Pages

சிவாஜி

வலைப்பதிவில் பலர் சிவாஜியை அக்குவேற ஆணிவேறா பிரிச்சி மேய்ஞ்சிட்டாங்க...
இந்தப்படத்திற்கு கொடுத்த விளம்பரங்கள் மற்றும் சில... இந்த படத்தை தியேட்டரில் போய் பார்க்ககூடாதுகிற ஆர்வத்தை அதிகமாக்கியது. மெதுவா DVD கிடைச்சா பாத்துக்கலாம்னு எண்ணம். சமீபத்தில் இந்தப் படத்தை DVDல் பார்ததுட்டு எனக்கு தோன்றிய சில கேள்விகள்.... எனக்கு எனக்காக மட்டுமே....

1. வழக்கமா ரஜினி படத்தில் இருக்கும் விறு விறுப்பு மிஸ்ஸிங்! ரஜினி என்ன பண்ணினாலும் கேள்விகேட்ககூடாதுகிறதுக்காக அமெரிக்கா return - 200 கோடி சொத்து/சம்பாத்தியம் - கறுப்பு பணம் வெள்ளை பணமா மாத்திறது - தமிழ்செல்வியின் பாடல் காட்சிகள் ...இதலாம் ரொம்ப ஓவர். அது ஏன் தமிழ்செல்வினு பேரு...இதே மாதிரிதான் அருணாச்சலத்திலும் (வேதவள்ளி) படையாப்பாவிலும்.. தமிழ்பற்றோ?

2. நயன் தாரா நடிகை.... அது அவர்களுடைய தொழில். ஆனால் தமிழ்செல்வி அப்பாவா பேராசிரியர் ராஜா எதுக்கு? வேற நடி்கர்களே இல்லையா?

3. சங்கவை, அங்கவை அப்பாவாக பேராசிரியர் சாலமன் பாப்பையா. 'பழகலாம் வாங்கனு' காமெடியாம்!? இது காமெடினு வச்சிகிட்டாலும் அதுக்கு எதுக்கு சாலமன் பாப்பையா? கவுண்டமணியோ.. செந்திலோ போதாதா?

4. "பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்" எழுத்தாளர் சுஜாதாவின் வசனம்......மக்களோட பல்ஸ்யை நல்லாவே தெரிஞ்சி வைச்சிருக்காரு....(ரூம் போட்டு யோசிப்பாங்களோ!....)

5. இயக்குநர்... 'காதல்', 'வெயில்' தயாரிப்பாளார் சங்கர். ஒவ்வொரு படத்திலேயும் அவருடைய அபத்தங்கள் அதிகமாயிகிட்டே இருக்கு? ["காதலனி"ல் அப்பாவே மகளின் கற்பை சந்தேகப்பட்டு டாக்டரிடம் சோதனை செய்ய சொல்வதில் இருந்து ஆரம்பம்...]

6. கறுப்பு பணத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப விவேக் கேட்கும் உதவியில் அது ஏன் ஒரு மதத்தின் அடையாளம்?

7. AVM நிறுவனம்... "உயர்ந்த மனிதன்" மாதிரி படங்கள் தந்த அதே AVMமா? அந்த காலத்தில 'AVM' தயாரிப்பினா குடும்பத்தோட பார்க்கலாம்..முத்திரை பதிக்கும் படங்களா இருக்கும்னு ஒரு நம்பிக்கை இருந்தது..அது அந்த காலம்..நம்ம அம்மா, அப்பாலாம் கொடுத்து வைச்சவங்க...

இந்தப்படைத்தை பார்க்க மு.க, ஜெ. ப.சி. சந்திரபாபு நாயுடு ஆர்வமாக இருந்ததாகவும் இவுங்களுக்கெல்லாம் தனித்தனியா படத்தை போட்டு காண்பிச்சிருக்காங்க.... நமக்குதான் வேலை வெட்டி இல்லை... நம்ம முதல்வருக்கும், நிதி அமைச்சருக்குமா.... அட கடவுளே!!

ம்ம்ம்...இது ஒரு தேவையில்லாத பதிவுதான்.

7 மறுமொழிகள்:

  1. said...

    //"பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்" எழுத்தாளர் சுஜாதாவின் வசனம்//

    இந்த வசனத்த நம்ம Action King ஏற்கனவே "கிரி"ல பேசிட்டாரு.. இது சுஜாதாவோட வசனம்லாம் கிடையாது...

  2. said...

    why is this after 175 days?

    and aren't you pointing out the same thing the others pointed out earlier (may be 170days ago)????

    and you are blaming Sujatha and Shankar....

    smart-ass (that is me)

  3. said...

    எனக்கும் ரெண்டு சந்தேகங்கள் இருக்கு இங்கேயே கேட்டுக்கவா?

    1. தாவணி போட்டத் தமிழ்ச்செல்வி கனவுக் காட்சிகளில்(???) எதுக்கு ஒரேடியா இப்படி ***** போட்டுட்டு ஆடறாங்க?

    2. இந்தப் படத்தில் நயந்தாரா எங்கே எப்ப வர்றாங்க? சிவாஜிக்கு அம்மா வேடமா?

  4. said...

    இந்தப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்கும் எண்ணமே இல்லை..

    வேற ஒரு பதிவை தமிழ்மணத்தில் இணைக்கபோய் இதுவும் சேர்ந்துவிட்டது.

    டீச்சர்,

    நீங்களும் இந்தப்படத்தை இப்பதான் பாத்தீங்களா?

    1) அதான் நீங்களே சொல்லீட்டீங்களே.. 'கனவுக்காட்சி'னுஅதான் 'அப்படி'!!

    2) வடிவுக்கரசிய நயந்தாரானு சொன்னீங்கனா... வடிவுக்கரசிய எப்படி சொல்லுவீங்க??!

  5. said...

    இணைக்க எண்ணமில்லைன்னு இணைச்சிட்டீங்க... அது போல காவிரியை இணைக்கும் எண்ணம் ஏதாச்சும் உண்டா? ;-)

  6. said...

    //ஆனால் தமிழ்செல்வி அப்பாவா பேராசிரியர் ராஜா எதுக்கு? வேற நடி்கர்களே இல்லையா?
    //

    ஏங்க உங்களுக்கு இந்த கொல வெறி? டாக்டர் நடிக்க வந்தப்போ ஒன்னும் சொல்லாத நீங்க... பேராசிரியர் வந்தப்போ மட்டும்... ம்ம்ம்ம்... ஓரவஞ்சனை.

  7. said...

    //ம்ம்ம்...இது ஒரு தேவையில்லாத பதிவுதான்.
    //

    இதை தான் கள்ளன் முந்துறதுக்கு முன்னே காப்பான் முந்தனுமின்னு சொல்லுவாங்களோ? ;-)