Pages

"சொல்லாததும் உண்மை" தொடரில் பிரகாஷ் ராஜ்.

இப்ப யோசிச்சா வேரைத் தேடிப் போற மாதிரிதான், சொந்த ஊரைத் தேடி ஒவ்வொருத்தரும் லீவுக்குப் போறோம்னு தோணுது. எதிர்காலம் தேடி ஓடிட்டு இருக்கிற ஒரு தலைமுறையும், எப்ப வேணாலும் எமன் ஓலைச்சீட்டு எடுத்துக்கிட்டு வந்து வாசல்படியில் நிற்கலாம்கிற கவலையோடு இருக்கிற மூத்த தலைமுறையும் சந்திச்சுக்கிற தருணம் அது.

அடுத்த தலைமுறையா வாழப் போற குழந்தைகள் சில விஷயங்களைக் கத்துக்கவும், கடந்த தலைமுறையா வாழ்ந்து முடிச்சவங்க, சில விஷயங்களைக் கத்துத் தரவும் வாய்ப்பு இருக்கிற காலம் கோடை விடுமுறைதான்.

அதைத் தவறவிடுற குழந்தைகளைப் பார்க்கும்போது ரொம்பப் பரிதாபமா இருக்கும். ‘ஏன்டா... தாத்தா& பாட்டி பார்க்க ஊருக்குப் போகலையா?’னு கேட்டா, ‘அபாகஸ் க்ளாஸ் சேர்ந்திருக்கேன் அங்கிள்’னு சொல்றான் ஒரு குழந்தை. விதவிதமான மனிதர்களையும், அவங்க வாழ்க்கையையும் பார்க்காம அதி விரைவா கணக்குப் போடக் கத்துக் கொடுக்கிற பெற்றவங்க மனநிலை நிச்சயம் மாறணும். இது அட்வைஸ் இல்லை. என் குழந்தைப் பருவ அனுபவம்.

பிழைக்கக் கத்துத் தர்றதுக்குப் பெத்தவங்க போதும். ஆனா, வாழப் பழகித் தர்றதுக்கு பெரியவங்க வேணும்.

*******
காதலும் கல்யாணமும் உரிமையாக இருக்கும்போது, வாழ்க்கை ருசியா இருக்கு. அதுவே கடமை யாகிடுச்சுன்னா, வீட்ல டி.வி, ஃப்ரிஜ், மிக்ஸி மாதிரி மனிதர்களும் பொருள்களாகிடுவாங்க.

வெட்டப்பட்டுத் துண்டாகிக் கிடக்கிற தலைகளை ஒட்டவைக்கிற வரம் கிடைச்சாலும், நம்முடைய எதிர்பார்ப்புகள் வேறொரு தலையையும், இன்னொரு உடம்பையும் விரும்பினா, உறவுகளே பாரம்தானே?

*********

பல நேரங்களில் அங்கீகாரத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று கோபப்படுகிறோம், கூச்சலிடுகிறோம். ஆனால், அங்கீகாரம் என்பது எப்படி இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறையை எவராலும் முடிவு செய்ய முடிவதே இல்லை.
இயற்கை எதற்கும் எவரிடமும் அங்கீகாரம் கேட்பதில்லை. தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு, தனது இருப்பை நியாயப்படுத்திக்கொள்வதும் இல்லை. இவை யாவையும்விட, தன் இருப்பு குறித்து ஆயிரம் வருடப் பழைமையான மரமோ, எல்லையற்று விரிந்துகிடக்கும் கடலோ, மலையோ தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. எவரது அங்கீகாரத்துக்கும் காத்தி ருப்பதும் இல்லை.
அங்கீகாரம் பெறுவதற்கான எளிய தந்திரங்கள் நடைமுறையில் உள்ள காலத்தில் இயல்பாக அது கிடைக்கக் கூடும் என்று நினைப்பவன் முட்டாளாகவே கருதப்படுகிறான். ‘பகட்டும், தற்பெருமையும், சுயதம்பட்டமும் கொண்டவர்களுக்கு மட்டும்தான் எதிர்காலம்’ என்ற கானல் தோற்றம் நம் முன்னே விரிந்துகொண்டு இருக்கிறது.

32 கேள்விகள்

நம்மையும் இந்த ஜோதியில ஐக்கியமாக அழைத்த அண்ணாத்த ஸ்ரீதர் நாராயணன் க்கு நன்றி! ;)




1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

சும்மா போகிற போக்கில நம்மலா வச்துகிட்டது. அவ்வை சண்முகியில் கமலுக்கு தோணுமே அதுமாதிரினு சொல்லலாம்.

2) கடைசியா அழுதது எப்போது?
அதலாம் வெளிய சொல்லலமா....ம்ம்ம்..இலங்கை நிகழ்வுகளிலிருந்து நேற்று பார்த்த 'பசங்க' படத்தை பார்த்துட்டு கண் கலங்கின வரை..

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பரவாயில்லமா இருக்கும்.
அதவிட என் அப்பாவின் கையெழுத்தும், என் நண்பனின் கையெழுத்தும் ரொம்ப பிடிக்கும்.
பரிட்சைலலாம் நம்ம எழுதிற முதல் இரண்டு பக்கம்தான் படிக்கிறமாதிரி இருக்கும். நண்பனோட பேப்பரை பார்த்தா முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் ஒரே மாதிரி முத்து முத்துதா இருக்கும்.

4) பிடித்த மதிய உணவு?
வெஜிடேரியன்: இரசம் சாதம் with மாங்கா ஊறுகாய்.
நான்-வெஜிடேரியன்: ஹைதராபாத் 'தம்' பிரியாணி.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கண்டிப்பா..! பாக்கதான் அப்படி இருப்பான். பழகினா ரொம்ப 'நல்லவன்'..!! ;)

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
அருவியில்! இந்த முறை இந்தியா போனபோது, குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்கலை. ;( இப்ப சீசன் அருமையாம் இருக்காம்!

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
புன்னகை, கண் ....

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: முடிந்தளவு உதவி செய்வது; உதவி செய்யறோமோ இல்லையோ உபத்திரம் செய்யாம இருக்குறது...... ;)
பிடிக்காதது: (இதுக்கே தனி சுயபுரணாம் பதிவு எழுதனுமே..!!) சுருக்கமா சொல்லணும்னா.. கேள்வி எண்:28 க்கு செல்லவும்... please!

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
பிடித்தது: அசாத்திய பொறுமை, புத்தகம் வாசிப்பு; எனக்கு தெரிந்த பாதி எழுத்தாளர்கள் மனைவியின் மூலம் அறிமுகம் ஆனவர்களே!.
பிடிக்காதது: அததான் 'கண்டுபிடிக்க' முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். (அப்பாடா.... அப்படினு பெரும்மூச்சி கேக்குதா?!)

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியா உடனே யாரும் நினைவில் வரவில்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
நீலம்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
சுதாரகுநாதனின் 'அனல் மேலே பனித்துளி...'!! இன்னும் 'வாரணம் ஆயிரம்' த்தில இருந்து வெளிய வரலை.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
பச்சை.

14) பிடித்த மணம்?
மல்லிகை, புது நோட்புக்/புத்தகத்தின் மணம்.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
அவுங்க பதிவை படிச்சி பார்த்தா நீங்களே புரிஞ்சுக்குவீங்க. இதுமாதிரி மொக்கை பதிலுக்கும் சுவாரசியமா மாத்தும் வித்தகர்கள்....

ஜோ போன தடவை இதுமாதிரி ஒரு கேள்வி-பதில் விளையாட்டுக்கு கூப்பிடா, தல வரகாணோம். அப்படியே விட்டுறோமா என்ன.....

காட்டாறு; ரொம்ப நாளா ஆளை காணோம். இப்படியாவது வருவாங்கனு நம்பிக்கைதான்!

கோபிநாத்: பட்டாம்பூச்சி விருது பெற்ற அண்ணாத்த! நம்ம எழுதிற குப்பைகளுக்கெல்லாம் பதில் போடும் நல்ல ஜூவன்! ;)

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
எளிமையாக எழுதும் அவருடைய அனைத்துப் பதிவுகளும்..

17) பிடித்த விளையாட்டு?
கால்பந்து.

18) கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
பராசக்தி யிலிருந்து பசங்க வரை அனைத்து படங்களும். (விசால், பேரரசு, வாசு..இப்பொழுது விஜய், அஜித் படங்கனா ரொம்பவே அலர்ஜி...!!)

20) கடைசியாகப் பார்த்த படம்?
நேத்துதான் 'பசங்க' பார்த்தேன்.

21) பிடித்த பருவ காலம் எது?
கோடைக்காலம்.... அதுவும், சிறிது தூரல் போட்டுவிட்டு மெதுவா எட்டிப்பார்க்கும் சூரிய வெளிச்சம்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
ரொம்ப நாளா வாசிக்கணும் நினைத்த வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
எப்பொழுதும் என்னுடைய மகள் படம்தான்.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்; , குழந்தைகளின் மழலைப்பேச்சு / சிரிப்பு.
பிடிக்காத சத்தம்: பேருந்துகளில் கைதொலைபேசிகளில் நம்ம காதுபக்கத்தில் பேசும் இரைச்சல் சத்தம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
வேற எங்க... 'புண்ணிய பூமி'யான அமெரிக்காதான்!!

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இருக்கானு தேடிக்கிட்டே இருக்கேன்....

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சொன்ன நேரத்துக்கு வராம இருக்குறது.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன்கோபம்..!!

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
'முடியாது'னு சொல்றகூடிய நேரத்தில அப்படி சொல்ல கத்துக்கணும். பேசாம இருந்துட்டு அந்த வேலைய இழுத்து போட்டுகிட்டு பண்ற வேலைய விடணும்.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
மிஷினரிக்கு போயிடலாம்!!

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
Life is beautiful னு சொல்ல ஆசை.....but....make it beautiful!!



பி.கு: இப்படி மொக்கையா ஒரு விளையாட்டை ஆரம்பிச்சு வைச்ச அந்த 'நல்லவரு' யாருப்பா...? அப்புறம் அதென்ன 32... !!





தியானம்: கோபத்தை விலகி நின்று கவனி!

நடனம், சிரிப்பு, உடலசைவு, மூச்சுவிடுதல், மூச்சைக் கவனித்தல், ஒளியைக் கவனித்தல்....என்ன இது? ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களாக இருக்கின்றனவே என்று யோசிக்கிறீர்களா? தொடர்பில்லாத விஷயங்கள் இல்லை இவை. இவையெல்லாம் தியானப் பயிற்சிகள்.

சென்னையில் ஓúஸô சுராஜ் மெடிடேஷன் சென்டரை நடத்தும் ஸ்வாமி பரிபூரானந்த் கடந்த 24 ஆண்டுகளாக இத்துறையில் பரிச்சயம் உள்ளவர். புணேயில் உள்ள ஓஷோ கம்யூன் இன்டர்நேஷனலில் இதற்காகப் பயிற்சி பெற்றவர். இந்தத் தியானப் பயிற்சிகளைக் கடந்த 16 ஆண்டுகளாகப் பிறருக்கு அளித்து வருகிறார்.

இந்தப் பயிற்சிகளினால் என்ன நன்மை? இப்படிப்பட்ட பயிற்சிகள் எல்லாம் இந்த நவீனயுகத்தில் தேவைதானா? என்று அவரிடம் கேள்விகளை அடுக்கினோம். கொஞ்சமும் பதட்டப்படாமல் அவர் அளித்த பதில்கள் உங்கள் பார்வைக்காக....

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் மெüனம் என்று பொருள். இந்த மெüனம் நமது தாயின் கருவறையில் இருக்கும் போது நம்முடன் இருந்தது. மனிதன் பிறந்து வளர வளர இந்த மெüனம் மனிதனுக்குள் மறைந்து விடுகிறது. ஆனால் இந்த மெüனம் எல்லாருக்குள்ளும் இருக்கிறது. அது புதிதாக ஏற்படுத்தப்படுவது அல்ல. மதரீதியான காரணங்களாலும், வேலைரீதியான காரணங்களாலும், குடும்பரீதியான காரணங்களாலும் நமது மனதில் அழுத்தம் சேர்கிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக நமது மனதில் குடி கொண்டிருக்கும் மெüனத்தை நம்மால் உணர முடியவில்லை. அந்த அழுத்தங்களை வெளியேற்றி நம்முள் உறைந்திருக்கும் மெüனத்தை வெளிக் கொண்டு வருபவைதான் தியானப் பயிற்சிகள்.

மனம் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. மனதைத் தேவையான போது இயங்கவிட்டு பிற நேரங்களில் அதை நிறுத்தி வைக்க முடியும். அதற்குப் பயன்படுவது தியானப் பயிற்சிகள்.

தியானப் பயிற்சிகள் என்று சொல்கிறீர்கள். எத்தனைவிதமான தியானப் பயிற்சிகள் உள்ளன?

ஓஷோ 112 "விஞ்ஞான பைரவ தந்த்ரங்'களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ரமண மகரிஷி நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர் உடல் வேறு; உணர்வு வேறு என்று இருக்க முடிந்திருக்கிறது. ஓஷோ சொன்ன 112 தந்த்ரங்களில் இதுவும் அடங்கியிருக்கிறது. இந்த 112 தந்த்ரங்கள் எல்லாருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. நாங்கள் சொல்லித் தருபவற்றை 21 நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்து அதில் உங்களுக்குப் பொருந்திப் போகும் பயிற்சிகளை மட்டும் தொடர்ந்து மூன்று மாதம் செய்துவர வேண்டும். அதன்பின் நேரம் கிடைக்கும் போது - தோன்றிய போது செய்யலாம்.

நாங்கள் டான்ஸ், சிரிப்பு தியானம், நாதப்ரம்மம் தியானம், உடலசைவு தியானம்(குண்டலினி தியானம்), மூச்சுவிடுதல் தியானம், ஹு மந்த்ரா, மூச்சைக் கவனித்தல் போன்ற பயிற்சிகளைக் கற்றுத் தருகிறோம். ஒரு நாள் தியானப் பயிற்சி எனில் குறைந்தது 5 தியானப் பயிற்சிகளைக் கற்றுத் தருகிறோம்.

தியானப் பயிற்சிகளினால் என்ன பயன்?

இன்று வாழ்க்கையில் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. கால்சென்ட்டர் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு டென்சன் அதிகம். அவர்களுக்கு வருமானமும் அதிகம். அவர்களில் பலர் நெருக்கடிகளைச் சமாளிக்கப் போதையில் மூழ்குகிறார்கள். பல தீய பழக்கங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் டென்சனைக் குறைக்கவும், தீய பழக்கங்கள் ஏற்படாமல் தடுக்கவும் இந்தத் தியானப் பயிற்சிகள் உதவும்.

ஓஷோவின் தியானப் பயிற்சிகள் என்றில்லை. பொதுவாக எந்தத் தியானப் பயிற்சிகளும் நல்ல பலன்களைத் தரவே செய்கின்றன. நான் சொல்லும் தியானப் பயிற்சி மட்டும்தான் சரியானது என்று சொல்ல மாட்டேன். நான் சில தியானப் பயிற்சிகளைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம்.

பிற தியானப் பயிற்சிகளுக்கும் நீங்கள் தரும் தியானப் பயிற்சிகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன?

இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பிற தியானப் பயிற்சிகளில் தியானம் என்றால் அதன் மூலம் எதையாவது அடைய வேண்டும் என்று இலக்கு வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட இலக்கு எதுவும் எங்களின் பயிற்சியில் இல்லை. புதிதாக அடைய எதுவும் இல்லை. ஏற்கெனவே மனிதனுக்குள் இருக்கிற மெüனத்தை மனிதனுக்கு ஞாபகப்படுத்துவதுதான் இந்த தியானப் பயிற்சிகள். இந்தப் பயிற்சிகள் மனிதனுக்குள்ளிருக்கும் தேவையில்லாத அழுத்தங்களை வெளியேறுகின்றன.

பிற தியானப் பயிற்சிகளில் மனிதனுக்கு எது எது பிடிக்கிறதோ அதையெல்லாம் செய்யக் கூடாது என்பார்கள். மனிதனுக்குப் பிடித்ததைச் செய்யாவிட்டால் மனிதனாக இருந்து என்ன பயன்? நம்மை வருத்திக் கொள்வது தியானமல்ல. உண்ணா நோன்பிருந்து தியானம் செய்யும் போது மனதில் உணவைப் பற்றிய எண்ணமே இருக்கும். ஏனெனில் உணவு மனிதனின் உடல் தேவை. எனவே மனிதன் தன்னை வருத்திக் கொண்டு தியானம் எதுவும் செய்யக் கூடாது.

சமூகக் காரணங்களாலும் மற்றும் பலவிதக் காரணங்களாலும் ஏற்படுகின்ற பிரச்சினைகளை நீக்குவதற்கும் அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கும் முயற்சிப்பதுதானே சரி. அதை விட்டு விட்டு அந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மனிதன் தன் மனதளவில் அந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான தியானப் பயிற்சிகளைச் செய்வது சுயநலமில்லையா? சமூகப் பொறுப்பில்லாதத் தன்மையல்லவா?

சமூகம் என்பது யார்? பல தனிமனிதர்கள் எல்லாம் சேர்ந்துதான் சமூகம் உருவாகிறது. அந்தத் தனிமனிதர்கள் தங்கள் அளவில் மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே அது சமூகத்திற்கு நன்மைதானே?

மேலும் சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அதற்கான வேலைகள் ஒருபுறம் நடக்கட்டும். அவரவருக்குரிய வகையில் அவற்றைச் செய்யட்டும்.
அந்த வேலைகளைத் தனிமனிதன் ஒருவன் சிறப்பாகச் செய்யவே இந்தத் தியானப் பயிற்சிகள் உதவும். எப்படி என்கிறீர்களா?

ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி உங்களுக்குக் கோபம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோபம் சரியானது. அதை அடக்க வேண்டியதில்லை. ஆனால் அதே சமயம் அந்தக் கோபத்தில் மூழ்கிவிடவும் வேண்டியதில்லை. அந்தக் கோபத்தை விலகி நின்று கவனிக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கோபத்தைச் சரியானபடி கையாள முடியும். அவ்வாறு சரியானபடி கையாளும்போது பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும். கோபத்தால் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படாது.

கோபம் என்றில்லை, நமது எல்லா உணர்வுகளையும் கவனிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த உணர்வையும் கட்டுப்படுத்தக் கூடாது. அதை அடக்கக் கூடாது. மாறாக அதைக் கவனிக்க வேண்டும். அதைக் கவனிக்கும் போது நல்லது கெட்டது தெரிய ஆரம்பித்துவிடும்.

கோபம் உட்பட பலவித உணர்வுகளையும் நெறிப்படுத்த முடியாத ஒரு மனிதன் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? அதற்கு எங்கள் தியானப் பயிற்சிகள் உதவும்.

மேலும் பலவிதக் காரணங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளான மனிதன் போதை போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் தடுப்பதே இந்தத் தியானப் பயிற்சிகளின் சமூகப் பங்களிப்பல்லவா?

உங்களைப் பின்பற்றினால் சமூகப் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும் என்கிறீர்களா?

எங்களைப் பின்பற்றுங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஓஷோவே தன்னை யாரும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பியது கிடையாது. "நீ நீயாக இரு' என்பதுதான் ஓஷோவின் கருத்து.

"நீ பிறரை மாதிரி இருக்க நினைக்காதே. உன்னை மாதிரி நீ இரு'' என்பதே அவர் கருத்து.


நன்றி: தினமணி கதிர்!
தினமணி கதிரில் (11/25/2007) வந்த கட்டுரை [பயிற்சி: கோபத்தை விலகி நின்று கவனி! -- ந.ஜீவா]

இந்திய பயணக் குறிப்புகள் 2009 - II

எப்பொழுதும் இந்தியா வரும்பொழுது, விமான நிலையத்தில் சாஷ்டாங்கமா விழுந்து 'தாய் மண்ணே வணக்கம்'  ரகுமான் மாதிரி பாட ஆசைதான்! ( 'சின்ன சின்ன ஆசை' பட்டியலில் இதயும் சேர்த்துக்கணும்.).

ஒவ்வொரு முறையும் போறப்ப ஏகப்பட்ட மாற்றங்கள்! பிடிச்ச விசயங்கள் இருந்தாலும்,  டாப் 5 பிடிக்காத விசயங்கள் என்னனு பார்த்தா..

1)  'சென்னை ஆட்டோகாரர்களிடம் பேசுவது எப்படி?' Dummy series ஏதும் இருந்தா அத வாங்கி படிக்கணும். வர வர நம்ம மக்கள்கிட்ட சகிப்புத்தன்மை குறைஞ்சிகிட்டே வருது.

தீவிரவாதம்கிறது என்ன....மனுசனை மனுசனை மதிக்காமல் இருப்பதுதான....!

ஆட்டோ ஓட்டுநர்கள், நடத்துனர்கள்னு ஆரம்பிச்சி கோயில், குளம்னு தொடர்ந்து, திரையங்குகள், சரவணா ஸ்டோர்ஸ் வரைக்கும் யாரும் யாரையும் மனுசனா மதிச்சி பேசுறதில்ல. குறைந்தபட்ச மரியாதகூட கிடையாது. சின்ன விசயங்களுக்கலாம் எரிந்து விழுவது, ஏமாற்றுவது.

இலட்சம் இலடசமா சம்பாதிரிக்காங்களே குடுத்தா என்னகிற மாதிரிதான் பேச்செல்லாம். எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டலாம்கிற எண்ணம்!

2) 'நானே பிரதானம்'கிற எண்ணம்! பொது இடங்களில், சக மனிதனைப்பற்றிய அக்கறை குறைந்துகொண்டே வருவது.

3) நம்ம ஊரில இருக்கிற குப்பைகள்! கோயில்கள்,   மருத்துவனை என்று குப்பை தொட்டிகளுக்கு பஞ்சம். மக்களுக்கும் அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. அரசாங்கமும் அதற்கான விழிப்புணர்வு எடுப்பதற்கான அறிகுறியும் இல்லை.

4) வார நாட்கள்னா தொலைகாட்சி மெகா தொடர்கள்,  வார இறுதி அல்லது விடுமுறையென்றால் சினிமா, சினிமா, சினிமா....!  வேற பொழுது போக்கே இல்லை.

5) உலகில் ஒரு பக்கம்,  சொந்த பிள்ளைங்க தண்ணி எடுத்து வந்து கொடுத்தாலும், மூச்சுக்கு முன்னுரு முறை நன்றி சொல்லும் மக்கள்! அதற்கு மறுபக்கம் 'சாரி', நன்றிகிற வார்த்தைகளையே மறந்த நம்மவர்கள்!


பி.கு: இந்த பட்டியலில் சாதி, மதம், ஏழ்மை, இலஞ்சம் போன்ற 'சின்ன சின்ன' விசயங்களைலாம் கணக்கில எடுத்துக்கலை!.

இந்திய பயணக் குறிப்புகள் 2009 - I

ஐந்து வாரம், ஆறு வாரம் விடுமுறைலலாம் இந்தியாவுக்கு போனது கனவாக இருக்கு. இந்த முறை இரண்டு வாரம்தான்!

* சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 'இன்டர்நெட் செக்இன்' ரொம்பவே பயனுள்ளதா இருந்தது. அந்த வரிசையில கூட்டமே இல்லை! (ஆனா சென்னைல இருந்து கிளம்பிறப்ப 'இன்டர்நெட் செக்இன்' வரிசைல பெரிய Q!!)

* Check-in luggage எடையவிட 'Hand luggage' எடையதான் கண்ணும் கருத்துமா பாக்குறாங்க. ஏழு கிலோவுக்கு மேல இருந்தா 'படுத்தி எடுத்துறானுங்க'!

* Flightல சீட்டுக்கு முன்னாடி (கொஞ்சம்) பெரிய திரை! எல்லாமே டிஜிட்டல்! பாட்டு கேக்க நமக்குன்னு 'My Favourities' பட்டியல போட்டு வைச்சுக்க வசதி. இதலாம் இந்த 12-14 நேர பயணத்திற்கு! Ipod சார்ஜ் பண்ணறதுக்குன்னு தனியா USB port!

* குழந்தைக்கான கார்ட்டூன்கள்/படங்கள் ரொம்பவே கம்மி!

* தமிழிலில் அபியும் நானும், தசாவதாரம், சரோஜா! இந்தியில ஆர்வமா பார்க்கிறமாதிரி இல்ல (ஜெனிலா நடித்த படம் இருந்தது).

* ஆங்கிலத்தில் நான் பார்க்கணும் நினைச்ச சில படங்கள் இருந்தது. The Reader, Benjamin Button, Gran Torino, Doubt, Paul Blart: Mall Cop; The Reader, Doubt பார்க்க முடிஞ்சது. Doubt - ஏமாற்றம், ஆனா Merly Streep acting amazing; 'The Reader' - விமானத்தில பார்க்ககூடிய படமல்ல. Kate Winselt க்கு ஆஸ்கார் வாங்கி குடுத்த படம். would like to watch one more time. முடிவை ஒரளவு தீர்மானிக்க முடிந்தாலும், கொஞ்ச நேரம் மனதை ஏதோ செய்த படம்.

* ஒரு தடவைக்கு மேல Vodka/Whisky....யோ கேட்டா 'ஒரு மாதியா'லாம் பாக்கிறதில்ல. ஆனா இந்த முறை 'Bloody Mary' mixing சரியில்ல.