வாழ்க்கை


அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் (VTech) ஏப்ரல் 16ம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் என்றுதான் செய்தி ஆரம்பமானது.
முதலில் இந்த செய்தியை படித்தபோது... அமெரிக்காவில் இது ஒரு சம்பிராதயம் தான... வருடத்திற்கு ஒரு முறையாவது இதுமாதிரி நடக்கிறது தான எண்ணம் வந்தது. ஆனால் அந்த செய்தியின் ஆழம் தெரிய வந்தபோது மனதிற்குள் ஒரு கலவரம்...
அந்த 32 பேரில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பேராசிரியர் லோகநாதனும் (51), இந்திய மாணவியான மினாள் பஞ்சால் (20) என்பவரும் அடக்கம். இவர்கள் மற்றும் இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.... வேண்டிக் கொள்வோம்....
இருபத்தி நான்கு மணி நேரத்தில் இவர்களைச் சார்ந்த அன்பானவர்களின் வாழ்க்கை மாறிப்போனது. எதிர்பாராத இழப்புகளை ... அந்த செய்தியை உண்மையென்று நம்பவே மனதில் வலிமை வேண்டும்.
பல கனவுகளுடனும், இலட்சியங்களுடனும் கல்லூரி வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த அந்த இளம்தளிர்களின் மரணம்...
பேராசிரியர் லோகநாதன் (51) அவருக்கு 21, 19 வயதில் 2 மகள்கள். எங்கோ பிறந்து, வளர்ந்து பொருள் தேட இங்கு வந்து அவருக்கு நேர்ந்த கொடுரம்..
ரோமேனிய நாட்டைச் சேர்ந்த 73 வயது பேராசிரியர், கொலோகோஷ்ட் (Holocaust) survivor. சிறந்த Aeronautical Engineer. ஒரு பைத்தியக்காரனின் கையில் இவருடைய முடிவு...
இவர்களுக்கு ஏன் இவ்வாறு நடந்தது? எதற்கு நடந்தது? இதுபோல பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கை சில நேரங்களில் புரியாத புதிர்தான். ஆம்... அந்த புதிர்களுக்கு பதில் தெரியாமல்தான் பயணித்து கொண்டிருக்கிறோம்.
எண்ணிப்பார்த்தால், ஒவ்வொன்றிக்கும் விடைதேடி அலைய தேவையில்லை என்றுதான் தேன்றுகிறது. ஏதோ ஒன்று.... சில நிகழ்வின் மூலமாக அல்லது சக மனிதர்களின் வழியாக.... 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்று சொல்லிக் கொண்டிருக்கிறது......
பலியான ஒவ்வொரின் குடும்பத்தையும் பெரிய கடவுள் காக்கட்டும்.
வெர்ஜினியா பல்கலைக்கழகம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும். மொட்டுக்கள் மலராகும்....
'சுற்றும் வரை பூமி
சுடும் வரை நெருப்பு
போராடும் வரை மனிதன்
நீ மனிதன்'
என்ற வைரமுத்தின் வரிகள் நினைவுக்கு வந்து செல்கிறது.
2 மறுமொழிகள்:
சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்ம்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Post a Comment