Pages

கல்லூரி - II

கல்லூரி - I

நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பஜ்ஜி, சொஜ்ஜி, சூடான காபிக்கு பின்..... கலந்துரையாடல் தொடர்ந்தது...கொஞ்சம் 'காரமாகவே' ...

160 வருடம் பழமைவாய்ந்த ஒரு கல்லூரி......

ஒரு காலத்தில் தொழில்ஙட்ப கல்லூரிகளில் மட்டுமே இருந்த MCA போன்ற வகுப்புகள் முதல்முறையாக கலைக்கல்லூரியில் ஆரம்பித்த பெருமை தூயவளனார் கல்லூரிக்கு உண்டு.

எப்படி LIBA ஆரம்பித்த சில வருடங்களில் அதன் தரம் உயர்ந்து இப்பொழுது 'டாப் 10' ல் இருக்கிறது. ஆனால் தூயவளனார் கல்லூரியின் கணிப்பொறி பாடத்திட்டங்கள் மற்றும் இன்னும் பல துறைகளின் செயல்பாடுகள் 'கவலைக்கிடமாக' இருப்பதன் காரணம் என்ன.....?

கல்லூரியின் கடைசி வருடம் அல்லது படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தவுடனாவது அடுத்து என்ன பண்ணலாம்கிற தெளிவை அந்த மாணவ/மாணவிக்கு கல்லூரியால் கொடுக்க முடியவில்லையே.....ஏன்....??

முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இதுவரை ஒரு துறையோ...திட்டமோ ஏன் இல்லை....?

இப்படி கொஞ்சம் சூடாகவே திசை திரும்பியது....

இதற்கு சேசு சபையின் திட்டங்கள், கொள்கைகள்னு எளிதாக புறந்தள்ளிவிடக் கூடியவைகள் அல்ல...

அனைவரும் ஒருமித்த கருத்தாக சொன்னது.......
  • Active Carrier Guidance, student counseling/counsellors ...
  • More seminars, motivational speakers & industrial exposure
  • Planned campus interviews & get sponsorship
  • Improve communication/contacts between Alumi & College/School

* இதற்கு 'பிள்ளையார் சுழியாக ' முன்னாள் மாணவர்களுக்கென்று ஒரு துறை ஆரம்பித்தல்....

MIT போன்ற கல்லூரிகளில் இருப்பதுபோல ஒவ்வொரு (முன்னாள்) மாணவ/மாணவிகளுக்கென்று ஓர் எண் (Numbering System). உதாரணத்திற்கு 95CS12345 என்றால் எந்த வருடம் முடித்தவர், எந்த துறை மற்றும் அவரது வகுப்பு எண் அந்த கல்லூரியில் படித்தவர்களால் கண்டு கொள்ளமுடியும்.

டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் MITயின் அவருடைய எண்ணை குறிப்பிட்டால் MITல் படித்த எவரும் எளிதாக அவர்களுடைய சீனியர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

* இளங்கலை வகுப்புகளின் பாடத்திட்டங்கள் மற்றும் கண்டிப்பு OK... ஆனால் அதைபோல் முதுகலை வகுப்புகளிலும் இருப்பது .... உதாரணத்துக்கு .. (இதை நம்பிதான் ஆகணும்....) வகுப்பில் படிக்கும் பையனோ அல்லது பொண்ணோ கல்லூரி வளாகத்திலோ அல்லது வெளியவோ 'கடலை' போடுவது தெரியவந்தால் துறை தலைவரிடம் 'விளக்கம்' சொல்லும் அளவுக்கு சீரியசான matter....... !!

* பழைய மாணவ/மாணவிகள் நல்ல நிலையில், உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ seminar, campus interview, indutrial expert speakers போன்ற ஏதாவதொரு வகையில் 'திருப்பி தர' நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள ஒருவரை நியமித்தல்...

* (Atleast) முதுகலை மாணவ/மாணவிகளையாவது inter-college competition, paper presentation போன்றவைகளில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் உற்சாகப்படுத்துதல்...

* வலைதளம், மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருத்தல்..

* வருடத்திற்கு ஒரு முறையாவது இப்படியானதொரு கலந்துரையாடலில் கலந்து கொள்வது... அதை கல்லூரிக்கு தெரிவிப்பது.....

இப்படி சில ஆக்கபூர்வமான எண்ணங்களாக எதிரொலித்தது.

Photo sessionனோடு இனிதே நிறைவுற்றது.

இங்கு ஒன்றை குறிப்பிடவேண்டும். எந்தவொரு திட்டத்திற்கும் காசு தேவை. ஆனால் சேசு சபை நிறுவனங்களில் கல்வி கட்டணம் மிகக்குறைவு. புது கட்டிடம் அது இதுவென்று எந்த கட்டணமும் வாங்க மாட்டார்கள். பெரிய நிறுவனங்களில் இருந்தும் sponsorship வாங்க மாட்டார்கள். இந்த sponsorship பற்றி கொஞ்சம் பரிசீலனை செய்யலாம்!

ஜூன் 2007ல் தூய வளனார் கல்லூரி, திருச்சி என்றதொரு (கூகிள்) குழுமம் ஆரம்பித்துள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு josephites_trichy@googlegroups.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்

குழுமத்தின் மூலம் இதுவரைவந்துள்ள newsletters இங்கே..

சேசு சபை நிறுவனங்களில் படித்த நண்பர்களின் பெயரை இங்கு இணைக்க/தொகுக்க எண்ணம்...

எனக்கு தெரிந்தவரை இங்கு பட்டியல் இடுகின்றேன்.... உங்களுக்கு தெரிந்தவர்களையும் சொல்லுங்கள்.
(விருப்பமில்லையென்றால் தெரிவிக்கவும்....... )

1. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம்
2. எழுத்தாளர் சுஜாதா
3. வை.கோ
4. சுப்பு ரத்தினம் ஐயா, தஞ்சை
5. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்
6. சகாதேவன் ஐயா, பாளையங்கோட்டை
7. ஜோ
8. ஜான் பீட்டர் பெனடிக்

....... வளரும்

0 மறுமொழிகள்: