Pages

வண்ண வண்ண கோலங்கள் - I

எனக்கு தமிழ் வலைப்பூ அறிமுகமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. அதாவது வாசிக்க ஆரம்பித்து! (நானும் எழுத, கிறுக்க, CAP technology பயன்படுத்த ஆரம்பித்தது நான்கு மாதங்களுக்குப் அப்புறம்தான்!) .

இந்த ஒரு வருடத்தில், வலையுலகில் என்னை ஆச்சரியப்படுத்தியவர்களை பற்றி பதிவு செய்யலாம் என்ற எண்ணத்தில் ...... (இரண்டாவது ஆண்டும் இருந்தால் அப்பொழுதும் தொடரலாம்!)

எனக்கு முதலில் அறிமுகமானது ஜோவின் (ஜோதிகா இல்ல..நம்ம 'கடற்புறத்தான்') வலைப்பூதான். ஜோ - எங்க கல்லூரி. அவர் எழுத்தில் ... அவர் சொன்ன விசயங்கள் நேரில் பார்த்தது..அனுபவித்தது..இரசித்தது. அதனால அவருடைய பதிவை வாசிக்க ஆரம்பித்தேன். பிடித்தும் போனது!

அதிலிருந்து ஜோசப் சார், SK ஐயா, விடாது கருப்பு வலைப்பூக்கள். ஜோசஃப் சாரின், "திரும்பிப் பார்க்கிறேன்-I" SK சாரின், "பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" தொடர்களை, கல்லூரி நாட்களில் பாலகுமாரன்,வைரமுத்து மற்றும் எம்.எஸ்.உதய மூர்த்தியின் எழுத்துக்களை எந்தளவுக்கு ஆர்வமுடன் வாசித்தேனோ....அதே ஆர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன்.

அதிலிருந்துதான் தமிழ்மணம் என்றதொரு தமிழ்வலைதிரட்டி அறிமுகம். இந்த பெருங்கடலில் தள்ளிவிடப்பட்டபொழுதுதான் திக்குமுக்காடி போனேன். ஏதோ இரண்டு, மூணு பேரு எழுதாறாங்க.....சில பேர் அவுங்க எழுத்தைபத்தி கருத்துக்கள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சொல்றாங்கனு நினைத்து கொண்டிருந்த எனக்கு இந்த வலைதிரட்டி பார்த்தபொழுதுதான் ஆச்சரியமும் பிரமிப்பும் வந்தது.

துளசி 'டீச்சரின்' நியூசிலார்ந்து பதிவுகளும், மதி கந்தசாமி, சந்திரவதனா, தமிழ் நதி, செல்வநாயகியின் எழுத்தும் புது விதமான வாசிப்பு அனுபவத்தை கொடுக்க ... பல பேருடைய பதிவுகளும், கருத்து பரிமாற்றங்களும் ரொம்பவே பிடித்து போக சில நாட்கள் இந்த வாசிப்பே முழு நேர 'வேலை'யானது.

வெட்டிபயல் பதிவுகள் ஜாலி. சரி... ஒரு batchelorதான் இப்படி ஜாலியான பதிவு போடுறாருனு பார்த்தா 'குடும்ப இஸ்திரியான' கண்மணி பதிவுகள் வாசித்த பொழுது ஆச்சரியமும், தனியாக சிரித்த நாட்களும் அதிகம். கண்மணி பதிவிலிருந்து மருத்துவர் டெல்பின் அவர்களின் ஆங்கில வலைப்பூ அறிமுகம். அவருடைய கணவரும், மகனும் எங்க கல்லூரிதான் என்று தெரிய வந்தபொழுது ...ரொம்ப நெருங்கிய சொந்தங்கள் போல ஒரு உணர்வு. மாசிசாரைப் பற்றி அறிந்த பொழுது என்னையும் அறியாமல் கண்ணீர் துளிகள்.

அதுவரை நான் பார்த்த..வாசித்த வலைப்பூ பதிவர்கள் .....' சே... மக்கள் இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களா'னு நினச்சப்பதான்..தமிழ்மணத்துக்கு வந்த சோதனையா... இல்ல 'நண்டு' கதையை நினைவுப்படுத்தும் விதமா தெரியலை? சில பதிவர்களைப் பற்றிய துவேசங்கள் எல்லை மீற தமிழ் வலைப்பக்கத்திற்கு ஒரு சிறிய இடைவேளை விடலாம் என்று தோன்றியது.

0 மறுமொழிகள்: