Pages

காக்க.. காக்க...

ஏப்ரல் 26ம் தேதியுடன் நான்கு மாதம் முடிவடைகிறது. நொய்டா (நிதாரி கிராமம்) வழக்கு... அப்படின்னா....

  • இரண்டு வருடங்களில் 38 குழந்தைகள் (குறிப்பாக பெண் குழந்தைகள்) காணாமல் போகிறார்கள். அக்கிராம மக்கள் காவல்துறையிடம் முறையிடுகின்றனர். 'வழக்கம் போல்' காவல்துறை ....?!
  • மொகிர்தர் சிங் மற்றும் அவருடைய வேலையாள் சுரேந்தர் கோலி (எ) சதிஷ் குற்றவாளி என கைது செய்யப்படுகின்றனர். இதில் கோலி, ஒரு 'நெக்ரோஃபீலிக் (necrophilic)...18 பெண்களை பலாத்காரம் செய்து கொன்று, அந்த உடலுடன் அவன் செய்த செயல்கள்...மேலும் விவரங்களுக்கு, இங்கே.. (நன்றி, மங்கை!)
  • உ.பி. அரசாங்கம் 2 இலட்சம் முதல் 17 இலட்சம் வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை தருவதாக 'உறுதி' அளித்துள்ளது.
  • எதிர்கட்சி தலைவர், நிதாரி கிராமத்திற்கு சென்று 'பார்வை'யிட்டுள்ளார். பின் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மாநிலத்தில் உடனே ஜனாதிபதி ஆட்சி வரவேண்டும் என மத்திய அரசை 'தாழ்மையுடன்' கேட்டுக் கொண்டுள்ளார்.
  • உண்மை என்ன என்று கேட்டு, மக்கள் போராட்டாம் நடத்துகின்றனர். காவல்துறை 'அடிதடி' நடத்தி மக்களை விரட்டுகிறார்கள். இறுதியில் CBI 'தலையிட்டு' விசாரனை நடந்து கொண்டு இருக்கிறது.

ஏப்ரல் 16ம் தேதி, ஒரு பைத்தியக்கார மாணவனால் வெர்ஜினியாவில் மாநிலத்தில் உள்ள Vtech-ல் ஒரு கொடூர .. சோக சம்பவம்.... 32 பேர் பலியானார்கள்.

  • காவல்துறை உடனே விரைந்துவந்து தேவையான உதவிகளை செய்கிறார்கள்.
  • அங்கு நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் மக்களுக்கு பத்திரிக்கை மற்றும் மீடியா மூலம் தெரியப் படுத்தபடிகிறது.
  • அடித்த நாள் நடக்கவிருக்கும் பட்டமளிப்பு நிகழ்சியில், நாட்டின் ஜனாதிபதி கலந்து கொள்வதாக செய்தி வருகிறது. கலந்தும் கொள்கிறார்.
  • அந்த பட்டமளிப்பு நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி, மதத் தலைவர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு...... மக்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கொடுக்கின்றனர்.
  • அந்நாட்டின் தேசியக் கொடி அரைகம்பத்தில் பறக்கிறது.
  • நாடே அந்த சோகத்தை உள்வாங்குகிறது. யாருக்காக.... ? எதற்காக..?
  • பலியானவர்கள் அனைவரும் இந்த நாட்டை சேர்ந்தவர்களா? இல்லை......பின் எப்படி...?
  • இதே கொடூரம், மீண்டும் ஒரு முறை நடக்காமல் இருக்கு என்ன செய்யாலாம் என ஆய்வாளர்களும், சட்ட வல்லுனர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு கொடூர சம்பங்கள். அதற்குப்பின் நடந்த நிகழ்வுகள் முற்றிலும் வெவ்வேறானவை. ஏன் இந்த முரண்பாடு?

ஒரு அரசாங்கம் தன் மக்களை எவ்வாறு நடத்துகிறது...மதிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமா?

ஒரு குடும்பத்தில உள்ள குழந்தைகளை முதலில் அந்த பெற்றோர்கள் மதித்து நடத்தவில்லையென்றால் ... பின் அந்த குழந்தைகளை யார் மதிப்பார்கள்? அந்தக் குழந்தைகளுக்கு வீட்டின் மேல் எவ்வாறு மதிப்பு வரும்? எங்கு மரியாதை கிடைக்கிறதோ அங்கேதானே போவார்கள்? இதில் யாரை குறை சொல்வது?

'இந்த கொடூர சம்பவத்தில், உண்மைய கண்டறிய ஆளும் கட்சியுடன் நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்' என ஒரு எதிர்கட்சி தலைவரால் ஏன் கூற முடியவில்லை?

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுபவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் சொன்ன ஆறுதலும், நம்பிக்கையான செய்திகள்தான் என்ன? பாதிக்கப்பட்ட மக்கள் படித்தவர்களா? அவர்களுக்கு 'நெக்ரோஃபீலிக்' னா என்னவென்று தெரியுமா? அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். பொருளவில் மட்டுமல்ல... மனதில் ஏற்படித்திய வலி, அதிலிருந்து எப்படி வெளிவரவேண்டும் என ஆலோசனைகள் (கவுன்சிலிங்) உதவி செய்தார்களா?

ம்ம்ம்....'உதவித்தொகை அறிவித்ததா'....! அடப்பாவிகளா, அந்த விலை மதிக்கமுடியாத உயிர்களுக்கு நீங்கள் யார் விலையை தீர்மானிப்பதற்கு....? அந்த மக்கள் அதையா உங்களிடம் எதிர் பார்த்தார்கள்? இது கடைசி செய்தியாகவல்லவா வந்திருக்க வேண்டும்.

'அங்கு நடந்தவற்றை ஒரு நாடகமாக மேடை ஏற்ற அந்த கிராம குழந்தைகளை தயாராக்கி வருகிறார்கள்' என்ற செய்தியை படித்த பொழுது மனது ஏதோ செய்கிறது. இப்படிதான் இந்த செய்தியின் முக்கியதுவத்தை நமக்கு சொல்ல வேண்டி இருக்கிறது. இல்லையென்றால், அபிஷேக்-
ஐஸ்வர்யா ராய் திருமண செய்தி நமக்கு தலைப்பு செய்தியாய் இருக்குமா?

பாரதி, உனக்கும் உன் பிராத்தனைக்கும் தலைவணங்குகிறேன்!

"மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்."

4 மறுமொழிகள்:

  1. said...

    \\உண்மை நின்றிட வேண்டும்."\\

    எல்லாம் சொன்ன பாரதி ஒன்னை மறந்துட்டாரு
    "கையில் காசு வேண்டும்"....இது இல்லைன்னா இன்னைக்கு ஒன்னும் செய்ய முடியாது.

  2. said...

    \\அபிஷேக்-
    ஐஸ்வர்யா ராய் திருமண செய்தி நமக்கு தலைப்பு செய்தியாய் இருக்குமா?\\

    தலைவா இன்னைக்கு தமிழ்நாட்டுல ஒரு முக்கிய பத்திரைக்கையில் இவுங்க ரெண்டு பேர்ரோடதேன்நிலவு மேட்டரு முன்னாடி இருக்கு. அதே பத்திரிக்கையில் நம்ம விஞ்ஞானிகள் செய்த சாதனையை (அதான் இத்தாலி செயற்கைகோளை பி.எஸ்.எல்.வி சி.8 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதை) 3வது பக்கத்தில் ஒரு முலையில இருக்கு.

    இதெல்லாம் படிச்சிட்டு வேதனை தான் படவேண்டி இருக்கு. சீக்கிரம் விடிகாலம் வந்த சரி.

  3. said...

    அதான் சொல்லிருக்காறே, கோபிநாத்!

    "நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
    ....
    தனமும் இன்பமும் வேண்டும்"

  4. said...

    வாங்க, கோபிநாத்!

    /இதெல்லாம் படிச்சிட்டு வேதனை தான் படவேண்டி இருக்கு. /
    ;(