Pages

அஞ்சலி

சர்வர் சுந்தரம் - நாகேஷ் நடித்து எனக்கு பிடித்த பல படங்களில் இதுவுமொன்று. நாகேஷ் நடிப்பு,  பாலச்சந்தர் வசனம் என்று கேஆர் விஜயா வைப்போல படம் 'பளிச்'னு இருக்கும்.

ம்ம்..வைத்தி, தருமியைத்தான் மறக்க முடியுமா?

காந்தி

காந்தி - தேசப்பிதா, இந்தியாவுக்கு விடுதலை வாங்கி தந்தவர், தேர்வில் ஐந்தோ,பத்தோ மதிப்பெண் கிடைக்கும் ஒரு முக்கிய வினா என்பதை தவிர பெரிய அபிப்பராயம் இருந்தில்லை.

பின்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரை பற்றி தெரிந்து கொள்ளும்பொழுது சில ஆச்சரியங்கள், பல அதிர்ச்சிகள்! இன்னும் கொஞ்சம் 'ஆழமாக(!)' படிக்கும்பொழுது இந்த ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் சேர்ந்து குழப்பமே அதிகமாயின தவிர புரிந்தபாடில்லை.

இளையராஜா - 1976, 1977






1976

அதிசயம் அழைக்கிறது
பாலூட்டி வளர்த்த கிளி
உறவாடும் நெஞ்சம்

1977

கவிக்குயில்
ஓடிவிளையாடு தாத்தா
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
துணையிருப்பாள் மீனாட்சி

இதில் கவிக்குயில் மட்டும்தான் கேள்விப் பட்டபடம். இந்த படங்களோட பாடல்களை கானா பிரபா அல்லது கோபிநாத் கிட்டதான் கேக்கணும்!

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?

ஒரு காலத்தில் சர்க்கரை நோயைப் பற்றிய எந்த விசயங்களும், செய்திகளும் முக்கியமாக பட்டதில்லை. 'அதிகமா இனிப்பு சாப்பிட்டா வரும். 40 வயசுக்கு அப்புறம் இனிப்ப குறைச்சிக்கிலாம். அதுக்கு இப்ப என்ன அவசரம்'  என்ற 'விசய ஞானத்தை' தவிர அதற்கு மேல் அதற்கு முக்கியதுவம் குடுத்ததில்லை. அலட்சியம்தான்..

2009 - புத்தகக் கண்காட்சி

'போனதடவை  வாங்கிய புத்தங்களே இன்னும் படிச்சி முடிக்கலை. அதலாம் படிச்சிட்டு இந்தப் புத்தகங்களை வாங்கலாமே....' வழக்கம்போல் மனைவியின் புராணம்!



புத்தகம் படிக்கிறமோ இல்லையோ வீடு முழுவதும் புத்தகமா இருக்கணும் ஒரு 'மன பிராந்தி' கல்லூரி படிக்கிற நாளிலிருந்து உண்டு.   உடுமலை இணையதளத்தில, இல்ல கிழக்கு பதிப்பகத்தில வாங்கணும் ......

போகிற போக்கில் - டிசம்பர் 24, 2009

கோபன்ஹாகனில்(டென்மார்க்)  193 நாடுகள் கலந்து கொண்ட தட்ப,வெப்ப மாநாடு எந்தவொரு 'பெரிய' உடன்பாடு இல்லாமல் முடிந்தது.  மாநாட்டின் ஆரம்பத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் 'லடாய்', மாநாட்டிற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டம், காவல்துறையின் கண்ணீர் புகை உபயோகம்.... னு இருந்தாலும், இறுதியில் 'நாட்டாமையாக'  ஒபாமா வந்து சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில்  ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்ததில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றிருக்கிறார். அந்த ஒப்பந்ததின் பிரதியின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் இங்கே!

போகிற போக்கில் - டிசம்பர் 11,2009

லேட்டா வாசிச்சாலும் லேட்டஸ்டா வாசிச்ச பதிவு வாத்தியாரின் (நம்ம தருமிதான்) கடவுள் என்றொரு மாயை ! 5 பகுதி! வழக்கம்போல் அவருடைய பதிவு யோசிக்க வைச்சது.

ஆனா இந்த ஐந்து பதிவுலேயும் நடந்த கலந்துரையாடல் அருமை!  தருமி, ஜெயபாரதன், கோவி.கண்ணன், வோட்டாண்டி தெகா,கல்வெட்டு, இளவஞ்சி ... Hats off to all!

இதில நம்ம எந்த வகைனு யோசிச்சா இளவஞ்சியோடதான் கூட்டணி!  ஏன்னா நம்ம வளர்க்கப்பட்ட முறை.....அதுல இருந்து மாறுறது கஷ்டம்தான்! யாருக்கு தெரியும்...... 'மாயை'ல இருந்து வெளியவும் வரலாம்...

எல்லாம் அவன் செயல்....!!
@
சமீபத்தில் 'ஆதவன்' பார்த்துட்டு எங்கேயாவது போய் முட்டிகிணும் தோணாத குறைதான்...20 வருசத்துக்கு முன்னாடி வந்திருக்க வேண்டிய படம்!

என்ன சந்தேகம்னா....இயக்குநர் இந்த படத்தோட கதையை(!?) சூர்யாகிட்ட எப்படி சொல்லிருப்பாரு...நினைச்சி பார்த்தாலே 'காமெடி'யா இருக்கு...

'அய்யா' நயனுக்கும் 'ஆதவன்' நயனுக்கும்தான் எவ்வளவு மாற்றம்? ஆதவன்ல பார்க்கலை சகிக்கலை!


கலைஞர் பேரன்கிட்ட காசு இருக்கு...என்ன பண்றது தெரியலை..
நம்மகிட்ட நேரம் இருக்கு...எப்படி பயன்படுத்துறதுனு தெரியலை...
@

உலகில் இருவகையான மனிதர்கள்....
    முதல் வகை, தன் அனுபவங்களை, தனக்கு ஏற்பட்ட நல்லது,கெட்டதுகளை அடுத்த தலைமுறைக்கு/அடுத்தவர்க்கு சொல்லி, 'இப்படி பண்ணினா இப்படி ஏற்படலாம் பார்த்துக்க..' அப்படினு சொல்லி தருதல்.

அடுத்த வகை, 'என் அனுபவம் எனக்கு மட்டும்! நீயே பட்டு திருந்து. இதில நான் சொல்ல என்ன இருக்கு' அப்படினு வேடிக்கை பார்ப்பது...

இதலாம், 'நம்ம சொல்றதை அடுத்தவங்க கேக்குறத பொறுத்து இருக்கு....'  அப்படினு சொல்றவங்க எந்த வகை...?!
@


சமீபத்தில் படித்தது...

Life is a string of disappointments and a bag of compromises.
@@

26/11

மும்பை - உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள நகரம்;19 மில்லியன் மக்கள்.

டிசம்பர் 6 போல,  நவம்பர் 26, 2008 ம் நமக்கு ஒரு கொடுரமான தினம் - கருப்பு தினம் -  எட்டு  இடங்களில் குண்டுவெடிப்பு - மக்கள் கும்பல் கும்பலாக இருக்கும் சத்ரபதி சிவாஜி  இரயில் நிலையம் உட்பட - 10 தீவிரவாதிகள் - 60 மணி நேர போராட்டம் - 173 பேர் பலி - 308 பேர் படுகாயம்....!!

இந்த 10 தீவிரவாதிகளில் ஒருவன் மட்டுமே உயிரோடு காவல்துறையிடம். பெயர்: முகமது அஜ்மல் அமிர் கசாப். மீதி ஒன்பது பேர் நமது காவல்துறையினரால் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத கும்பலுக்கு சராசரி வயது 25தான்.




முப்பத்தே ஏழு நாட்களில் 69 பக்கம் கொண்ட விலாவாரியன புலனாய்வு அறிக்கையை இந்தியா ஜனவரி 5, 2009 பாகிஸ்தானிடம் கொடுத்தது.

புலனாய்வு அறிக்கை - 1
புலனாய்வு அறிக்கை - 2
புலனாய்வு அறிக்கை - 3

 முகமது அஜ்மல் அமிர் கசாப் பாகிஸ்தானியே இல்லை என்று வழக்கம்போல் விதண்டவாதம் பண்ணிக் கொண்டிருந்த பாகிஸ்தான் கடைசியில் ஒத்துக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் இந்த பயங்கரவாத திட்டமே பாகிஸ்தானில்தான் தீட்டியுள்ளார்கள் என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளது.




இதைப்பற்றிய 64 நிமிட ஆவணபடம் HBOல் இன்று முதல் ஒளிபரப்பாகிறது.

 மற்றொரு சேனலான நேஷனல் ஜியாகிராபி நவம்பர் 29 & 30 ஒளிபரப்பாகிறது






12 1/2








4வது வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறையில் இருந்தது....ஒரு reference க்கு இங்க....!





மகளும், நானும்

'அப்பா, புது zoo ஒண்ணு open பண்ண போறாங்க. நம்ம போகணும்!'

'யாரும்மா சொன்னா?'

'Schoolல. Mrs.MacMohan told us in the class! '

'சரி! எங்க இருக்கு zoo? எப்ப open பண்ணுவாங்க?'

'அ...ப்....பா...! கூகிள்-ல தேடுங்க. உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை!'

'(அது சரி...!!)  கூகிள் லா! அப்படினா?'

'Dad! Googleல you get everything! Like how many plannets in the universe? What are poisonous trees in the world? But you can't findout something in Google?'

'அப்படியா...?'

'you wont' find the answer like Where is the God in the universe?'




அவளையே கொஞ்சம் நேரம் பார்த்து கொண்டிருந்தேன்!!

Paa

நடிப்பு: அபிஷேக்,வித்யா பாலன்....அறிமுகம்: அமிதாப்
ஒளிப்பதிவு: பிசி ஸ்ரீராம்
இசை: இளையராஜா



இப்படி ஒரு விளம்பரத்தை பார்த்தவுடன் இந்தி புரியவில்லையென்றாலும் சப்டைட்டிலோடு இந்தப் படத்தை பார்க்கணும் தோணிச்சி!

இதே கூட்டணியோட (ராஜா, பிசி ஸ்ரீராம், அமிதாப்....) 'சீனி கம்'  இப்படித்தான் பார்க்கபோய் ஏமாற்றம்தான் மிச்சம்! அதுவும் இளையராஜா மீது ரொம்பவே! தனது எண்பதுகளில் வந்த மெட்டுக்களை அப்படியே போட்டு ஏதோ ஒப்பேத்தி இருந்தார். ஆனால் இந்தப் படத்திற்கு அப்படியில்லாமல் புசுசா கம்போஸ் செய்யப்பட்டவையாம். பவதாரிணி, அமிதாப் லாம் பாடியிருக்காங்க!


டிசம்பர் 4 படம் ரீலிஸ்!!




ஒருபக்கம் 'பழசிராஜா', இன்னொரு பக்கம் 'பா' .... நீங்க பட்டைய கிளப்புங்க, ராஜா!!

மற்ற இணைப்புகள்:

படத்தோட இணையதளம்
டிவிட்டர்
Facebook


பாடல்கள்


அமிதாப் வலைப்பூ

கமல் 50

என்னதான் நிமிடத்திற்கு பலமுறை விஜய் தொலைக்காட்சி 'உலக நாயகன்'னு சொல்வதை கேட்க சலிப்பாக இருந்தாலும், இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த பகுதியாலவது சினிமாவில் 50 வருடங்கள் நிலைத்து நின்று, வித விதமான அவதாரங்கள் எடுத்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை!





பாலசந்தர், ரஜினிலிருந்து சந்தனு வரை அந்த மாபெரும் கலைஞனுக்கு 'புகழ்ப்பா' பாடினாலும், அவருடைய வளர்ச்சி மகத்தானது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. எத்தனை படங்களில் எத்தனை காட்சிகளுக்கு ஒத்திகை பார்த்தவர்..இந்த விழாவிற்கும் கண்டிப்பாக ஒத்திகை பார்த்திருப்பார்! உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளமல் கட்டுக்கோப்போடுதான் உட்காந்திருந்தைபோல் இருந்தது.

இருப்பினும், கவுதமியை மேடையேற்றி அவர் அருகில் உட்கார வைத்ததாகட்டும், தன் மகள் பாடிய 'நீ பார்த்த பார்வைக்கு நன்றி' என்று பாடிய பொழுதும் அவருடைய முகபாவனையும் சரி, ரஜினியுடன் தன் நட்பை பற்றிக் சவால்விடும்பொழுதும் சரி....அவருக்கு நிகர் அவர்தான்!

படங்களில் என்னதான் பக்கம் பக்கமாக பேசினாலும், சொந்தமாக இரண்டு வரிகள் பேசுவதென்பது எவ்வளவு கஷ்டகிறத சரத்குமார் போல சில பேர் பேசும் பொழுது பார்க்க முடிந்தது.  ஜெயராம் மிகவும் யதார்த்தமாக பேசியதாக இருந்தது. ராதிகா ரஜினி,கமலையை கலாய்த்ததும்  கலக்கல். மற்ற இரண்டு 'உலக நாயகர்கள்' (மம்முட்டி & மோகன்லால்) பேசியது OK!





பாலசந்தர், மம்முட்டி, மோகன்லால் போன்ற பல ஜாம்பவான்கள், பிரகாஷ்ராஜ், மிஷ்கின், பிரசன்னா வரை பலரும் அந்த விழாவில் கலந்து கொண்டிருந்தாலும், பாரதிராஜா, மணிரத்னம், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, அமிதாப், ஷாருக், ரிஷிகபூர்.... இப்படி பலபேர் வந்திருந்தால் அந்த விழா இன்னும் அபாரமாக இருந்திருக்கும்.

ஜெயமோகன்

ஜெயமோகன் வளைகுடா பகுதிக்கு வருகிறார் என்ற செய்தியை மனைவிடம் சொன்னபோது 'கண்டிப்பாக சந்திக்க வேண்டும்' என்பதே பதிலாக வந்தது. ம்ம்ம்.... வேண்டாம்னு சொன்னாலும் ஒண்ணும் பிரஜோனமில்லை நினைச்சிகிட்டு தலையாட்டி வைச்சைன்.

மனைவி போய் சந்திக்கிறதுல அர்த்தம் இருக்கு. காடு, ஏழாம் உலகம், சங்கச்சித்திரங்கள், சிறுகதைகள் தொகுப்புனு அவரோட புத்தகங்களை படிச்சிருக்காங்க. நம்ம........அவரோட இணையத்தளத்த அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் மேயரதோட சரி.. இரண்டு முறை அவரோட நாவல வாசிக்க முயற்சி பண்ணினேன். முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். இன்னும் முயற்சி பண்ணுவேன்.....;)

இதுக்கும்மேல ..பெரிய எழுத்தாளர்! நம்ம என்னத்தை அவர்கிட்ட பேசுறது....கேக்கிறதுனு  ஒரு சின்ன வெட்கம்..பயம்.

ஆகஸ்டு 30, 2009. மதியம் 3 மணிக்கு கலந்துரையாடல் மற்றும் சந்திப்பு. 2:55க்கு நானும், மனைவியும் சென்றோம். ஆனால், 2;45க்கே ஆரம்பமாயிருந்தது. கிட்டதட்ட 40 வாசகர்கள்; அதில் 5-6 பேர் பெண்கள்.

நாங்கள் போன பொழுது, 'திருவள்ளுவர் சமணராகத்தான் இருக்க முடியும்!' என்பதற்கான ஆதாரங்களை  சொல்லிக்கொண்டிருந்தார்.  அதன் தொடர்ச்சியாக சமணர் - சைவம் - வைணவம் என்று ஆன்மிகக் கடலில் மூழ்கி கொண்டிருந்தார்கள். ஓரளவுக்கு சீரியஷாக தான் இருக்கும் என்று போன எனக்கு, கண்ணை கட்டிக்கொண்டு வந்தது..! ஜெமோவும் சங்க இலக்கியங்களிலிருந்தும், திருக்குறளிலிருந்தும் சரளமாக பேசிக்கொண்டு இருக்க, வந்திருந்தவர்களும் விடவில்லை..அவருக்கு சமமாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு மலையாளம் பிடிக்கும் என்பதாலோ அவருடைய மலையாளவாடையோட தமிழ் பிடித்திருந்தது. மேடைப்பேச்சு போல் ஏற்றம் இறக்கம் இல்லாமல், அவருடைய பேச்சு ஒரே அலைவரிசைதான்!

வாசகர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் அவரிடம் தங்கு தடையின்றி, விளக்கங்கள் வந்து கொட்டுகின்றன. அதுவும் கோர்வையாக...எங்க ஆரம்பித்தாரோ அதோடு வந்து முடிச்சி போடுகிறார். ஆன்மிகம், வரலாறு, பொருளாதரம்......இப்படி நீங்கள் எதிலிருந்து கேள்விகள் கேட்டாலும்...சும்மா மேலோட்டமாக சொல்லாமல், பலவித மேற்கோள்களுடன், உதாரணங்களுடன்தான் விளக்கமளிக்கிறார்.

எந்த கேள்விகேட்டாலும் - திரைப்படத்தில் வரும் ஒரு காட்சிக்கு எப்படி பலமுறை ஒத்திகை பார்த்துவிட்டு பேசுவார்களோ அதுபோல கோர்வையாக, திட்டவட்டமாக பேசுகிறார்...இல்லை வார்த்தைகள் வந்து கொட்டுகிறது.

இந்திய, சீன, ஐரோப்பிய, அமெரிக்க வரலாறா, சமணம், வைணவம், இந்து...மத வரலாறுகளா, கலை, ஓவியம் பற்றிய கேள்விகளா, தமிழ், மலையாள சினிமாவைப்பற்றியா, பாலா, மீரா, வசந்தபாலன், லோகி....யாரைப்பற்றி கேட்டாலும்..இதை சொல்லலாமா...வேண்டாமா என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் பதில்கள் வந்து விழுகிறது.






இரண்டாவது சந்திப்பு கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 5, 2009 ஃப்ரீமாண்ட் நகரில்! அடுத்த நாள் இந்தியா கிளம்பும் முன் ஆற்றிய சொற்பொழிவு. சுமார் 100 பேர் வந்திருந்தனர்.

அருமையான, செறிவான உரை.  அது அவருடைய இணையதளத்தில் இங்கே!
அதன் தொடர்ச்சி...

முடிந்தால் இன்னொரு முறை 'இங்கிருந்து தொடங்குவோம்…' பதிவையும் படியுங்கள்!

@

தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

பாரதி தமிழ் சங்கம்
தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை

தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ் சங்கம் வரவேற்று கவுரவிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக.
நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை
இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலகம்
நேரம்: மாலை 2:00 -5:00 அனுமதி: இலவசம்
நவீனத் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய எழுத்தாளரான ஜெயமோகன் பன்முக ஆளுமை படைத்தவர். 1990 வருடம் வெளி வந்த அவரது ரப்பர் என்ற நாவல் அவர் மீது தமிழ் இலக்கிய உலகின் முழுக் கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றார். தொடர்ந்து அவரது முக்கியமான நாவலாகிய விஷ்ணு புரம் மாபெரும் வரவேற்பையும், கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்று தமிழின் முக்கியமான படைப்பானது. பின் தொடரும் நிழலின் குரல், காடு, கன்யாகுமரி, ஏழாவது உலகம், கொற்றவை ஆகிய பெரும் நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
ஜெயமோகன் தமிழ் திரைப்பட உலகத்திலும் முக்கியமான பங்களிப்பை ஆற்றி வருகிறார். அவரது ஏழாவது உலகம் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரபல இயக்குனர் பாலா இயக்கிய "நான் கடவுள்" திரைப்படத்தில் ஜெயமோகன் அவர்களின் கூரிய வசனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து திரைத்துறையில் பல படங்களிலும் ஜெயமோகன் பங்களித்து வருகிறார்.
தத்துவம், வரலாறு, பயணம், நகைச்சுவை, இலக்கியம், என்று பரந்துபட்ட தலைப்புகளில் தன் சிந்தனைகளை தனது இணைய தளமான www.jeyamohan.in மூலமாக பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.
வரும் சனிக்கிழமை, செப் 5ம் தேதி ஃப்ரீமாண்ட் நகர நூலகத்தில் திரு.ஜெயமோகன் தமிழ் இலக்கியத்திற்கும், இந்திய மரபுகளுக்கும் ஆற்றி வரும் தொண்டினைப் பாராட்டி வளைகுடாப் பகுதி தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கவுரவிக்க இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக.
Mr.Jeyamohan is an accomplished writer of several best selling novels in Tamil. As a reputed writer, Jayamohan has enriched the modern Tamil literature through his post-modernist literature, essays, fictions, translation works, non-fictions, travelogues, dramas and philosophical works. His creative works are being made into movies, his sensational fiction Ezhavathu Ulagam was made into the Tamil movie "Naan Kadavul".
Jeyamohan has written 8 novels, several of them are considered to be the classics in Tamil literature. He has penned 8 books on non-fictions including essays ranging from ancient Tamil literature to Hindu philosophies and authored one novel in Malayalam too. His erudition in Vedhas, Upanishads and Bhagvat Geetha has resulted in several books. His acclaimed novel 'Vishnupuram' revolves around the ' spiritual quest through Indian philosophical schools and also around the great architectures of ancient India. His other great novels like Rubber, Pinthodarum Nizhalin Kural, Kaadu, Ezhavathu Ulagam created rave reviews among the Tamil readers and critics alike.
He shares his thoughts, his creative works, his travel experiences, his spiritual works etc in his web site www.Jayamohan.in , an immensely popular web site among tens of thousands of Tamil readers across the world.
He has written screen plays and dialogues for many Tamil movies - Kasthuri Maan, Naan Kadavul, Angadhi Theru being some of them.
Bharathi Tamil Sangam, a Tamil cultural organization functioning in California's SanFrancisco Bay Area is honouring the author on Saturday the Sep 5th at Fremont Library Hall, Fremont. Mr.Jeyamohan will deliver a speech and answers the questions from the audience on the various topics of his expertise including but not limited to modern and classical literarute, history, Indian philosophies, arts etc. All are welcome.
Event: Honoring Tamil writer Jeyamohan and speech by Jeyamohan
Date: Saturday the 5th Sep, 2009
Time: 2PM - 5 PM
Admission: Free
Venue: Fremont Library Hall
Stevenson Blvd and Paseo Padre intersection
Fremont, CA

உப பாண்டவம்

நமது வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை,  ஏதோ ஒரு புத்தகமாய் வாசிக்கும் பொழுது நம்மையும் அறியாமல் மனதில் மறைந்து செல்லும் அந்த சின்ன சின்ன சந்தோஷங்கள், வலிகள்....

பெரிய திட்டங்கள் இல்லாமல், மனம் போன போக்கில் சோழர்கள் வாழ்ந்த இடங்கள் ,  ஒரு காலத்தில வெளிநாடு மாணவர்களலாம் படிக்க வந்த அந்த புகழ்மிக்க நாலந்தா பல்கலைக்கழகம் இப்படி பல இடங்களுக்கு  சுத்த போணும் ஆசை....

'ஆட்டோகிராப்'  மாதிரி பழைய நண்பர்களை பார்க்க போணும் என்கிற எண்ணங்கள் ........

இப்படி வாழ்வில் இருக்கும் சில உன்னதமான பக்கங்களை நினைவில் கொண்டுவருபவை  எஸ். ராமகிருஷ்ணன் எழுத்துக்கள்!

@

'பத்து பக்கம்கூட தாண்ட மாட்டீங்கனு நினைச்சேன். பரவாயில்லையே...' உப பாண்டவம் படித்து முடிச்சவுடன் மனைவி அடித்த கமெண்ட்!

நம் அனைவருக்கும் தெரிந்த மகாபாரதக் கதைதான்!

மகாபாரதக் கதையை தூர்தர்ஷன் நாட்களிலிருந்தே ஆர்வமாக பார்த்ததுண்டு. அதுவும் டைட்டிலிருந்தே நான் பார்த்த ஒரே மெகா சீரியல் இதுவாகதான் இருக்கும். இந்தியின் புண்ணியத்தினால், சனிக்கிழமையே துக்ளக்கை படித்துவிட்டு அடுத்த நாள் விதுரணரும், திருதராஷ்டனும் இப்படிதான் பேசியிருப்பார்கள் என்று மொழி பெயர்த்து கொள்வதுண்டு.






எப்பொழுதும் பாண்டவர்கள் நல்லவர்கள், கெளரவர்கள் கெட்டவர்கள் என்ற பிம்பம் கட்டப்பட்டிருந்தாலும், கதைகளில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு ஒரு பெரும் "வரலாறு" இருப்பதாலும் அதன் ஙட்பங்களிலிருந்து விலகி செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகம்.(சே...எனக்கே புரியலை.. இதுதான் 'ஆர்வக் கோளாறோ'....)

எஸ்.ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்' ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அதன் ஙட்பத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது. ஏகலைவன் - துரோணாச்சாரியார் - அர்ச்சுனன் எண்ண ஓட்டங்கள், பாண்டவர்கள் - திரெளபதி வாழ்க்கை, அஸ்தினாபுரம், இந்திர நகரங்களைப் பற்றியும் அந்த மக்களின் வாழ்க்கை முறை ..... இப்படி ஒரு பட்டியலே போடலாம். அனைத்தும் கவித்துவமாக சொல்லிய விதம் அழகு.

கெளரவர்களும், சகுனியும் பாண்டவர்களுக்கு மட்டும்தான்(!) கெட்டவர்கள். கெளரவர்களில் துரியோதனன், துச்சாதனன் தவிர மற்றவர்கள் பேரை கேள்விகூடப்பட்டதில்லை.  100 பேரின் பட்டியலே குடுத்துள்ளார். அதிலும் இவர்களின் ஒரே தங்கை, துச்சலை. இவளுக்கு பாசமிகு சகோதரர்களாகவும், கெளரவர்களில் ஒருவனான விகர்ணன் பற்றியும், மற்ற எந்தவொரு கதாபாத்திரங்களை விவரிக்கும் விதமும், சகுனி மற்றும் பீஷ்மருடைய கடைசி நாட்களில் அவனுடைய உரையாடலும் மீண்டும் ஒரு முறை வாசிக்க தூண்டுபவை.

அவர்களின் கடைசி உரையாடலிருந்து ஒரு பகுதி்....

'காந்தார அரசன் சகுனியே, நீ இரவை விடவும் சப்தமில்லாமல் நடக்கப் பழகி விட்டாய்'.

'பரிகாசம் உங்களிடமிருந்து எனை நோக்கிப் பிறப்பது இன்றல்ல பீஷ்மரே. நான் உங்களது ரதம் காந்தார நாட்டினுள் பிரவேசித்த நாளிலே அது துவங்கி விட்டதை அறிவேன். உங்கள் பரிகாசம் மிகுந்த கசப்பேறியது. '

'சகுனியே நீ எனை எப்போதுமே நெருங்கி வராதவனாகவே இருக்கிறாய். எனது பரிகாசம் உனக்கு சூட்டப்படும் வெகுமதி. அது ஒரு போதும் ஒரு துளி பொய்மையைக்கூட ஏந்துவதில்லை.'

.................................... ....................................   

.................................... ....................................   


'விதுரன் உங்களை மீற முடியாதவனாக இருந்தான். அவன் பரிதாபத்திற்குரியவன். பாண்டுவின் விதவையை நேசிப்பவன்.'

'சகுனியே நீ வெறுப்பை உமிழ்ந்தபடியிருக்கிறாய்.'

'எனது உடலில் அது மட்டுமே நிரம்பியிருக்கிறது. நாம் ஒருவரையொருவர் வெறுப்பினால் மட்டுமே நேசிக்க முடியும் போலும்.'

நிகழ்காலத்தினோடு வாழும் ஒருவனை அந்த கால நகர வீதிகளில் நடக்க விட்டு, பாண்டவர்களுடனும், கெளரவர்களுடனும் உலவ விட்டிருப்பது அருமை! நாவல் முழுவதும் ஒரு மெலிதான சோகம்  இருப்பதை உணரமுடிகிறது.

நமக்கெல்லாம் அதிகம் தெரிந்த கர்ணனைப் பற்றி அதிகம் சொல்ல வில்லை?  இல்ல.... மகாபாரத்திலேயே கர்ணன் அதிகம் பேசப்படவில்லையா....?

இந்த நாவல் முழுவதும்  இருக்கும் எஸ். ரா வின்  உழைப்பு பிரமிப்பையே தருகிறது. 

@@

எழுதிய நாள்:  செப்டம்பர் 11, 2008

"சொல்லாததும் உண்மை" தொடரில் பிரகாஷ் ராஜ்.

இப்ப யோசிச்சா வேரைத் தேடிப் போற மாதிரிதான், சொந்த ஊரைத் தேடி ஒவ்வொருத்தரும் லீவுக்குப் போறோம்னு தோணுது. எதிர்காலம் தேடி ஓடிட்டு இருக்கிற ஒரு தலைமுறையும், எப்ப வேணாலும் எமன் ஓலைச்சீட்டு எடுத்துக்கிட்டு வந்து வாசல்படியில் நிற்கலாம்கிற கவலையோடு இருக்கிற மூத்த தலைமுறையும் சந்திச்சுக்கிற தருணம் அது.

அடுத்த தலைமுறையா வாழப் போற குழந்தைகள் சில விஷயங்களைக் கத்துக்கவும், கடந்த தலைமுறையா வாழ்ந்து முடிச்சவங்க, சில விஷயங்களைக் கத்துத் தரவும் வாய்ப்பு இருக்கிற காலம் கோடை விடுமுறைதான்.

அதைத் தவறவிடுற குழந்தைகளைப் பார்க்கும்போது ரொம்பப் பரிதாபமா இருக்கும். ‘ஏன்டா... தாத்தா& பாட்டி பார்க்க ஊருக்குப் போகலையா?’னு கேட்டா, ‘அபாகஸ் க்ளாஸ் சேர்ந்திருக்கேன் அங்கிள்’னு சொல்றான் ஒரு குழந்தை. விதவிதமான மனிதர்களையும், அவங்க வாழ்க்கையையும் பார்க்காம அதி விரைவா கணக்குப் போடக் கத்துக் கொடுக்கிற பெற்றவங்க மனநிலை நிச்சயம் மாறணும். இது அட்வைஸ் இல்லை. என் குழந்தைப் பருவ அனுபவம்.

பிழைக்கக் கத்துத் தர்றதுக்குப் பெத்தவங்க போதும். ஆனா, வாழப் பழகித் தர்றதுக்கு பெரியவங்க வேணும்.

*******
காதலும் கல்யாணமும் உரிமையாக இருக்கும்போது, வாழ்க்கை ருசியா இருக்கு. அதுவே கடமை யாகிடுச்சுன்னா, வீட்ல டி.வி, ஃப்ரிஜ், மிக்ஸி மாதிரி மனிதர்களும் பொருள்களாகிடுவாங்க.

வெட்டப்பட்டுத் துண்டாகிக் கிடக்கிற தலைகளை ஒட்டவைக்கிற வரம் கிடைச்சாலும், நம்முடைய எதிர்பார்ப்புகள் வேறொரு தலையையும், இன்னொரு உடம்பையும் விரும்பினா, உறவுகளே பாரம்தானே?

*********

பல நேரங்களில் அங்கீகாரத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று கோபப்படுகிறோம், கூச்சலிடுகிறோம். ஆனால், அங்கீகாரம் என்பது எப்படி இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறையை எவராலும் முடிவு செய்ய முடிவதே இல்லை.
இயற்கை எதற்கும் எவரிடமும் அங்கீகாரம் கேட்பதில்லை. தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு, தனது இருப்பை நியாயப்படுத்திக்கொள்வதும் இல்லை. இவை யாவையும்விட, தன் இருப்பு குறித்து ஆயிரம் வருடப் பழைமையான மரமோ, எல்லையற்று விரிந்துகிடக்கும் கடலோ, மலையோ தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. எவரது அங்கீகாரத்துக்கும் காத்தி ருப்பதும் இல்லை.
அங்கீகாரம் பெறுவதற்கான எளிய தந்திரங்கள் நடைமுறையில் உள்ள காலத்தில் இயல்பாக அது கிடைக்கக் கூடும் என்று நினைப்பவன் முட்டாளாகவே கருதப்படுகிறான். ‘பகட்டும், தற்பெருமையும், சுயதம்பட்டமும் கொண்டவர்களுக்கு மட்டும்தான் எதிர்காலம்’ என்ற கானல் தோற்றம் நம் முன்னே விரிந்துகொண்டு இருக்கிறது.

32 கேள்விகள்

நம்மையும் இந்த ஜோதியில ஐக்கியமாக அழைத்த அண்ணாத்த ஸ்ரீதர் நாராயணன் க்கு நன்றி! ;)




1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

சும்மா போகிற போக்கில நம்மலா வச்துகிட்டது. அவ்வை சண்முகியில் கமலுக்கு தோணுமே அதுமாதிரினு சொல்லலாம்.

2) கடைசியா அழுதது எப்போது?
அதலாம் வெளிய சொல்லலமா....ம்ம்ம்..இலங்கை நிகழ்வுகளிலிருந்து நேற்று பார்த்த 'பசங்க' படத்தை பார்த்துட்டு கண் கலங்கின வரை..

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பரவாயில்லமா இருக்கும்.
அதவிட என் அப்பாவின் கையெழுத்தும், என் நண்பனின் கையெழுத்தும் ரொம்ப பிடிக்கும்.
பரிட்சைலலாம் நம்ம எழுதிற முதல் இரண்டு பக்கம்தான் படிக்கிறமாதிரி இருக்கும். நண்பனோட பேப்பரை பார்த்தா முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் ஒரே மாதிரி முத்து முத்துதா இருக்கும்.

4) பிடித்த மதிய உணவு?
வெஜிடேரியன்: இரசம் சாதம் with மாங்கா ஊறுகாய்.
நான்-வெஜிடேரியன்: ஹைதராபாத் 'தம்' பிரியாணி.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கண்டிப்பா..! பாக்கதான் அப்படி இருப்பான். பழகினா ரொம்ப 'நல்லவன்'..!! ;)

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
அருவியில்! இந்த முறை இந்தியா போனபோது, குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்கலை. ;( இப்ப சீசன் அருமையாம் இருக்காம்!

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
புன்னகை, கண் ....

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: முடிந்தளவு உதவி செய்வது; உதவி செய்யறோமோ இல்லையோ உபத்திரம் செய்யாம இருக்குறது...... ;)
பிடிக்காதது: (இதுக்கே தனி சுயபுரணாம் பதிவு எழுதனுமே..!!) சுருக்கமா சொல்லணும்னா.. கேள்வி எண்:28 க்கு செல்லவும்... please!

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
பிடித்தது: அசாத்திய பொறுமை, புத்தகம் வாசிப்பு; எனக்கு தெரிந்த பாதி எழுத்தாளர்கள் மனைவியின் மூலம் அறிமுகம் ஆனவர்களே!.
பிடிக்காதது: அததான் 'கண்டுபிடிக்க' முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். (அப்பாடா.... அப்படினு பெரும்மூச்சி கேக்குதா?!)

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியா உடனே யாரும் நினைவில் வரவில்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
நீலம்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
சுதாரகுநாதனின் 'அனல் மேலே பனித்துளி...'!! இன்னும் 'வாரணம் ஆயிரம்' த்தில இருந்து வெளிய வரலை.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
பச்சை.

14) பிடித்த மணம்?
மல்லிகை, புது நோட்புக்/புத்தகத்தின் மணம்.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
அவுங்க பதிவை படிச்சி பார்த்தா நீங்களே புரிஞ்சுக்குவீங்க. இதுமாதிரி மொக்கை பதிலுக்கும் சுவாரசியமா மாத்தும் வித்தகர்கள்....

ஜோ போன தடவை இதுமாதிரி ஒரு கேள்வி-பதில் விளையாட்டுக்கு கூப்பிடா, தல வரகாணோம். அப்படியே விட்டுறோமா என்ன.....

காட்டாறு; ரொம்ப நாளா ஆளை காணோம். இப்படியாவது வருவாங்கனு நம்பிக்கைதான்!

கோபிநாத்: பட்டாம்பூச்சி விருது பெற்ற அண்ணாத்த! நம்ம எழுதிற குப்பைகளுக்கெல்லாம் பதில் போடும் நல்ல ஜூவன்! ;)

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
எளிமையாக எழுதும் அவருடைய அனைத்துப் பதிவுகளும்..

17) பிடித்த விளையாட்டு?
கால்பந்து.

18) கண்ணாடி அணிபவரா?
இல்லை.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
பராசக்தி யிலிருந்து பசங்க வரை அனைத்து படங்களும். (விசால், பேரரசு, வாசு..இப்பொழுது விஜய், அஜித் படங்கனா ரொம்பவே அலர்ஜி...!!)

20) கடைசியாகப் பார்த்த படம்?
நேத்துதான் 'பசங்க' பார்த்தேன்.

21) பிடித்த பருவ காலம் எது?
கோடைக்காலம்.... அதுவும், சிறிது தூரல் போட்டுவிட்டு மெதுவா எட்டிப்பார்க்கும் சூரிய வெளிச்சம்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
ரொம்ப நாளா வாசிக்கணும் நினைத்த வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
எப்பொழுதும் என்னுடைய மகள் படம்தான்.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்; , குழந்தைகளின் மழலைப்பேச்சு / சிரிப்பு.
பிடிக்காத சத்தம்: பேருந்துகளில் கைதொலைபேசிகளில் நம்ம காதுபக்கத்தில் பேசும் இரைச்சல் சத்தம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
வேற எங்க... 'புண்ணிய பூமி'யான அமெரிக்காதான்!!

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இருக்கானு தேடிக்கிட்டே இருக்கேன்....

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சொன்ன நேரத்துக்கு வராம இருக்குறது.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன்கோபம்..!!

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
இனிமேல்தான் கண்டுபிடிக்கணும்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
'முடியாது'னு சொல்றகூடிய நேரத்தில அப்படி சொல்ல கத்துக்கணும். பேசாம இருந்துட்டு அந்த வேலைய இழுத்து போட்டுகிட்டு பண்ற வேலைய விடணும்.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
மிஷினரிக்கு போயிடலாம்!!

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
Life is beautiful னு சொல்ல ஆசை.....but....make it beautiful!!



பி.கு: இப்படி மொக்கையா ஒரு விளையாட்டை ஆரம்பிச்சு வைச்ச அந்த 'நல்லவரு' யாருப்பா...? அப்புறம் அதென்ன 32... !!





தியானம்: கோபத்தை விலகி நின்று கவனி!

நடனம், சிரிப்பு, உடலசைவு, மூச்சுவிடுதல், மூச்சைக் கவனித்தல், ஒளியைக் கவனித்தல்....என்ன இது? ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களாக இருக்கின்றனவே என்று யோசிக்கிறீர்களா? தொடர்பில்லாத விஷயங்கள் இல்லை இவை. இவையெல்லாம் தியானப் பயிற்சிகள்.

சென்னையில் ஓúஸô சுராஜ் மெடிடேஷன் சென்டரை நடத்தும் ஸ்வாமி பரிபூரானந்த் கடந்த 24 ஆண்டுகளாக இத்துறையில் பரிச்சயம் உள்ளவர். புணேயில் உள்ள ஓஷோ கம்யூன் இன்டர்நேஷனலில் இதற்காகப் பயிற்சி பெற்றவர். இந்தத் தியானப் பயிற்சிகளைக் கடந்த 16 ஆண்டுகளாகப் பிறருக்கு அளித்து வருகிறார்.

இந்தப் பயிற்சிகளினால் என்ன நன்மை? இப்படிப்பட்ட பயிற்சிகள் எல்லாம் இந்த நவீனயுகத்தில் தேவைதானா? என்று அவரிடம் கேள்விகளை அடுக்கினோம். கொஞ்சமும் பதட்டப்படாமல் அவர் அளித்த பதில்கள் உங்கள் பார்வைக்காக....

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் மெüனம் என்று பொருள். இந்த மெüனம் நமது தாயின் கருவறையில் இருக்கும் போது நம்முடன் இருந்தது. மனிதன் பிறந்து வளர வளர இந்த மெüனம் மனிதனுக்குள் மறைந்து விடுகிறது. ஆனால் இந்த மெüனம் எல்லாருக்குள்ளும் இருக்கிறது. அது புதிதாக ஏற்படுத்தப்படுவது அல்ல. மதரீதியான காரணங்களாலும், வேலைரீதியான காரணங்களாலும், குடும்பரீதியான காரணங்களாலும் நமது மனதில் அழுத்தம் சேர்கிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக நமது மனதில் குடி கொண்டிருக்கும் மெüனத்தை நம்மால் உணர முடியவில்லை. அந்த அழுத்தங்களை வெளியேற்றி நம்முள் உறைந்திருக்கும் மெüனத்தை வெளிக் கொண்டு வருபவைதான் தியானப் பயிற்சிகள்.

மனம் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. மனதைத் தேவையான போது இயங்கவிட்டு பிற நேரங்களில் அதை நிறுத்தி வைக்க முடியும். அதற்குப் பயன்படுவது தியானப் பயிற்சிகள்.

தியானப் பயிற்சிகள் என்று சொல்கிறீர்கள். எத்தனைவிதமான தியானப் பயிற்சிகள் உள்ளன?

ஓஷோ 112 "விஞ்ஞான பைரவ தந்த்ரங்'களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ரமண மகரிஷி நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர் உடல் வேறு; உணர்வு வேறு என்று இருக்க முடிந்திருக்கிறது. ஓஷோ சொன்ன 112 தந்த்ரங்களில் இதுவும் அடங்கியிருக்கிறது. இந்த 112 தந்த்ரங்கள் எல்லாருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. நாங்கள் சொல்லித் தருபவற்றை 21 நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்து அதில் உங்களுக்குப் பொருந்திப் போகும் பயிற்சிகளை மட்டும் தொடர்ந்து மூன்று மாதம் செய்துவர வேண்டும். அதன்பின் நேரம் கிடைக்கும் போது - தோன்றிய போது செய்யலாம்.

நாங்கள் டான்ஸ், சிரிப்பு தியானம், நாதப்ரம்மம் தியானம், உடலசைவு தியானம்(குண்டலினி தியானம்), மூச்சுவிடுதல் தியானம், ஹு மந்த்ரா, மூச்சைக் கவனித்தல் போன்ற பயிற்சிகளைக் கற்றுத் தருகிறோம். ஒரு நாள் தியானப் பயிற்சி எனில் குறைந்தது 5 தியானப் பயிற்சிகளைக் கற்றுத் தருகிறோம்.

தியானப் பயிற்சிகளினால் என்ன பயன்?

இன்று வாழ்க்கையில் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. கால்சென்ட்டர் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு டென்சன் அதிகம். அவர்களுக்கு வருமானமும் அதிகம். அவர்களில் பலர் நெருக்கடிகளைச் சமாளிக்கப் போதையில் மூழ்குகிறார்கள். பல தீய பழக்கங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் டென்சனைக் குறைக்கவும், தீய பழக்கங்கள் ஏற்படாமல் தடுக்கவும் இந்தத் தியானப் பயிற்சிகள் உதவும்.

ஓஷோவின் தியானப் பயிற்சிகள் என்றில்லை. பொதுவாக எந்தத் தியானப் பயிற்சிகளும் நல்ல பலன்களைத் தரவே செய்கின்றன. நான் சொல்லும் தியானப் பயிற்சி மட்டும்தான் சரியானது என்று சொல்ல மாட்டேன். நான் சில தியானப் பயிற்சிகளைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம்.

பிற தியானப் பயிற்சிகளுக்கும் நீங்கள் தரும் தியானப் பயிற்சிகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன?

இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பிற தியானப் பயிற்சிகளில் தியானம் என்றால் அதன் மூலம் எதையாவது அடைய வேண்டும் என்று இலக்கு வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட இலக்கு எதுவும் எங்களின் பயிற்சியில் இல்லை. புதிதாக அடைய எதுவும் இல்லை. ஏற்கெனவே மனிதனுக்குள் இருக்கிற மெüனத்தை மனிதனுக்கு ஞாபகப்படுத்துவதுதான் இந்த தியானப் பயிற்சிகள். இந்தப் பயிற்சிகள் மனிதனுக்குள்ளிருக்கும் தேவையில்லாத அழுத்தங்களை வெளியேறுகின்றன.

பிற தியானப் பயிற்சிகளில் மனிதனுக்கு எது எது பிடிக்கிறதோ அதையெல்லாம் செய்யக் கூடாது என்பார்கள். மனிதனுக்குப் பிடித்ததைச் செய்யாவிட்டால் மனிதனாக இருந்து என்ன பயன்? நம்மை வருத்திக் கொள்வது தியானமல்ல. உண்ணா நோன்பிருந்து தியானம் செய்யும் போது மனதில் உணவைப் பற்றிய எண்ணமே இருக்கும். ஏனெனில் உணவு மனிதனின் உடல் தேவை. எனவே மனிதன் தன்னை வருத்திக் கொண்டு தியானம் எதுவும் செய்யக் கூடாது.

சமூகக் காரணங்களாலும் மற்றும் பலவிதக் காரணங்களாலும் ஏற்படுகின்ற பிரச்சினைகளை நீக்குவதற்கும் அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கும் முயற்சிப்பதுதானே சரி. அதை விட்டு விட்டு அந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மனிதன் தன் மனதளவில் அந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான தியானப் பயிற்சிகளைச் செய்வது சுயநலமில்லையா? சமூகப் பொறுப்பில்லாதத் தன்மையல்லவா?

சமூகம் என்பது யார்? பல தனிமனிதர்கள் எல்லாம் சேர்ந்துதான் சமூகம் உருவாகிறது. அந்தத் தனிமனிதர்கள் தங்கள் அளவில் மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே அது சமூகத்திற்கு நன்மைதானே?

மேலும் சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அதற்கான வேலைகள் ஒருபுறம் நடக்கட்டும். அவரவருக்குரிய வகையில் அவற்றைச் செய்யட்டும்.
அந்த வேலைகளைத் தனிமனிதன் ஒருவன் சிறப்பாகச் செய்யவே இந்தத் தியானப் பயிற்சிகள் உதவும். எப்படி என்கிறீர்களா?

ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி உங்களுக்குக் கோபம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோபம் சரியானது. அதை அடக்க வேண்டியதில்லை. ஆனால் அதே சமயம் அந்தக் கோபத்தில் மூழ்கிவிடவும் வேண்டியதில்லை. அந்தக் கோபத்தை விலகி நின்று கவனிக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கோபத்தைச் சரியானபடி கையாள முடியும். அவ்வாறு சரியானபடி கையாளும்போது பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும். கோபத்தால் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படாது.

கோபம் என்றில்லை, நமது எல்லா உணர்வுகளையும் கவனிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த உணர்வையும் கட்டுப்படுத்தக் கூடாது. அதை அடக்கக் கூடாது. மாறாக அதைக் கவனிக்க வேண்டும். அதைக் கவனிக்கும் போது நல்லது கெட்டது தெரிய ஆரம்பித்துவிடும்.

கோபம் உட்பட பலவித உணர்வுகளையும் நெறிப்படுத்த முடியாத ஒரு மனிதன் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? அதற்கு எங்கள் தியானப் பயிற்சிகள் உதவும்.

மேலும் பலவிதக் காரணங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளான மனிதன் போதை போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் தடுப்பதே இந்தத் தியானப் பயிற்சிகளின் சமூகப் பங்களிப்பல்லவா?

உங்களைப் பின்பற்றினால் சமூகப் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும் என்கிறீர்களா?

எங்களைப் பின்பற்றுங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஓஷோவே தன்னை யாரும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பியது கிடையாது. "நீ நீயாக இரு' என்பதுதான் ஓஷோவின் கருத்து.

"நீ பிறரை மாதிரி இருக்க நினைக்காதே. உன்னை மாதிரி நீ இரு'' என்பதே அவர் கருத்து.


நன்றி: தினமணி கதிர்!
தினமணி கதிரில் (11/25/2007) வந்த கட்டுரை [பயிற்சி: கோபத்தை விலகி நின்று கவனி! -- ந.ஜீவா]

இந்திய பயணக் குறிப்புகள் 2009 - II

எப்பொழுதும் இந்தியா வரும்பொழுது, விமான நிலையத்தில் சாஷ்டாங்கமா விழுந்து 'தாய் மண்ணே வணக்கம்'  ரகுமான் மாதிரி பாட ஆசைதான்! ( 'சின்ன சின்ன ஆசை' பட்டியலில் இதயும் சேர்த்துக்கணும்.).

ஒவ்வொரு முறையும் போறப்ப ஏகப்பட்ட மாற்றங்கள்! பிடிச்ச விசயங்கள் இருந்தாலும்,  டாப் 5 பிடிக்காத விசயங்கள் என்னனு பார்த்தா..

1)  'சென்னை ஆட்டோகாரர்களிடம் பேசுவது எப்படி?' Dummy series ஏதும் இருந்தா அத வாங்கி படிக்கணும். வர வர நம்ம மக்கள்கிட்ட சகிப்புத்தன்மை குறைஞ்சிகிட்டே வருது.

தீவிரவாதம்கிறது என்ன....மனுசனை மனுசனை மதிக்காமல் இருப்பதுதான....!

ஆட்டோ ஓட்டுநர்கள், நடத்துனர்கள்னு ஆரம்பிச்சி கோயில், குளம்னு தொடர்ந்து, திரையங்குகள், சரவணா ஸ்டோர்ஸ் வரைக்கும் யாரும் யாரையும் மனுசனா மதிச்சி பேசுறதில்ல. குறைந்தபட்ச மரியாதகூட கிடையாது. சின்ன விசயங்களுக்கலாம் எரிந்து விழுவது, ஏமாற்றுவது.

இலட்சம் இலடசமா சம்பாதிரிக்காங்களே குடுத்தா என்னகிற மாதிரிதான் பேச்செல்லாம். எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டலாம்கிற எண்ணம்!

2) 'நானே பிரதானம்'கிற எண்ணம்! பொது இடங்களில், சக மனிதனைப்பற்றிய அக்கறை குறைந்துகொண்டே வருவது.

3) நம்ம ஊரில இருக்கிற குப்பைகள்! கோயில்கள்,   மருத்துவனை என்று குப்பை தொட்டிகளுக்கு பஞ்சம். மக்களுக்கும் அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. அரசாங்கமும் அதற்கான விழிப்புணர்வு எடுப்பதற்கான அறிகுறியும் இல்லை.

4) வார நாட்கள்னா தொலைகாட்சி மெகா தொடர்கள்,  வார இறுதி அல்லது விடுமுறையென்றால் சினிமா, சினிமா, சினிமா....!  வேற பொழுது போக்கே இல்லை.

5) உலகில் ஒரு பக்கம்,  சொந்த பிள்ளைங்க தண்ணி எடுத்து வந்து கொடுத்தாலும், மூச்சுக்கு முன்னுரு முறை நன்றி சொல்லும் மக்கள்! அதற்கு மறுபக்கம் 'சாரி', நன்றிகிற வார்த்தைகளையே மறந்த நம்மவர்கள்!


பி.கு: இந்த பட்டியலில் சாதி, மதம், ஏழ்மை, இலஞ்சம் போன்ற 'சின்ன சின்ன' விசயங்களைலாம் கணக்கில எடுத்துக்கலை!.

இந்திய பயணக் குறிப்புகள் 2009 - I

ஐந்து வாரம், ஆறு வாரம் விடுமுறைலலாம் இந்தியாவுக்கு போனது கனவாக இருக்கு. இந்த முறை இரண்டு வாரம்தான்!

* சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 'இன்டர்நெட் செக்இன்' ரொம்பவே பயனுள்ளதா இருந்தது. அந்த வரிசையில கூட்டமே இல்லை! (ஆனா சென்னைல இருந்து கிளம்பிறப்ப 'இன்டர்நெட் செக்இன்' வரிசைல பெரிய Q!!)

* Check-in luggage எடையவிட 'Hand luggage' எடையதான் கண்ணும் கருத்துமா பாக்குறாங்க. ஏழு கிலோவுக்கு மேல இருந்தா 'படுத்தி எடுத்துறானுங்க'!

* Flightல சீட்டுக்கு முன்னாடி (கொஞ்சம்) பெரிய திரை! எல்லாமே டிஜிட்டல்! பாட்டு கேக்க நமக்குன்னு 'My Favourities' பட்டியல போட்டு வைச்சுக்க வசதி. இதலாம் இந்த 12-14 நேர பயணத்திற்கு! Ipod சார்ஜ் பண்ணறதுக்குன்னு தனியா USB port!

* குழந்தைக்கான கார்ட்டூன்கள்/படங்கள் ரொம்பவே கம்மி!

* தமிழிலில் அபியும் நானும், தசாவதாரம், சரோஜா! இந்தியில ஆர்வமா பார்க்கிறமாதிரி இல்ல (ஜெனிலா நடித்த படம் இருந்தது).

* ஆங்கிலத்தில் நான் பார்க்கணும் நினைச்ச சில படங்கள் இருந்தது. The Reader, Benjamin Button, Gran Torino, Doubt, Paul Blart: Mall Cop; The Reader, Doubt பார்க்க முடிஞ்சது. Doubt - ஏமாற்றம், ஆனா Merly Streep acting amazing; 'The Reader' - விமானத்தில பார்க்ககூடிய படமல்ல. Kate Winselt க்கு ஆஸ்கார் வாங்கி குடுத்த படம். would like to watch one more time. முடிவை ஒரளவு தீர்மானிக்க முடிந்தாலும், கொஞ்ச நேரம் மனதை ஏதோ செய்த படம்.

* ஒரு தடவைக்கு மேல Vodka/Whisky....யோ கேட்டா 'ஒரு மாதியா'லாம் பாக்கிறதில்ல. ஆனா இந்த முறை 'Bloody Mary' mixing சரியில்ல.