Pages

அரண்

ஜீன் 24, 2007 காஷ்மீரின் குப்வாரா பகுதி அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுறவிய ஐந்து தீவீரவாதிகளை தடுத்து, அந்த துப்பாக்கி சூட்டில் தன் உயிரையும் கொடுத்துள்ளார், ஜீனியர் கமிஷன் ஆபிசர் (JCO) - சுபேதார் லால் (Naib Subedar Chunni Lal). இதனால் இவர் குழுவிலுள்ள மற்ற இராணுவ வீரர்கள் உயிர் தப்பினர்.

இவருக்கு இது முதல் முறையல்ல! சியாசனின் (Siachen) 21,153 அடி (பயங்கரமான குளிர்பிரதேசம்) மேலேயுள்ள பானா பகுதியை கைப்பற்றும்போது இவரின் பங்கு மிகப் பெரியதாம்.

அசாத்திய துணிச்சல், வீரம் உள்ள இராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் வீர் சக்ரா விருதைப் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஐ.நா. அமைதி குழுவில் மூலம் சுடான் நாட்டுக்கு சென்று வந்தவர்.

சுபேதார் லாலுக்கு வயது 39. மனைவி மற்றும் 16 வயதில் மகனும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளார்கள்.

இவருக்கு "ஏதோ ஒரு வகை"யில் கடன்பட்டதாகவே நினைக்கிறேன். அதை எப்படி திருப்பி கொடுப்பது.....
குறைந்தபட்சம்..... அந்த குடும்பத்திற்கு எந்த வகையிலாவது உதவ முடியுமா என்று தெரியவில்லை....

நாளை (ஜீன் 27, 2007), ஜம்மு தோடா மாநிலத்திலுள்ள Bhaar கிராமத்தில் அவருடைய இறுதி சடங்குகள் நடக்க உள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடையவும்.... அவருடைய குடும்பத்தினருக்கு நம்முடைய மரியாதையும், தேவையான சக்தி தர பிராத்தனைகளும்...

சில மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தையை (கிணறா / பயங்கரமான பள்ளமா... நினைவில் இல்லை...?) காப்பாற்ற அரசாங்கமும், மீடியாவும் வரிந்து கட்டிக்கொண்டு வந்தது. அதற்கும்மேலாக சுபேதார் லால் குடும்பத்திற்கு செய்தால் அந்த ஆத்மாவுக்கு செய்யும் ஒரு 'சின்ன' மரியாதையாக இருக்கும். செய்வார்களா?

2 மறுமொழிகள்:

  1. said...

    மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்குது. இவரைப்போல இன்னும் எத்தனையோ ராணுவ வீரர்களுக்கு/அதிகாரிகளுக்கு ஒருவகையில் நாம் கடன்பட்டுள்ளோம் தென்றல்

  2. said...

    வாங்க, கதிரவன்!

    ம்ம்ம்...