Pages

26/11

மும்பை - உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள நகரம்;19 மில்லியன் மக்கள்.

டிசம்பர் 6 போல,  நவம்பர் 26, 2008 ம் நமக்கு ஒரு கொடுரமான தினம் - கருப்பு தினம் -  எட்டு  இடங்களில் குண்டுவெடிப்பு - மக்கள் கும்பல் கும்பலாக இருக்கும் சத்ரபதி சிவாஜி  இரயில் நிலையம் உட்பட - 10 தீவிரவாதிகள் - 60 மணி நேர போராட்டம் - 173 பேர் பலி - 308 பேர் படுகாயம்....!!

இந்த 10 தீவிரவாதிகளில் ஒருவன் மட்டுமே உயிரோடு காவல்துறையிடம். பெயர்: முகமது அஜ்மல் அமிர் கசாப். மீதி ஒன்பது பேர் நமது காவல்துறையினரால் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத கும்பலுக்கு சராசரி வயது 25தான்.




முப்பத்தே ஏழு நாட்களில் 69 பக்கம் கொண்ட விலாவாரியன புலனாய்வு அறிக்கையை இந்தியா ஜனவரி 5, 2009 பாகிஸ்தானிடம் கொடுத்தது.

புலனாய்வு அறிக்கை - 1
புலனாய்வு அறிக்கை - 2
புலனாய்வு அறிக்கை - 3

 முகமது அஜ்மல் அமிர் கசாப் பாகிஸ்தானியே இல்லை என்று வழக்கம்போல் விதண்டவாதம் பண்ணிக் கொண்டிருந்த பாகிஸ்தான் கடைசியில் ஒத்துக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் இந்த பயங்கரவாத திட்டமே பாகிஸ்தானில்தான் தீட்டியுள்ளார்கள் என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளது.




இதைப்பற்றிய 64 நிமிட ஆவணபடம் HBOல் இன்று முதல் ஒளிபரப்பாகிறது.

 மற்றொரு சேனலான நேஷனல் ஜியாகிராபி நவம்பர் 29 & 30 ஒளிபரப்பாகிறது






0 மறுமொழிகள்: