Pages

(அமெரிக்க) தேர்தல் 2008!

மகளின் பள்ளியில் இந்த வார முழுவதும் அமெரிக்க தேர்தலைப் பற்றிதான்! ஜனாதிபதினா யாரு, துணை ஜனாதிபதி, கவர்னர், செனட் னா என்ன, யாரு? அவங்க வேலை என்ன... தலைவர்னா யாரு, தலைவர்கள்னா எப்படி இருக்கணும், எப்படியான குணங்கள், நீங்க தலைவர்களுக்கிட்ட எதிர்பார்க்கிற குணம் என்ன...... இப்படியாக இருந்தது.

இறுதியாக பள்ளியில் அனைவரும் ஓட்டு போடலாம்... 'மாதிரி' தேர்தல்!

'யாருக்கும்மா ஓட்டு போட்ட?' 

'ஜான் மெகய்ன்'

'ஏன்?'

'because he is older. எங்க கிளாஸ்ல எல்லாரும் ஜான் மெகய்னுக்கு தான் போட்டோம்'

'ஆனா ஒபாமா is young. dynamic.good leader' 

'But, Older people is good.   See....  I can draw pictures, my sister can't.   You can sign. I can't. '

'Obama can do lot of things'

'may be.. ஆனா ஒபாமா brownஆ இருக்காரு!'




பின் குறிப்பு: இந்த 'மாதிரி' ஓட்டுகளை எல்லாம் கனடிக்கெட் மாநிலத்திற்கு அனுப்பி, நேற்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.

இறுதியில் மகளின் பள்ளியில் வெற்றி பெற்றது: பராக் ஒபாமா!!

பள்ளிக்கூடம்

போன வாரம், மகள் படிக்கும் பள்ளியின் வகுப்புக்கு உதவி (Helper) தேவை என்பதால்,  'நம்மாளு' போயிருந்தாங்க!

* 22 பிள்ளைகள்; 2 ஆசிரியர்கள்.

* 'Aid teacher' நம்ம ஊரு ஆயாதான்.. என்ன கொஞ்சம் Professional.....

* நாளின் ஆரம்பத்தில் 'Anything to share..news, activities' னுதான் ஆரம்பிக்கிறாங்க.

* ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் 'Star Of The Week'. எல்லாரும் அடுத்து யார் என்று ஆவலோடு இருக்கிறார்கள். 'Star Of The Week' செலக்ட் ஆகலைனா upset ஆக வேண்டாம்...... போன்ற ஆசிரியரின் முன்னுரை!

* வகுப்பில் தேர்வு நடக்கிறது. பாதி பேர்  கேள்வியை கவனித்து பதில் எழுதுகிறார்கள். 2- 3 பேர் கவனிப்பதே இல்லை. ஏதோ எழுதுகிறார்கள். தேர்வு முடிகிறது. ஒரு மாணவன் மட்டும் 'Mrs. Medal, I didn't get the question # 3. ' அவனுக்குமட்டும் மீண்டும் ஒரு முறை கேள்வி வாசிக்கப்படுகிறது. பதில் எழுதுகிறான். நினைவு வைத்து கேள்வியை கேட்டதற்காக அவனுக்கு 'appreiction silp' கிடைக்கிறது.

* தப்பு செய்தால் 'guilty' feeling வரமாதிரியோ, பயப்படுற மாதிரியோ பேசுவதில்லை.

* பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் மேல் 'பயம்' என்பது துளியும் இல்லை.

* ஆசிரியர்களுக்கு அசாத்திய பொறுமை தேவை!

~~~~~~~

"அதலாம் சரி.... பொண்ணு எந்த வகுப்பு படிக்கிறாள்?"
"KinderGarten.. ;) "

சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

1957ல் (10வயதில்) பாட்டியுடன் பார்த்த கல்யாண பரிசு என்று நினைவு. A. நாகேஷ்வரராவ் மேல் கோபமும், ஜெமினி - சரோஜா தேவி மேல் அனுதாபமும் ஏற்பட்டது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம் (அமெரிக்காவில் பார்த்த முதல் படமும் கூட)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

குசேலன் -- குப்பை!

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

ஒண்ணா..ரெண்டா..

பாசமலர் - அண்ணன் தங்கை பாசம்

கை கொடுத்த தெய்வம் - நட்பு

மகாநதி - தந்தை மகள் பாசம்

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

அப்படி ஏதுவும் நினைவில்லை...

6. தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பொம்மை, பேசும் படத்திலிருந்து எல்லா பத்திரிக்கைகளும்

7.தமிழ் சினிமா இசை?

இப்ப வர படங்கள மெலோடியஸ் இல்லை... 'கர்ணா'வில் வரும் மலரே மவுனமா..    நல்லா இருக்கும்.

மிகவும் இரசிப்பது பழைய படங்களின் இசை ... உதாராணத்திற்கு தீர்க்க சுமாங்கலி, அபூர்வ ராகங்கள்... இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கு.

 8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

உலக சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை!

இந்தியில் ஆராதனா

தெலுங்கில் சங்கராபரணம்

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஒருத்தரையும் தெரியாது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Technical side நல்லா இருக்கும்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

கண்டிப்பாக கவலைபடமாட்டேன். தமிழர்களுக்கு ஒன்றும் ஆகாது.

~~~~~~~~
ஒரு மாறுதலுக்கு, இந்த கேள்விகளை அப்பாவிடம் கேட்டால் என்ன என்று தோன்றியதன் விளைவு!

அப்பா - 38 வருட வங்கி வேலைக்குப் பின் இப்பொழுதான் ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.  'எங்கள் கல்விக்காக' பதவி உயர்வு வேண்டாம் என்று சொன்னவர்.

எம்ஜியார், சிவாஜி, எம்.ஆர்.ராதாவின் பயங்கர இரசிகர். 'பகவத்கீதையும், பைபிளும் மூலம் கற்றுக்கொண்டதைவிட எம்ஜியார், சிவாஜி படங்கள் மூலம் கற்றுக்கொண்டது அதிகம்' என்று அடிக்கடி சொல்லுவார். பழைய படங்களிலிருந்து ஒரு பாட்டோ, வசனமோ சொன்னால் அது வெளியான வருடம், நடிகர் - நடிகைகள், இசை, வசனம், ஒளிப்பதிவு, இயக்குநர் என்று 'தகவல்கள்' வந்து கொட்டும்!

அப்பா படம் பார்த்துவிட்டு வந்து கதை சொன்னால், அந்த படத்தை பார்க்க தேவையில்லை. அப்படியே காட்சி பை காட்சியாக, கேமரா ஆங்கிள் முதற்கொண்டு விளக்குவார். உதாரணத்திற்கு நினைவிற்கு வருவது 'நிறம் மாறாத பூக்கள்' !

'தில்லானா மோகனாம்பாள்' படம் எத்தனை முறை பார்த்திருப்பார் என்று அப்பாவுக்கே தெரியாது.
எத்தனை முறை 'பாசமலர்' பார்த்தாலும், பக்கத்தில் துண்டு தேவை. படம் முடியும் பொழுது கண்கள் சிவந்து போயிருக்கும்.
இதைவைத்து நாங்கள் கேலி செய்யாத நாளே இல்லை!!

ஆனால், சில படங்களை அப்பாவுடன் சேர்ந்துதான் பார்க்கவேண்டும்! அது ஒரு சுகமான அனுபவம்!!

குழந்தைகளுக்கான இணையதளங்கள்

1) சந்திரமாமா
http://www.chandamama.com/

2)  National Geographic for Kids
http://www.nationalgeographic.com/kids/

3) PBS Kids
www.pbskids.org

4) Disney Playhouse
http://atv.disney.go.com/playhouse/index.html

5)  Scholastic
www.scholastic.com/kids/

6) Nick Jr.
http://www.nick.com/games/index.jhtml

7) NASA
http://www.nasa.gov/audience/forkids/kidsclub/flash/index.html

8) Kids Health
http://kidshealth.org/kid/
 
9)  Fun activities - For Girls
http://www.missoandfriends.com/

10) Fun activities for boys and girls
http://kids.yahoo.com/

11) Houghton Mifflin Mathematics has a great sight for help with this math book.
http://www.eduplace.com
 
12) READING ROCKETS is a multimedia project offering information and resources
on how young children learn to read, why so many struggle, and how caring adults can help.
http://www.funbrain.com

13) STARFALL "Where children have fun learing to read"
Starfall.com is a free public serevice website primarily for 1st graders,
but also suitable for kindergarten and 2nd grade. An excelent site based on research at the
National Institute for Child Health abd Human Development about how children learn to read.
http://www.starfall.com

14) Get Ready to Read
http://www.getreadytoread.org

15) Natural Library of Virtual Manipulatives-
http://matti.usu.edu/nlvm/nav/vlibrary.html

16) That Quiz-Fun Math activites
http://www.thatquiz.com/

17)  White House for Kids
http://www.whitehouse.gov/kids/whlife/index.html

18) http://www.kidswebindia.com/

19) A Free online community for ages 8-15,  kids join a veirtual world to chat and play games, but
instead of fighting cyberdragons, Whyville runs for the Senate.  Write for The Whyville times and earn "clams-
-learning about about civics, art, science and economics. They partnership with NASA and the  J. Paul
Getty Museum.

http://www.whyville.net/smmk/nice

எதிரும், புதிரும்

எஸ். குருமூர்த்தி துக்ளக், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதி கொண்டிருக்கும் பொழுதே படித்ததுண்டு. RSS பற்று அதிகம் இருந்தாலும், தேசப்பற்று, பொருளாதரக் கட்டுரைகளால் அவருடைய எழுத்துகளை விரும்பி படித்ததுண்டு.

அப்படித்தான் துக்ளக்கில் வெளிவரும் "தண்ணீர் விட்டா வளர்த்தோம்" கட்டுரையும் வாசித்ததுண்டு. சமீபத்தில் படித்த "மதம் மாற்றுவதே மத நம்பிக்கையானால்..." கட்டுரையை படித்த பொழுது பெரிய ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை. ஆனால் இதுமாதிரி எழுதும்பொழுது நடுநிலையாக இரண்டு பக்கமும் ஆராய்ந்து எழுதி இருந்தால், அந்தக் கட்டுரையின்  மேல் ஒரு நம்பிக்கைதன்மை வந்திருக்கும். அப்படியில்லாமல் சிறுபான்மையினரை குறிப்பாக கிறிஸ்தவர்கள் மீது அவருக்கு இருக்கும் துவேசமே மேலோங்கி இருக்கிறது. அதைப் படிக்கும் எவருக்கும், கிறிஸ்தவர்களின் 'அராஜகமும்', 'இப்படி ஒரு மதமா?' என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் எனில் அது மிகையில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்.... மண்டைக்காடு கலவரத்தினால் 'அப்பொழுதய முதலமைச்சர் எம்ஜியார் அவர்கள் கொண்டுவர இருந்த/வேண்டிய மதமாற்ற சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்ததில் என்ன தவறு? ஏன் கிறிஸ்தவர்கள் மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என்பது அவருடைய கேள்வி.

சரி....எம்ஜியார் அவர்கள் மதமாற்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்கிற பட்சத்தில் ஒரு முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் என்ன செய்திருக்க வேண்டும்... அந்தந்த மதப் பெரியவர்கள், சட்ட நிபுணர்கள், அரசு அதிகாரிகள் என்றழைத்து ஒரு குழுவை உருவாக்கி அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கானவைகளை செய்திருந்திருக்கலாம். அப்படி இல்லாமல், காஞ்சி பெரியவரையும் அவரின் மூலம் இவரையும் அணுக வேண்டிய அவசியமென்ன?

ஒருமுறை அன்னை தெரசாவிடம் இந்து அன்பர் ஒருவர் நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறபோகிறேன் என்று சொன்னதற்கு, அன்னை அவர்கள் சொன்ன பதில் "உங்கள் மதத்திலிருந்தே நீங்கள் மக்களுக்காக தொண்டாற்ற முடியும்" என்று கூறி மதம் மாறுவதை இருக்கிறார்.

வெர்ஜினாவில் மிகப்பெரிய...பிரமாண்டமான மசூதி இருக்கிறது. தன்னை கிறிஸ்தவ நாடு என சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சில சர்ச்சுகள் கோவில்களாகவும், மசூதிகளாகவும் பயன்படுத்தப்படுவது குருமூர்த்திக்கு தெரிய நியாயமில்லைதான். யாதும் ஊரே யாவரும் கேளீர்.... எம்மதமும் சம்மதமே என்று சொல்லிக் கொள்ளும் நம் நாட்டில் ஒரு சாராரைப் பற்றிய துவேசம் மட்டும் குறையவில்லை.

இப்படியாக அவருடைய கட்டுரையிலிருந்து வரிக்கு வரி எடுத்து எதிர்வாதமும், புள்ளி விவரமும் வைக்கமுடியும். அல்லது அனானி நண்பர் கேட்டதுபோல 'நீயும், உன் மதமும் யோக்கியமானா?'னு கேள்விகளை அடுக்கலாம். ஆனால் இதை எழுத தூண்டிய காரணம் அதுவல்ல.

சர்ச்சுகள் செய்தவைகள் அனைத்தும் சரியென்னும் சொல்ல நான் மத போதகனுமல்ல. பிட்நோட்டீஸ் மூலகாகவோ, பணத்துக்காகவோ, பிரியாணிக்காவோ மதம் மாறியதில் என்ன தப்பு அப்படினு பிராச்சாரமும் பண்ணுவதும் என்னுடைய நோக்கமல்ல. அப்படி செய்வது மிகப்பெரிய தவறு. அதில் சந்தேகமில்லை. இப்படி மதமாறுதல் நான் படித்தவரை விவிலியத்தில் எங்கும் சொல்லவில்லை. சொல்லபோனால் அப்படி மதம்மாறியவர்களால் அந்த மதத்திற்கு சிறுமைதான் தவிர கண்டிப்பாக பெருமையல்ல....

குருமூர்த்தி அவர்கள் சொல்வது போல, 'மதமாற்றம் செய்வதே கிறிஸ்தவமும், கிறிஸ்தவர்களும் வேலை. அதற்கு அவர்களுக்கு கோடி கோடியாக வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுகிறது. அவர்களுடைய 'சேவை' என்ற போர்வையின் கீழ் தீட்டப்படும் திட்டம்தான் இந்த மத மாற்றம்!' என்பது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்க முயற்சி செய்துள்ளார்.

சகிப்புதன்மை, பகைவனுக்கும் அன்பு, தன் நண்பனுக்காக உயிரை கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை.... போன்ற மகத்தான வாழ்வியலை தன் வசத்திக்காக கட்டுரையாளர் மறைத்து விட்டாரா...? இல்லை விவிலயத்தில் அவருக்கு புரியவில்லையா என்று தெரியவில்லை.... அப்படி புரியாத பட்சத்தில், டி.பி.ஆர், சிறில், சேவியர் பேன்றவர்களின் வலைப்பூவில் எளிமையாக சொல்லியுள்ள பைபிள் குட்டிக்கதகள், கவிதைகள் அவருக்கு யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.

கிறிஸ்தவர்களில் கத்தோலிக்க வழிபாட்டு முறையை பின்பற்றுவர்களே அதிகம். இவர்கள் யாரும் வீடு வீடாக சென்றோ, சாப்பாடு போட்டோ கிறிஸ்துவத்திற்கு வாருங்கள் என்று சொல்பவர்கள் அல்ல.

நான் படித்த கிறிஸ்தவ கல்லூரியில் எனக்கு ஸ்ரீதர், காஜா முகமது என்று வகுப்பு தோழர்களுண்டு. எத்தயோ கிறிஸ்தவ கல்லூரிகளில் கிறிஸ்தவ மதத்தை சாரதவர்கள் துறை தலைவர்களாகவும், dean ஆகவும் இருந்ததுண்டு...இப்பொழுதும் இருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகத்தின் நோக்கம் "மதம் மாற்றுவதே" எனில், 100, 150 பராம்பரிய மிக்க அந்த நிறுவனங்கள் கிறிஸ்தவ அல்லாத மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்து கிறிஸ்தவத்திற்கு மாற்றிருக்கலாம்.  அப்படியல்லாமல், நீதிபதி இலட்சுமணன்,  திரு. அப்துல் கலாம், திரு. கோபால்சாமி (Chief Election Commisioner,  நியூடெல்லி),  சுப்பு ரத்தினம் ஐயா, தஞ்சை போன்றவர்களை நல்ல மனிதனாக இந்த சமூகத்திற்கு தந்ததிற்கு இந்த கல்வி நிறுவனங்களின் பங்கு ஒரு சிறு கடுகளாவது இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

ஒவ்வொரு மதத்திலும் குறைகள், நிறைகள் உண்டு. தன் மதத்தின் மேல் ஒருவனுக்கு மரியாதையும், பெருமையும் இருக்கலாம். ஆனால் என் மதம்தான் பெரியது என்ற அகம்பாவமும், மற்ற மதங்களை குறை சொல்லி தன் மதத்தினை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்க கூடாது.

நாம் மகாத்மாகவோ, தெரசாவோ ஆக வேண்டாம்.....முதலில் மனிதனை மனிதனாக... அவன்/அவள் குறை, நிறைகளுடன் ஏற்றுக் கொள்ளுதலும், அன்பு செய்தலையும் முதலில் கற்றுக் கொள்வோம்!!

அஞ்சலி

எப்பொழுதும் போல ஏதோ  ஒரு வலைப்பூவில் ஆரம்பித்து.... தங்களுடைய பதிவில் வந்து நின்றேன்.

வலைப்பூவே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்க, அதிர்ச்சியோடு படித்த முதல் வலைப்பூ உங்களுடையது .

பல முறை, 'இதலாம் உண்மையா இருக்க கூடாது'னு நினைக்கவைத்த முதல் வலைப்பூவும் உங்களுடையதுதான்!

உங்களின் அசாத்திய மன உறுதியும், புற்றுநோய் பற்றி குறிப்பாக மார்பக  புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பதிவுகளும், தங்களின் மேல் சக பதிவர்கள் கொண்டிருந்த அன்பும், அக்கறையையும் கண்டிப்பாக தமிழ் வலைப்பதிவுலகில்  என்றும் நிலைத்து நிற்கும்.

சக பதிவர்களின் ஒருவனாக .........
     மனமார்ந்த அனுதாபங்களும், வருத்தங்களும்...
     அம்மையாரின் ஆத்மா சாந்தி அடையவும்.....
    அவரது குடும்பத்தினாருக்கு ஆறுதலும்,
                மிக்க மனவுறுதியும் தர .....
    நமது பிராத்தனைகள்........

~~~~~~~~~~~

தொடர்புள்ள மற்ற வலைப்பூக்கள்:
    http://snapjudge.blogspot.com/2008/08/anuradha-rip-anjali.html
      http://boologathildevendiran.blogspot.com/

@

நண்டு

ஒலிம்பிக் போட்டியை பார்க்கும்பொழுது 'பெரு மூச்சை ' தவிர்க்கமுடியவில்லை!  முதல் நாளின் போது, 120 கோடி மக்கள்தொகை, இன்னும் சில வருடங்களில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் வகிக்க போகும் நம்மிடமிருந்து வெறும் 57 பேர்தான் அனுப்ப முடிகிறது. 50,000 மற்றும் 1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடெல்லாம் 10 பேரும், 30 பேரும் அனுப்பும்பொழுது,  'நமக்கு என்ன வந்தது? எத்தனை நாளைக்குதான் இப்படினு...' ஒரு விரக்தியும் 'கொஞ்ச நேரத்துக்கு'  வருத்தமும் வந்துட்டு போகுது.

Beach Volleyball, நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ்,குத்துச்சண்டை....  போட்டிகளைலாம் பார்க்கும்பொழுது  இவுங்களைவிட நம்ம மக்கள் சூப்பரா பண்ணுவாங்களேனு ஆதங்கம்தான் வருது.

தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து முறையாக பயிற்சி அளித்தால் கண்டிப்பாக 2020 ஒலிம்பிக்கில் அதிக தங்கங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம்.  ஆனால் எந்த தொலைநோக்குப் பார்வைகளும் இல்லாமல் ... ஒரு தங்கம் வாங்கின உடனே 'கோடிகளையும்',  'வாழ்நாள் முழுவதும் ரயில்வேயில் இலவச பாஸ்'  என அறிவிப்பும் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது.  இதுதான் நமது  தரமா?  அபினவ் பிந்த்ரா ஒரு CEO. அவருக்கு எதுக்கையா இலவச பாஸ்....  இதற்குப் பதிலாக அவருடைய பயிற்சிக்கு ஆகும் தொகையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளலாம்... இல்லை பல 'அபினவ் பிந்த்ரா'க்களை உருவாக்குவதற்கு எண்ண செய்யலாம் என்று யோசனையாவது பண்ணலாம்!

பள்ளி, கல்லூரி, மாவட்ட, மாநில அளவில் சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சத்தான உணவு, நல்ல பயிற்சியாளர்கள்,  சேஷன் மாதிரி ஒரு தலைவரை விளையாட்டுத் துறைக்கு தலைவராக்கி அதற்கு அதிகம் தொகையை ஒதுக்கி ..... என ஒரு செயல்திட்டம் கொண்டு வந்தால் நம்மாலும் 2020 ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் போட்டியாக வரமுடியும்.

அரசியலும், EGOவும் புகுந்து நமது ஹாக்கி அணி படும்பாடு நமக்கெல்லாம் தெரிந்ததுதான். IPL மாதிரி ஹாக்கி விளையாட்டுக்கும் நடத்த முடியாதான்னா.....கேட்டால் பணம், மக்கள் ஆர்வமின்மை ஒரு பெரிய பட்டியல் நம்மிடமுண்டு.

இந்தியர்கள் ஒவ்வொருவரும் தனிதனியே நல்ல திறமைசாலிகள். ஒரு அணியாக இருந்து செயல்படவேண்டும் என்றால் 'நண்டு கதை'தான்!!

நாளை ஆகஸ்ட் 15!  அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!