Pages

சினிமா: தமிழ், ஸ்பானிஷ் மற்றும் சில

Volver (to return) -- ஒரு திகில் படத்துக்கான எல்லா சாத்தியகூறுகள் இருந்தும் ....... இந்தப் படம் வேறொரு தடத்தில் பயணிக்கிறது.

வாழ்க்கையின் (பெண்களுக்கான) சில கொடுமைகளையும் அவலங்களையும் கடந்து .... ஆண்கள் இல்லாத 'உலகில்' அவர்களால் தங்களுக்கென்று விருப்பமான ஒரு வாழ்க்கையை வாழமுடியும் என்பதை பதிவு செய்கின்றது.

கொலை, பாலியல் வன்முறைகள்.... என்று கதைகளம் பின்னப்பட்டாலும் கதாபாத்திரங்களில் அதிர்ச்சியோ அல்லது கதை முழுவதும் சோகமோ இல்லாமல் இருப்பது படத்தின் சிறப்பு. வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மையும் மீறி நடக்கும் பொழுது அதன்வழி சென்று தங்களுடைய இயல்பில் வாழும் கதாபாத்திரங்கள் படத்தின் மற்றொரு சிறப்பு. அதையே பார்ப்பவர்களுக்கும் உணர்த்துவது ... ம்ம்ம்.... அதுதான் இயக்குநரின் வெற்றி [Pedro Almodóvar] !

@

ஒன்பது ரூபாய் நோட்டு -- நாவலை படித்துவிட்டு படம் பார்ப்பதில்தான் எவ்வளவு வேறுபாடு. படிக்கும்பொழுதே சத்தியராஜ்ம், அர்ச்சனாவும் வந்துவிட்டு போவது தவிர்க்கமுடியவில்லை.

நாவலைவிட பல விடயங்களை படத்தில் அழகாகவும், யதார்த்தமாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் சொன்னதற்கு தங்கர்பச்சானுக்கு வாழ்த்துக்கள். நமது கலாச்சாரம், மண்ணின் மணம் , அந்த மண்ணின் வாழும் மனிதர்களின் இயல்பான வாழ்க்கை முறை என படத்தில் இரசிப்பதற்கு பல விடயங்கள்......

இந்தப் படத்தின் நீதி .... வறட்டு கவுரம், பிடிவாதம் இதலாம் விட்டுக் கொடுக்காம இருக்கணும் என்பதா? அல்லது அதலாம் இருந்தா இதுதான் நிலமை.... அப்படினு எடுத்துகிறதா.... என்பது போன்ற கேள்விகள் எல்லாம் படம் பார்ப்பவர்களைப் பொறுத்து......

இதையெல்லாம் மீறி...... மாதவர் படையாட்சி போல் ஒருவரை பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம் அல்லது நம் வாழ்க்கையில் கடந்து வந்து இருக்கலாம். கிராமங்களுக்கு சென்றால் மாதவரைப்போல நம்மிடையே சிலருண்டு..... அப்படி ஒரு பதிவாகதான் இதை பார்க்கமுடிகிறது.

கதாபாத்திரங்களை சரியாக தேர்வு செய்தாலே படத்தின் பாதி வெற்றி என்பது போல கதாபாத்திரங்களின் தேர்வு கச்சிதம். அர்ச்சனா சில இடங்களில் கத்தல் அதிகமாக இருந்தாலும், சத்தியராஜ்க்கு சரியான போட்டி.

சத்தியராஜ்க்கு இந்த வருடம் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு அதிகம்!!

பல வருடங்களுக்கு முன் எழுதின நாவலை படத்திற்காக சிலதை மாத்தி இருக்கிறார் (நாசர் - ரோகினி காட்சிகள்...).

தங்கரின் பேட்டி (தமிழன், பிட்சா...) என்று சில வெறுப்பேற்றினாலும்..... இது மாதிரி படைப்புக்காக அதையெல்லாம் மறந்துடலாம்!

@

அஞ்சாதே -- டைட்டில் போடும் பொழுது படத்திற்குப் பின் இருக்கும் கலைஞர்களை முதலில் போட்டுவிட்டு நடிகர்/ நடிகைகள் பெயர்கள் கடைசியாக வரும் பொழுது ....... 'அட' !!

படத்தின் முதல் காட்சியில் 'காமிரா விளையாடும் விதம்' இது கொஞ்சம் வித்தியாசமதான் இருக்கும்போல என்ற எண்ணம் அதிகமாகிறது.

ஒரு 'தமிழ் படத்திற்கு' தேவையான எல்லா குணாம்சங்களும் இருக்கும் கதைகளம்தான். திகில் படமாகவும் எடுத்திருக்கலாம்.

இரண்டு கதாநாயகர்கள் - நரேன் & அஜ்மல், கதாநாயகி (விஜயலட்சுமி), வில்லன் [ ப்ரசன்னா (!) ], காமெடி [ பாண்டியராஜன் & குருவி கதாபாத்திரம்], குணசித்திரம் [பொன்வண்ணன்], டூயட், குத்துப்பாட்டு .... இதுவெல்லாம் இருந்தும், கதையை நாம் எதிர்பார்க்காத.... முற்றிலும் வேறொரு கோணத்தில் நகர்கிறது. கொஞ்சம் பிசகினாலும் கதை தவறாக புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பினும் மிக நேர்த்தியாக ..... கதாபாத்திரங்களை நம்மில் படறவிடுவது... அதுவும் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரங்களில்..... ம்ம்ம்...இயக்குநருக்கு பாராட்டுகள்!

காவல் துறையில் சேரும் ஆரம்ப நாட்கள், அந்த பாட்டி, ஒளிஓவியம் குறிப்பாக..... மங்கலான அந்த வெளிச்சத்தில் கால்களை மட்டுமே காட்டும் காமிரா (திரையரங்குகளில் இதற்கு எப்படியான response இருந்தது என்று தெரியவில்லை..), இசை..... என்று படத்தில் ஏகப்பட்ட சமாச்சராங்கள்....

ஓரிரு பாடல்களை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, கமல், (காணமால் போன) அகத்தியன், சேரன், அமீர், மிஷ்கின் ............. என்று தமிழ் சினிமாவில் இப்படி பட்டியல் பெரிதாக வேண்டும்!!?

உண்மைதமிழன் இந்த படத்திற்கு பதிவு எழுதினதாக நினைவில்லை... அப்படி அவர் எழுதும் பட்சத்தில் ஒரு 50 பக்கம் குறுநாவல் உறுதி... !! ;) அவ்வளவு விசயம் இருக்கு இந்தப்படத்தில்.......

@

'ஆஸ்கர்' வெளிச்சதிற்கு பிறகே பார்க்க வேண்டும் என்று தோன்றிய படங்கள் -- No Country For Old Men & Juno !

No Country For Old Men - க்ரைம் த்ரில்லர். சைக்கோ கதாபாத்திரம். கோயன் சகோதரர்களின் வேறந்த படங்களும் பார்த்ததில்லை. படத்தில் பாதி காட்சிகளுக்கு மேல் இசையில்லை.

'The Silence Of the Lambs' ல் Anthony Hopkins பார்த்து மிரண்டு போனது (படம் பார்த்த பின்பும்..) ஒருவகையான சைக்கோ. இந்தப் படத்தில் வருவது மற்றொரு வகை. முற்றிலும் வித்தியாசமானது. படத்தில் திடீர் திருப்பங்கள் என்று எதுவும் இல்லாமல் ஆனால் பார்ப்பவங்களுக்கு ஒரு திகிலை உண்டாக்குகிறது.

இறுதி காட்சி என்றால் அடிதடி, சண்டை அல்லது 'வீர' வசனங்கள் என்றே பழக்கப்பட்ட நமக்கு ....காவல்துறை அதிகாரி (பெல்) தன் மனைவியிடம் அவருடைய கனவைப்பற்றி சொல்லும் இறுதி வசனங்கள்...... படத்திற்கே ஒரு அழுத்ததை குடுப்பதாகவே தோணுகிறது. [இரண்டு மூன்று முறை இறுதி காட்சியைப் பார்த்த பிறகுதான் புரிந்தது என்பது என்னுடைய தனி கதை !! ]

Juno - ரொம்ப எதிர்பார்ப்புகளுடன் பார்த்த படம் என்பதால் ஏமாற்றம். இவர்களுடைய வாழ்க்கை முறைகளை கொஞ்சம் தெரிந்து கொண்டு பார்த்தால் படம் பிடிக்கலாம். இல்லையென்றால் தூக்கம் வருவதை தவிர்க்க முடியாது. படத்தில் எனக்கு பிடித்தது... அந்த இறுதி காட்சி பாடலுடன்!!

@@

0 மறுமொழிகள்: