Pages

நண்டு

ஒலிம்பிக் போட்டியை பார்க்கும்பொழுது 'பெரு மூச்சை ' தவிர்க்கமுடியவில்லை!  முதல் நாளின் போது, 120 கோடி மக்கள்தொகை, இன்னும் சில வருடங்களில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் வகிக்க போகும் நம்மிடமிருந்து வெறும் 57 பேர்தான் அனுப்ப முடிகிறது. 50,000 மற்றும் 1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடெல்லாம் 10 பேரும், 30 பேரும் அனுப்பும்பொழுது,  'நமக்கு என்ன வந்தது? எத்தனை நாளைக்குதான் இப்படினு...' ஒரு விரக்தியும் 'கொஞ்ச நேரத்துக்கு'  வருத்தமும் வந்துட்டு போகுது.

Beach Volleyball, நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ்,குத்துச்சண்டை....  போட்டிகளைலாம் பார்க்கும்பொழுது  இவுங்களைவிட நம்ம மக்கள் சூப்பரா பண்ணுவாங்களேனு ஆதங்கம்தான் வருது.

தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து முறையாக பயிற்சி அளித்தால் கண்டிப்பாக 2020 ஒலிம்பிக்கில் அதிக தங்கங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம்.  ஆனால் எந்த தொலைநோக்குப் பார்வைகளும் இல்லாமல் ... ஒரு தங்கம் வாங்கின உடனே 'கோடிகளையும்',  'வாழ்நாள் முழுவதும் ரயில்வேயில் இலவச பாஸ்'  என அறிவிப்பும் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது.  இதுதான் நமது  தரமா?  அபினவ் பிந்த்ரா ஒரு CEO. அவருக்கு எதுக்கையா இலவச பாஸ்....  இதற்குப் பதிலாக அவருடைய பயிற்சிக்கு ஆகும் தொகையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளலாம்... இல்லை பல 'அபினவ் பிந்த்ரா'க்களை உருவாக்குவதற்கு எண்ண செய்யலாம் என்று யோசனையாவது பண்ணலாம்!

பள்ளி, கல்லூரி, மாவட்ட, மாநில அளவில் சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சத்தான உணவு, நல்ல பயிற்சியாளர்கள்,  சேஷன் மாதிரி ஒரு தலைவரை விளையாட்டுத் துறைக்கு தலைவராக்கி அதற்கு அதிகம் தொகையை ஒதுக்கி ..... என ஒரு செயல்திட்டம் கொண்டு வந்தால் நம்மாலும் 2020 ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் போட்டியாக வரமுடியும்.

அரசியலும், EGOவும் புகுந்து நமது ஹாக்கி அணி படும்பாடு நமக்கெல்லாம் தெரிந்ததுதான். IPL மாதிரி ஹாக்கி விளையாட்டுக்கும் நடத்த முடியாதான்னா.....கேட்டால் பணம், மக்கள் ஆர்வமின்மை ஒரு பெரிய பட்டியல் நம்மிடமுண்டு.

இந்தியர்கள் ஒவ்வொருவரும் தனிதனியே நல்ல திறமைசாலிகள். ஒரு அணியாக இருந்து செயல்படவேண்டும் என்றால் 'நண்டு கதை'தான்!!

நாளை ஆகஸ்ட் 15!  அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

0 மறுமொழிகள்: