Pages

தில்லானா மோகனாம்பாள்

மு.கு.: திரை விமர்சனம் அல்ல..!


சமீபத்தில சன் தொலைகாட்சியில 'தில்லானா மோகனாம்பாள்' 5வது தடவை பார்த்தேன். ஒவ்வொரு தடவை பாக்கிறப்பவும், முத தடவ பார்க்கிறப்ப இருந்த வியப்புதான் வருது.

ஒவ்வொரு தடவை பார்க்கிறப்பவும் ஒவ்வொருத்தங்க மேல...

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நடிப்ப சொல்லுறதா...

நாட்டியப் பேரொளி பத்மினி நாட்டியத்த சொல்லுறதா...

நடிப்புச் செல்வர் பாலையாவ சொல்லுறதா...

நாகேஷ், மனோரமா நடிப்பு,

கண்ணதாசன் பாடல்கள்,

இசை-னு ஒரு பெரிய பட்டியல் போடலாம்..

இதுக்கும் மேல திரைக்கதை, தயாரிப்பு மற்றும் படத்தை இயக்கிய AP நாகராஜன் (திருவிளையாடல் படத்துல நக்கீரனா வருவாரே) அவர்களையா...


'சிக்கல்' சண்முகசுந்தரம் - மோகனாம்பாள் இடைய உள்ள காதல்..
'சிக்கல்' சண்முகசுந்தரம் தன் திறமை-ல உள்ள நம்பிக்கைனால அவனுக்கே உரிய கோபம்....
அந்த குணம்தான் மோகனாவுக்கும் பிடிக்க மெல்லியதாய் அவள் மனதில் வரும் காதல்...

இவுங்க சந்திக்கிற ஒவ்வொரு இடமும் ஒரு கவிதை!


இரண்டு பேரு முதல சந்திக்கிற இடம்.....
சண்முகம் நாதஷ்வரம் வாசிச்சிகிட்டு இருக்கறப்ப, மோகனா வண்டி-ல வந்து இறங்கினதும் தன் தம்பிக்கிட்டயும், பாலையா கிட்டயும் கண்ணாலயே ஜாடை காட்டிடு மறுபடியும் வாசிக்கிற காட்சி...,

Trainல இரண்டு கோஷ்டியும் போறப்ப இவுங்க இரண்டு பேரு கண்கள் மட்டும் மணிகணக்கா பேசுமே அந்த காட்சி...

...இப்படி சொல்லிகிட்டே போகலாம்.


அருமையான நடிப்பு, ஆழத்தமான கதை, அழகான திரைக்கதை, மனதை வருடும் இசை, எத்தனை ஆண்டுகளனாலும் கேட்க ஆவலை துண்டும் பாடல்கள்....


மூணு மணி நேரமே போறதே தெரியாது.
ம்ம்ம்....இனிமேல் இப்படி ஒரு படம்தான் வருமா?


பிகு:

1. இந்தப்படம் 1968-ல வந்தது-னு அப்பா சொன்னதா <>பகம்.

2. "மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன..." இந்த்ப் பாட்டிற்கு பத்மினி நடனமாடுறப்ப, அவர் மூன்று மாதம் கர்ப்பிணி என்று என் தோழி சொன்னாள். உண்மையா என்று தெரிய வில்லை?

0 மறுமொழிகள்: