Pages

வல்லவனுக்கு வல்லவன்

தற்செயலாக பழைய பாடலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனதை ஈர்க்கும் TMSன் குரல்.

பாடல் முழுவதும் கதாநாயகி கண்களில் ஏக்கத்துடன், சோகமே உருவாக தன் நாயகனை தேடி கொண்டிருந்தாள்....

அது யாராக இருக்கும் என பாடல் முடியும் வரை காத்திருந்தால்...

எப்பொழுதும் வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்டிருந்த, அசோகன். அட...!

இதுதான் அந்த பாடல் வரிகள்:

" ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிட காதலலாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்


நான் போகின்ற பாதையெல்லாம்
உந்தன் பூ முகம் காணுகின்றேன்
"

கிட்டதட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னாள் வெளிவந்த பாடல். இன்றும் மனதை வருடுகிறது.

இரண்டு மூன்று முறையாவது கேட்டிருப்பேன். ஒரு மாலை பொழுதில் இந்தப் பாடலை கேட்டால் மனதில் இனம்புரியாத ஒர் அமைதி. தற்சமயம் முணுமுணுக்கும் பாடல் இதுதான்.

இந்தப் பாடலின் ஒலி ஒளியும் இங்கே

1965 வது வருடம் வெளிவந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ்ன் 100வது படமாம். இசை: வேதா ( இவரு 'நம்ம தேவா' க்கே அண்ணனாமே... அப்படியா ?! :) )

பாடல் வரிகள் கண்ணதாசனாகத்தான் இருக்க வேண்டும்!

கதாநாயகன்: அசோகன், கதாநாயகி: மணிமாலா.

சரி... இந்தப் படத்தோட வில்லன் யாருனு யூகிக்க முடியுமா? [சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் இவரும் ஒரு முன்னனி கதாநாயகன்....!!].

8 மறுமொழிகள்:

  1. said...

    வணக்கம் தென்றல்

    வேதாவின் காபி புராணத்தைப் பக்கம் பக்கமா எழுதலாம்.
    இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன், வல்லவனுக்கு வல்லவன் ஆகியவை அடுத்தடுத்து வந்த படங்கள். ஒரு படத்தில் ஜெமினி கணேசன் வில்லனாக கூட நடித்திருப்பார்.

    அசோகன் பாடியும் இருக்கிறார். இரவும் பகலும் படத்தில் இறந்தவனை என்று ஆரம்பிக்கம் அந்தப்பாடல்.

  2. said...

    தென்றல் அருமையான பாடல் தெரிவு.
    இப்போகூட இந்தப் பாட்டு எல்லோரையும் ஈர்க்கிறது என்றால் அதிலுள்ள உருக்கமும் உண்மையும் தான் காரணமாக இருக்க வேண்டும்.

    இன்னுமொரு தடவை கேட்கக் கொடுத்ததற்கு நன்றி.

  3. said...

    சொல்ல மறந்துட்டேனே.இந்தப் படத்தில் ஜெமினிதான் வில்லனோ.
    வேதாவின் காப்பி மேற்கத்திய
    பாப் பாடல்களும் அடங்கும்.:-))

  4. said...

    /வேதாவின் காபி புராணத்தைப் பக்கம் பக்கமா எழுதலாம்.
    /

    வாங்க பிரபா, வணக்கம்! ஓ.. அப்படியா! தேவா ... வேதா இசையவே காபி அடிக்கலையே....?

  5. said...

    /இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன், வல்லவனுக்கு வல்லவன் ஆகியவை அடுத்தடுத்து வந்த படங்கள். /

    பிரபா, இதல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள்தான? பீம்சிங்கிற்கு 'ப' பட வரிசை மாதிரி மாடர்ன் தியேட்டர்ஸ்கு 'வல்லவன்' வரிசையோ?

  6. said...

    வணக்கம், அம்மா!

    /இப்போகூட இந்தப் பாட்டு எல்லோரையும் ஈர்க்கிறது என்றால் அதிலுள்ள உருக்கமும் உண்மையும் தான் காரணமாக இருக்க வேண்டும்.
    /
    சரியாக சொன்னீர்கள்!

  7. said...

    தலைவா கை கொடுங்க. இந்த பாட்டை நான் எங்க ஊருக்கு ராத்திரி பேருந்தில் போகும் போது கேட்டு கரைந்துள்ளேன்.நன்றி. ஆமா யாரு வில்லன்?

  8. said...

    வாங்க, முரளி!

    வல்லி அம்மா சொன்னதுதாங்க....
    ஜெமினி கணேசன்!!