை தெரசாவிடம் இந்து அன்பர் ஒருவர் நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறபோகிறேன் என்று சொன்னதற்கு, அன்னை அவர்கள் சொன்ன பதில் "உங்கள் மதத்திலிருந்தே நீங்கள் மக்களுக்காக தொண்டாற்ற முடியும்" என்று கூறி மதம் மாறுவதை இருக்கிறார்.

வெர்ஜினாவில் மிகப்பெரிய...பிரமாண்டமான மசூதி இருக்கிறது. தன்னை கிறிஸ்தவ நாடு என சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சில சர்ச்சுகள் கோவில்களாகவும், மசூதிகளாகவும் பயன்படுத்தப்படுவது குருமூர்த்திக்கு தெரிய நியாயமில்லைதான். யாதும் ஊரே யாவரும் கேளீர்.... எம்மதமும் சம்மதமே என்று சொல்லிக் கொள்ளும் நம் நாட்டில் ஒரு சாராரைப் பற்றிய துவேசம் மட்டும் குறையவில்லை.

இப்படியாக அவருடைய கட்டுரையிலிருந்து வரிக்கு வரி எடுத்து எதிர்வாதமும், புள்ளி விவரமும் வைக்கமுடியும். அல்லது அனானி நண்பர் கேட்டதுபோல 'நீயும், உன் மதமும் யோக்கியமானா?'னு கேள்விகளை அடுக்கலாம். ஆனால் இதை எழுத தூண்டிய காரணம் அதுவல்ல.

சர்ச்சுகள் செய்தவைகள் அனைத்தும் சரியென்னும் சொல்ல நான் மத போதகனுமல்ல. பிட்நோட்டீஸ் மூலகாகவோ, பணத்துக்காகவோ, பிரியாணிக்காவோ மதம் மாறியதில் என்ன தப்பு அப்படினு பிராச்சாரமும் பண்ணுவதும் என்னுடைய நோக்கமல்ல. அப்படி செய்வது மிகப்பெரிய தவறு. அதில் சந்தேகமில்லை. இப்படி மதமாறுதல் நான் படித்தவரை விவிலியத்தில் எங்கும் சொல்லவில்லை. சொல்லபோனால் அப்படி மதம்மாறியவர்களால் அந்த மதத்திற்கு சிறுமைதான் தவிர கண்டிப்பாக பெருமையல்ல....

குருமூர்த்தி அவர்கள் சொல்வது போல, 'மதமாற்றம் செய்வதே கிறிஸ்தவமும், கிறிஸ்தவர்களும் வேலை. அதற்கு அவர்களுக்கு கோடி கோடியாக வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுகிறது. அவர்களுடைய 'சேவை' என்ற போர்வையின் கீழ் தீட்டப்படும் திட்டம்தான் இந்த மத மாற்றம்!' என்பது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்க முயற்சி செய்துள்ளார்.

சகிப்புதன்மை, பகைவனுக்கும் அன்பு, தன் நண்பனுக்காக உயிரை கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை.... போன்ற மகத்தான வாழ்வியலை தன் வசத்திக்காக கட்டுரையாளர் மறைத்து விட்டாரா...? இல்லை விவிலயத்தில் அவருக்கு புரியவில்லையா என்று தெரியவில்லை.... அப்படி புரியாத பட்சத்தில், டி.பி.ஆர், சிறில், சேவியர் பேன்றவர்களின் வலைப்பூவில் எளிமையாக சொல்லியுள்ள பைபிள் குட்டிக்கதகள், கவிதைகள் அவருக்கு யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.

கிறிஸ்தவர்களில் கத்தோலிக்க வழிபாட்டு முறையை பின்பற்றுவர்களே அதிகம். இவர்கள் யாரும் வீடு வீடாக சென்றோ, சாப்பாடு போட்டோ கிறிஸ்துவத்திற்கு வாருங்கள் என்று சொல்பவர்கள் அல்ல.

நான் படித்த கிறிஸ்தவ கல்லூரியில் எனக்கு ஸ்ரீதர், காஜா முகமது என்று வகுப்பு தோழர்களுண்டு. எத்தயோ கிறிஸ்தவ கல்லூரிகளில் கிறிஸ்தவ மதத்தை சாரதவர்கள் துறை தலைவர்களாகவும், dean ஆகவும் இருந்ததுண்டு...இப்பொழுதும் இருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகத்தின் நோக்கம் "மதம் மாற்றுவதே" எனில், 100, 150 பராம்பரிய மிக்க அந்த நிறுவனங்கள் கிறிஸ்தவ அல்லாத மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்து கிறிஸ்தவத்திற்கு மாற்றிருக்கலாம்.  அப்படியல்லாமல், நீதிபதி இலட்சுமணன்,  திரு. அப்துல் கலாம், திரு. கோபால்சாமி (Chief Election Commisioner,  நியூடெல்லி),  சுப்பு ரத்தினம் ஐயா, தஞ்சை போன்றவர்களை நல்ல மனிதனாக இந்த சமூகத்திற்கு தந்ததிற்கு இந்த கல்வி நிறுவனங்களின் பங்கு ஒரு சிறு கடுகளாவது இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

ஒவ்வொரு மதத்திலும் குறைகள், நிறைகள் உண்டு. தன் மதத்தின் மேல் ஒருவனுக்கு மரியாதையும், பெருமையும் இருக்கலாம். ஆனால் என் மதம்தான் பெரியது என்ற அகம்பாவமும், மற்ற மதங்களை குறை சொல்லி தன் மதத்தினை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்க கூடாது.

நாம் மகாத்மாகவோ, தெரசாவோ ஆக வேண்டாம்.....முதலில் மனிதனை மனிதனாக... அவன்/அவள் குறை, நிறைகளுடன் ஏற்றுக் கொள்ளுதலும், அன்பு செய்தலையும் முதலில் கற்றுக் கொள்வோம்!!

அஞ்சலி

எப்பொழுதும் போல ஏதோ  ஒரு வலைப்பூவில் ஆரம்பித்து.... தங்களுடைய பதிவில் வந்து நின்றேன்.

வலைப்பூவே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்க, அதிர்ச்சியோடு படித்த முதல் வலைப்பூ உங்களுடையது .

பல முறை, 'இதலாம் உண்மையா இருக்க கூடாது'னு நினைக்கவைத்த முதல் வலைப்பூவும் உங்களுடையதுதான்!

உங்களின் அசாத்திய மன உறுதியும், புற்றுநோய் பற்றி குறிப்பாக மார்பக  புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பதிவுகளும், தங்களின் மேல் சக பதிவர்கள் கொண்டிருந்த அன்பும், அக்கறையையும் கண்டிப்பாக தமிழ் வலைப்பதிவுலகில்  என்றும் நிலைத்து நிற்கும்.

சக பதிவர்களின் ஒருவனாக .........
     மனமார்ந்த அனுதாபங்களும், வருத்தங்களும்...
     அம்மையாரின் ஆத்மா சாந்தி அடையவும்.....
    அவரது குடும்பத்தினாருக்கு ஆறுதலும்,
                மிக்க மனவுறுதியும் தர .....
    நமது பிராத்தனைகள்........

~~~~~~~~~~~

தொடர்புள்ள மற்ற வலைப்பூக்கள்:
    http://snapjudge.blogspot.com/2008/08/anuradha-rip-anjali.html
      http://boologathildevendiran.blogspot.com/

@

நண்டு

ஒலிம்பிக் போட்டியை பார்க்கும்பொழுது 'பெரு மூச்சை ' தவிர்க்கமுடியவில்லை!  முதல் நாளின் போது, 120 கோடி மக்கள்தொகை, இன்னும் சில வருடங்களில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் வகிக்க போகும் நம்மிடமிருந்து வெறும் 57 பேர்தான் அனுப்ப முடிகிறது. 50,000 மற்றும் 1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடெல்லாம் 10 பேரும், 30 பேரும் அனுப்பும்பொழுது,  'நமக்கு என்ன வந்தது? எத்தனை நாளைக்குதான் இப்படினு...' ஒரு விரக்தியும் 'கொஞ்ச நேரத்துக்கு'  வருத்தமும் வந்துட்டு போகுது.

Beach Volleyball, நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ்,குத்துச்சண்டை....  போட்டிகளைலாம் பார்க்கும்பொழுது  இவுங்களைவிட நம்ம மக்கள் சூப்பரா பண்ணுவாங்களேனு ஆதங்கம்தான் வருது.

தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து முறையாக பயிற்சி அளித்தால் கண்டிப்பாக 2020 ஒலிம்பிக்கில் அதிக தங்கங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம்.  ஆனால் எந்த தொலைநோக்குப் பார்வைகளும் இல்லாமல் ... ஒரு தங்கம் வாங்கின உடனே 'கோடிகளையும்',  'வாழ்நாள் முழுவதும் ரயில்வேயில் இலவச பாஸ்'  என அறிவிப்பும் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது.  இதுதான் நமது  தரமா?  அபினவ் பிந்த்ரா ஒரு CEO. அவருக்கு எதுக்கையா இலவச பாஸ்....  இதற்குப் பதிலாக அவருடைய பயிற்சிக்கு ஆகும் தொகையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளலாம்... இல்லை பல 'அபினவ் பிந்த்ரா'க்களை உருவாக்குவதற்கு எண்ண செய்யலாம் என்று யோசனையாவது பண்ணலாம்!

பள்ளி, கல்லூரி, மாவட்ட, மாநில அளவில் சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சத்தான உணவு, நல்ல பயிற்சியாளர்கள்,  சேஷன் மாதிரி ஒரு தலைவரை விளையாட்டுத் துறைக்கு தலைவராக்கி அதற்கு அதிகம் தொகையை ஒதுக்கி ..... என ஒரு செயல்திட்டம் கொண்டு வந்தால் நம்மாலும் 2020 ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் போட்டியாக வரமுடியும்.

அரசியலும், EGOவும் புகுந்து நமது ஹாக்கி அணி படும்பாடு நமக்கெல்லாம் தெரிந்ததுதான். IPL மாதிரி ஹாக்கி விளையாட்டுக்கும் நடத்த முடியாதான்னா.....கேட்டால் பணம், மக்கள் ஆர்வமின்மை ஒரு பெரிய பட்டியல் நம்மிடமுண்டு.

இந்தியர்கள் ஒவ்வொருவரும் தனிதனியே நல்ல திறமைசாலிகள். ஒரு அணியாக இருந்து செயல்படவேண்டும் என்றால் 'நண்டு கதை'தான்!!

நாளை ஆகஸ்ட் 15!  அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

தங்க பதக்கம்

08-08-08 - இரவு 08:08 முதல் ஒலிம்பிக் போட்டி (ஆகஸ்டு 8 - 24) ஆரம்பமாகும் நேரம். சீனாவுக்கு 8 ராசியான எண் என்பதால் எல்லாம் "8" மயம்!

இந்தியாவுக்குகூட 'நம்பர் 8' ராசியானது! இதுவரைக்கும் நம்ம வாங்கின மொத்த தங்கம்: 8 (1900 - 2004).  நமக்கு பெருமை சேர்த்த அந்த ஒரு அணி: ஹாக்கி! 1928 லிருந்து 1956 வரை தொடர்ந்து 6 முறை தங்கம் வென்றது. கடைசி தங்க பதக்கம் வாங்கிய ஆண்டு 1980!  இந்த வருடம் தகுதி சுற்றிலேயே அதுவும் "காலி!"

2008க்கான ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்த கனடா, பிரான்ஸ், துருக்கி & ஜப்பான் நாடுகளுடன் போட்டி போட்டு  வென்றடுத்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து 99 பேர் கொண்ட அணி (சீனா - 639; அமெரிக்கா - 596 பேர்) 2008 பீஜிங் ஒலிம்பிக்கு போயிருக்கு. இந்த 99 பேருல 57 வீரர்கள் மற்றும் 44 அரசு அதிகாரிகள் (சானியா மிர்ஷா அம்மாவும் உண்டு!) 57 வீரர்களுக்கு 44 அரசு அதிகாரிகள்...!! எல்லாம் நம்ம வரிப்பணத்திலதான் இந்த பயணம்....!

முதன் முதல 1900 ஒலிம்பிக்கில் தடகளப்போட்டில 2 வெள்ளி பதக்கம் வாங்கியிருக்கோம். 2004ல வாங்கின வெள்ளியவும் சேர்த்து ஒலிம்பிக்கில் நம்ம வாங்கிய மொத்த பதக்கம் 17! (அட அதுவும் 8!!)

பதக்கம் வாங்கி தலைப்பு செய்தில வர்றோமோ இல்லையோ, கிளம்புறதுக்கு முன்னாடியே இப்படிபட்ட செய்தில நம்ம பேரு வந்திருது. இந்த இலட்சணத்தில்தான் டெல்லியில் 2020 ஒலிம்பிக் நடக்கிறத்துக்கான முயற்சி பண்ண போறோமாம்....!

சரி...ஒரு பக்கம்  காமெடி பண்ணிகிட்டு இருக்கட்டும்.

இப்ப இருக்கிற பட்டியலில் நம்பிக்கை நட்சத்திரங்கள் யாருனு (என்க்கு தெரிந்த வரை...) பாத்தா....
1) "TIME" பத்திரிக்கையில வந்த, ரத்தோர் - Shotting (Clay Pigeon Double Trap)
2) அஞ்சு ஜார்ஜ் - Athletics (Long Jump)
3) லியாண்டர் பயஸ்  &  மகேஷ் பூபதி - டென்னிஸ்
4) சானியா மிர்ஷா - டென்னிஸ்
5) மனவ்ஜித் சிங் - Shooting (Trap Men)
6) அபினவ் - Shotting (AirRifle)

சீன மண்ணில நம்மலோட தேசிய கீதமும் கேக்கணும்கிறதுதான் ஒவ்வொரு இந்தியர்களுடைய ஆசை! நிறைவேற்றுவார்களா?

பசி

www.freerice.com கேள்வி பட்டிருக்கீங்களா?

நம்ம சரியா பதில் சொல்ல ஒவ்வொரு கேள்விக்கும், நம்ம சார்பா 20 grain  (1 gram = 48 grains) அரிசி ஐ.நா உலக தானிய வங்கிக்கு (WFP) போகுது.  ஒரு கைப்பிடி அரிசிகூட கிடைக்காத மக்களுக்கு WFP மூலமா ஒரு வேளைக்காவது பசியை போக்க முயற்சி நடந்திட்டு இருக்கு.  இத sponsors பண்றவங்களோட நோக்கம் 'free vocabulary for everyone' & 'free rice for the hungry'.

உலகத்திலுள்ள வறுமைய ஒழிக்க ஆண்டுக்கு 30 பில்லியன் அமெரிக்க வெள்ளி இருந்தா போதுமாம்!! இதில AIDS, TB, மலேரியா போல நோய்களை முழுமையா ஒழிக்க 165  பில்லியன் அமெரிக்க வெள்ளி தேவைபடுது.

2006ல மட்டும் ஆயுதத்திற்கும், இராணுவத்திற்கும் உலக நாடுகள் செலவு செய்த மொத்த தொகை:  1.2 டிரிலியன் அமெரிக்க வெள்ளி !

22 நாடுகள்  சேர்ந்து 195 பில்லியன் அமெரிக்க வெள்ளி திரட்ட,  தங்கள் நாட்டின் வருமானத்தில 0.7% தர்றதா முடிவு பண்ணிருக்காங்கா.

ஒரு நாளைக்கு மட்டும் 25,000 பேரு பசியின் கொடுமையால சாகுறதா ஐ.நா குறிப்பு சொல்லுது (குறிப்பா, குழந்தைகள்). சரி..நம்ம குடுக்கிற 1 கிராமோ, 2 கிராமோ எத்தனை பேரோட பசியை போக்க போகுதுனு நம்ம நினைச்சா, முதன் முதலா freerice.com மூலமா பங்களாதேஷ்ல 27,000 பேருக்கு அரிசி கிடைக்க ஐ.நா WFP மூலமா வழி பண்ணிருக்காங்க.

இதில (vocabulary)  60 level இருக்காம்.  50ஐ தாண்டதே கஷ்டமாம்! முயற்சிதான் பண்ணிபாப்போமே!!