Pages

ஜோதா அக்பர் (வரலாறு அல்ல)




* ஜோதா அக்பர்: ஓர் அழகான காதல் கதை. பல படங்களில் பார்த்ததுதான். இந்த காதலுக்கு இயக்குநர் வரலாற்று கதாபாத்திரங்களை எடுத்துள்ளார்.

* நம்ம இயக்குநருங்கனா... இரண்டு குடும்பம் - குடும்ப ஒத்துமைக்காக கல்யாணம் - வில்லன்கள் - காதலர்கள் பிரிவு, சோகம், சேர்க்கை - முடிவு 'சுபம்'. கிட்டதட்ட இதே மாதிரிதான் ஜோதா அக்பரும்...

* மொகலாய அரசர்களில் இந்தியாவில் பிறந்த முதல் அரசர் அக்பர் (1542 - 1605).

* அக்பருக்கு எழுத படிக்க தெரியாது.

* படத்தின் இயக்குநர் ஒரு பேட்டியில்... " இந்த படம் 20% வரலாறு; 80% கற்பனை"னு சொன்னதால ரொம்ப வரலாற பத்தி ஆரய தேவையில்லை.

* படத்தின் ஆரம்பத்தில் இருந்து அங்கங்கே ஒலிக்கும் அமிதாப் பச்சனின் (கம்பீர) வர்ணனை.

* படம் இரண்டாம் பானிபட் (1556) போருடன் ஆரம்பமாகிறது.

* படம் முழுவதும் ஜலால்தான். கடைசி சில காட்சிகளில்தான் 'அக்பர்' ஆகிறார்.

* ரித்திக் நடிப்பு அபாரம்; ஜஸ்வர்யா ராய் பச்சனுக்கு முகத்தில் எப்பவுமே ஒரு சோகம். வழக்கமான 'charm' missing...

* ரித்திக் நடிப்பை பார்க்கிறப்ப நம்ம விக்ரம் நினைவுதான் வருது.

* ரித்திக் - ஐஸ் chemistry ....ம்ம்ம்... நல்லாவே workout ஆயிருக்கு.

* ரகுமான் இசை (பின்னனி இசையும் A.R.ரகுமான்..!!) அசத்தல். சூஃபி பாடலும் இன்னும் இரண்டு பாடல்களும் அருமை. டிரம்ஸ்க்கு சிவமணி ... பின்னி எடுத்திக்காரு...

* விறு விறுப்பான இறுதி காட்சி இல்லனாலும்.... அந்த சண்டைக் காட்சி நல்லா எடுத்து இருக்காங்க.

* அம்மாவுக்கு நல்ல பிள்ளையா, தங்கைக்கு நல்ல அண்ணன்னா, மனைவிக்கு (ஜோதாக்கு மட்டும்தானோ?) நல்ல கணவனா, மக்களுக்கு நல்ல அரசனா இருந்த அக்பருக்கு, தன் பையன் சலீம் காதலை மட்டும் ஏத்துக்க முடியலை.. ஏன்..??

பி.கு: திரையங்களில் பார்க்கலாம்... இல்ல HD தொலைக்காட்சியில (52" !!) பார்க்கலாம். அப்பதான் அந்த கால இடங்களின் பிரம்மாண்டத்தையும், 'ஒளி ஓவியத்தை"யும், இசையும் இரசிக்கமுடியும்!!

6 மறுமொழிகள்:

  1. said...

    தென்றல்,

    பார்க்க வேண்டிய படம்னு சொல்றிங்க, ஏற்கனவே பார்க்கனும்னு நினைத்ததை உறுதிப்படுத்திட்டிங்க , கண்டிப்பாக பார்க்கணும்.

    அக்பர் ஒரு பிளே பாய் வகையறா என்று சொல்வாங்க அதுப்பற்றி எதுவும் சொல்லலையா?

  2. said...

    கண்டிப்பா (ஒரு முறை) பார்க்கலாம், வவ்வால்!


    /அக்பர் ஒரு பிளே பாய் வகையறா என்று சொல்வாங்க அதுப்பற்றி எதுவும் சொல்லலையா?/

    அக்பரை "ரொம்ப" நல்லவரா காண்பிச்சிருக்காங்க...

    இந்த கதைக்கு வரலாறு கதைபாத்திரங்களே தேவையில்லை!! ஆஷுதோஷ் கோவ்ரிகர் நம்ம ஷங்கர் மாதிரி போல...

  3. said...

    //படத்தின் இயக்குநர் ஒரு பேட்டியில்... " இந்த படம் 20% வரலாறு; 80% கற்பனை"னு சொன்னதால ரொம்ப வரலாற பத்தி ஆரய தேவையில்லை.//

    உங்கள் பதிவுக்கு முதன் முறையாக வருகிறேன்.

    ஒன்று, இரண்டு என எண்ணிக்கைப்படுத்தி உங்கள் விமரிசனங்களை அளித்த‌
    விதம் அழகாக இருக்கிறது.

    படத்தைத் தயாரித்தவர் இது 80 விழுக்காடு கற்பனை என்ற பிறகு அதில்
    சர்ச்சை ஏன் எனப் புரியவில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால்,
    கல்கி யின் சிவகாமியின் செல்வன், பார்த்திபன் கனவு ஆகியவற்றில் தோன்றும்
    பாத்திரங்களும் சரித்திரத்தில் நின்றவர்களே. ஆயினும் எழுத்தாளரின் கற்பனையும்
    சொல்லவந்ததைச் சுவைபடச் சொல்லும் திறனும் உடையதாக இருப்பதால்தானே
    நம்மை ஈர்க்கின்றன். இவற்றைச் சரித்திரம் அடிப்படையாகக் கொண்ட கதை
    சாண்டில்யன் கதைகளும் அவ்வாறே.

    //அக்பருக்கு, தன் பையன் சலீம் காதலை மட்டும் ஏத்துக்க முடியலை.. ஏன்..??//

    ஏகப்பட்ட குடும்பங்களில் இதே நிலைதான். காதல் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு
    விதம்.

    மறுமுறையும் பாராட்டுகிறேன். உங்கள் மற்ற பதிவுகளையும் பார்த்து ரசித்திட‌
    ஆவலைத் தூண்டுகிறது இந்தப் பதிவு.

    சுப்புரத்தினம்.
    தஞ்சை.
    http://arthamullaValaipathivugal.blogspot.com
    http://movieraghas.blogspot.com
    http://meenasury.googlepages.com/home

  4. said...

    அய்யா, வணக்கம்!

    சில நண்பர்களின் பதிவில் நீங்கள் சொன்ன மறு மொழியைப் படித்தபோதே 'அட... தமிழ் வலைப்பூவிற்கு ஒரு நல்வரவுதான்.. புதுவரவோனு' நினைச்சி பார்த்தா ...... ;)

    உங்கள் பெருந்தன்மையான பாராட்டுக்கு நன்றி!

  5. said...

    எப்பவும் போல பாயிண்ட் பாயிண்டா தான் சொல்லியிருக்கீங்க. :-)

    //ரித்திக் நடிப்பு அபாரம்; ஜஸ்வர்யா ராய் பச்சனுக்கு முகத்தில் எப்பவுமே ஒரு சோகம். வழக்கமான 'charm' missing...
    //
    ஒருவேளை ரித்திக் போலதொரு அழகனை, திறம்பட்ட நடிகனை மிஸ் பண்ணிட்டோமே என்ற ஏக்கமோ? ;-)

  6. said...

    வாங்கங்க!

    //ஒருவேளை ரித்திக் போலதொரு அழகனை, திறம்பட்ட நடிகனை மிஸ் பண்ணிட்டோமே என்ற ஏக்கமோ? ;-)
    //

    எதுக்கு சல்மான்,விவேக் ஓப்ராய் லாம் நினை படுத்திருங்க? ...
    ம்ம்ம்...என்ன மண்ணாங்கட்டியோ?